Thursday, 28 January 2016

திரு.கு.சீனுவாசன்

என் பெயர் கு.சீனுவாசன் .(கணிதம்) D.T.Ed,M.Sc(Maths),M.A.M.Phil(Eng),B.Ed.,

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் சாலைஅகரம் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
.சி.டி.மட்டும் இல்லையென்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டி இருக்குமா? தெரியாது! கிராமப்புற ஏழை மாணவர்களின் வகுப்பறைக்கற்றலில் ஏதேனும் ஒரு மாற்றத்தை .சி.டி மூலம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும்,முயற்சிகளும் உடையவன்!
என்னுடைய கற்பித்தலானது பெரும்பாலும் ப்ரஜக்டர் மூலமே நடக்கும்.தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் மாணவர்களே செய்வார்கள்!
கரும்பலகையின் சுண்ணக் கட்டியை விட கணினியின் சுண்டெலிசுட்டியை அதிகம் பயன்படுத்துவதை விரும்புவேன்!
ஒலி,ஒளி கற்பித்தல் மாணவர்களின் மனதில் நன்கு பதிகிறது.அடிப்படை கணினி அறிவை எம்பள்ளி பிள்ளைகள் அனைவரும் அறிவர்.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கணினி பழுது நீக்குதல்,ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வார்கள்!!
என்னுடைய சொந்த செலவில் மூன்று, பள்ளி மூலம் மூன்று, மொத்தம் ஆறு மேசை கணினிகள் ,அது மட்டும் இல்லாமல் ஐந்து மடிகணினிகளும் சேர்த்து மொத்தம் பதினோரு கணினிகள் பயன்பாட்டில் உள்ளன.
எங்கள் ஒன்றிய அளவில் கணினியில் ஏற்படும் பழுதுகளை எங்கள் பள்ளிக்கு எடுத்து வந்து எங்கள் பள்ளிப் பிள்ளைகளிடமே இலவசமாக சரி செய்து எடுத்துச் சென்று விடுவார்கள்!
எங்கள் பள்ளிக்கு ப்ராட்பேண்ட் இணைப்பு உள்ளது.அதற்கு ஆகும் மாதம் 1200ரூபாய் செலவை நானும் தலைமைஆசிரியரும் சொந்த செலவில் செய்து வருகிறோம்!
COLLABORATIVE LEARNING THROUGH CONNECTING CLASS ROOM மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.எங்கள் பள்ளிப்பிளைகளின் திறமைகளை மற்றவர்கள் காணவும் அவர்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் இதை பயன்படுத்தி வருகிறோம்.
நண்பர்கள் திலீப், கருணைதாஸ், அன்பழகன், நேசமணி அடிக்கடி ஆன்லைன் வகுப்பில் தொடர்பிலிருக்கும் தோழர்கள் ஆவர்!
திருநாவலூர் ஒன்றியம் பாண்டூர், ஒலக்கூர் ஒன்றியம் ஏப்பாக்கம், மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி நடுநிலைப்பள்ளிகளும்,விழுப்புரம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், பூந்தோட்டம், முண்டியம் பாக்கம்,கீழ்ப்பெரும்பாக்கம் உயர்நிலைப்பள்ளிகளும் தொடர்பிலிருக்கும் பள்ளிகள் ஆகும்!

எங்களிடம் டிஜிடல் லைப்ரரி உள்ளது.இதுவரை தமிழக அரசால் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொடக்கக் கல்வித் துறையின் அனைத்து சிடி டிவிடிக்களும் பயன்பாட்டில் உள்ளன!
32 டிவிடிக்கள் உள்ளன!
300க்கும் மேற்பட்ட வீடியோ பாடங்கள் உள்ளன.
அஜிம் பிரேம்ஜி பவுண்டேசன் மூலம் விழுப்புரம் மாவட்ட அளவில் ஐசிடி பயிற்சி பணிமனை நடத்தியுள்ளேன்.
www.teachersofindia.org தளதில் என்னுடைய கற்றல் கற்பித்தல் தொடர்பான பதிவுகளைக் காணலாம்.
ஆறு முதல் எட்டு வகுப்பு வரை உள்ள தமிழ் மனப்பாட பகுதிகளை இராகத்தோடு பாடி ஒலி ஒளி வடிவில் எம்பள்ளி பிள்ளைகளே தயாரித்துள்ளார்கள்.
அவர்களின் படைப்புகள் youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழில் குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதுவதும், நற்சிந்தனைகளை வளர்க்கும் பாடல்களை எழுதுவதும் என் பொழுது போக்கு!
ஆங்கிலத்தில் உள்ள மனப்பாடப் பகுதிகளை தமிழ்ப்பாடலாக மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.அவற்றை என் வலைப்பூவில் www.vasanseenu.blogspot.com காணலாம்.
கணக்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எளிமையான வழிமுறைகளைக் வீடியோக்களாக தயாரித்துள்ளேன்.
வாய்ப்பாட்டினை எளிமையாக கற்கும் பொருட்டு ப்ளாஷ் அனிமேஷனில் 20 வாய்ப்பாடுகளை குறுந்தகடாக தயாரித்து வலைப்பூவில் இலவச பதிவிறக்க வசதியுடன் வெளியிட்டுள்ளேன்.
அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் பொருட்டு இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தி அறிவியல் சோதனைகள் மேற்கொள்வார்கள்.
எம்பள்ளி மாணவி ரேச்சல் அறிவியல் புத்தாக்க விருதினை 2011-12 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களிடம் பெற்றார்.
சமூக அறிவியல் பாடத்தை AUDIO MATERIALS FOR BLIND என்ற தலைப்பினில் வலைப்பூவில் TET, TRB க்கு தயாராகும் பார்வையற்றோருக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் என் துணைவியார் சங்கீதா (ஆங்கில பட்டதாரி) அவர்களோடு இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளேன்.
பள்ளியின் இணைய இணைப்பை பள்ளிக்கு மட்டும் அல்லாது INSPIRE AWARD, NMMS EXAM, NMMS SCHOLARSHIP, EMIS WORK, COMMUNITY CERTIFICATE, TEACHERS PROFILE, என்று ஒன்றிய அளவிலான பள்ளிகள்,மற்றும் மாவட்டம் அளவிலான பள்ளிகள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உதவிடுகிறேன்.
NATIONAL AWARD FOR SCHOOL TEACHERS USING ICT FOR INNOVATION IN EDUCATION க்காக 2012 ஆம் ஆண்டு மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்களில் நானும் ஒருவராக டெல்லி வரை சென்று வந்தேன்.அது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.மாநில அளவில் ஆசிரியர்களின் நட்பு வட்டத்தை விரிவாக்கியது.
என்னுடைய திறமைகளை வெளிக் கொண்டு வந்ததில் சித்ரா, உமா, ஆசிர் சார் ஆகியோர்களுக்கு பெரும் பங்கு உண்டு!
முன்னால் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் .வி.டி.சீதாராமன் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்புகளுக்கான கணித குறுந்தகடு தாயாரிப்பு பணியை அளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் ஓர் குழுவாக இணைந்து, கிட்டதட்ட மூன்றரை இலட்சம் ரூபாய் செலவில் அப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.
எழுதிப்படிப்போம் வாங்க! என்ற என்னுடைய புத்தகம் தொடக்க நிலை மாணவர்களை எளிதாக வாசிக்க வைக்கின்ற தமிழ் குறுந்தகடாக தயாரிக்கப் பட்டுள்ளது!
இக்குறுந்தகடுகள் அனைத்தும், அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்குவதற்கான பரிசீலனையில் உள்ளது.
சிகரம் தொட்ட ஆசிரியர் விருது கருத்தாய்வு மைய அளவிலும் ஒன்றிய அளவிலும் 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன.
வகுப்பறைக்கற்றலில் புதுமை புகுத்தியதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் 2007 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
சிறந்தகணினி பயன்பாட்டுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2010ஆம் ஆண்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் சார்பில் அறிவியல் இயக்கப் பார்வையில் சிறந்த ஆசிரியர் என்ற விருது 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
2012ஆம் ஆண்டு சென்னை டிபிஐ-ETV STUDIOவில் கணித காணொளி தயாரிப்பு பணிமனையில் கலந்து கொண்டமைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு கொங்கு நாடு காலேஜ் ஆப் எஜுகேசன் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு MS WORD AS A LANGUAGE LEARNING TOOL என்ற ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு DFCஇல் TOP-20 இல் எங்கள் பள்ளியும் இடம் பிடித்துள்ளது.
SCERT மூலம் PBL வகுப்பினை சிறப்பாக எடுத்து வெற்றிக்கனியை பறித்து தந்த நண்பன் ராஜேஷ் மற்றும் திலீப் சார் நன்றிக்கு உரியவர்கள்!
28.07.1999-நான் பணியேற்ற நாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுவிழா மற்றும் அரசு விழாக்கள் நடத்த தவறியதில்லை.அவ்வப்போது கதாபாத்திரங்களாக மாறுவதும் உண்டு!
எங்கள் பள்ளி எப்படி உள்ளதென
2011 இல் இருந்து டிஎப்சி செய்து வருகிறோம்!
கண்ணதாசன் சொல்லுவார்,
ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படி எல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன்.எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது
அதைப்போல டி.எப்.சி. எப்படி எல்லாம் செய்யக்கூடாதோ அப்படி எல்லாம் செய்து, கடைசியிலே இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கற்றுத் தெளிந்து, வெற்றியும் பெற்றதால் எங்கள் வெற்றிக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வெற்றிக்கதை நெடிய பயணத்தை உடையது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ப்ராஜெக்ட் பேஸ்டு லேனிங் என்ற பயிற்சிக்காக 2011 ஆம் ஆண்டு சென்றிருந்த போது டி.எப்.சி. குறித்து நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
ஆனால் பள்ளி அளவிலான ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுத்து, அதை மாணவர்களே எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை அப்பயிற்சியின் வாயிலாக அறிந்து கொண்டேன்.
WE TOO ARE TRAFFIC POLICE என்ற I CAN SCHOOL CHALLENGE - எடுத்துக்கொண்டு மாணவர்கள் சாலையை ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு எவ்வாறு கவனமாக கடக்கலாம் என்பதற்கு ஒரு செயல்திட்டம் தயாரித்தோம்.


மாணவர்களைக் கொண்டே STOP போர்டு தயாரித்து சாலையின் இரு புறமும் காண்பித்து போக்குவரத்தை நிறுத்தி சாலையை விபத்தின்றி கடக்க வைத்தோம். ஆனால் அதை சரியான முறையில் ஆவணப்படுத்துவதில் கோட்டை விட்டோம்!

2012ஆம் ஆண்டில் ஒருமுறை கலந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறைகூட தெரியாமல் கலந்து கொள்ள தவறி விட்டோம்!
மீண்டும் முயற்சியைக் கைவிடாமல் 2013ஆம் ஆண்டு தமிழிலும் எழுதுவோம்!தரணியைக் கலக்குவோம்!! என்ற செயல் திட்டத்தை எடுத்துக் கொண்டு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கணினிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, மாணவர்களை NHM WRITER கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய வைத்தோம்.

இம்முறை ஆவணப்படுத்துதலில் பிழை ஏதும் இல்லை. ஆனால் வீடியோவின் வடிவத்தில் வந்தது பிரச்சனை! அதாவது AVI, MP4, MPEG, MOV இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேட்டார்கள்.நாங்களோ WMV வடிவத்தில் கொடுத்ததால் அது ஓடவில்லை.
விடுவோமா நாங்கள்?அடுத்த 2014ஆம் ஆண்டு மூங்கில் முள்ளால் வேலி!கவலைகள் இனிமேல் காலி!! என்ற செயல் திட்டத்தை எடுத்து, ”தானேபுயலால் கீழே விழுந்து விட்ட பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்களைக் கொண்டே மூங்கில் முள்ளால் வேலி அமைத்தோம்!!


ஆனால் வீடியோ,பவர் பாயிண்ட் செய்யாமல் இம்முறை புகைப்படக் கதை தயாரித்தோம். சொல்ல வந்த கருத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.
2015ஆம் ஆண்டு நான் சோர்ந்து போயிருந்த வேளையில், எங்கள் மாணவர்கள் முழுமையாக களத்தில் இறங்கினார்கள். சுண்ணக் கட்டியின் தூசால் ஆஸ்துமா நோயாளியாகி அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த என் வேதனைக்கும், தினம் தினம் கரும்பலகையை அழிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படும் தும்மல், இருமலுக்கு விடை காணும் பொருட்டும், SAY BYE TO CHALKPIECE DUST! என்ற செயல் திட்டத்தை செய்தார்கள்!

ஆரம்பத்தில் கொட்டாங்குச்சியில் சாக்கை கட்டி கரும்பலகையை அழித்தோம்! ஒவ்வொருமுறையும் சாக்கை அவிழ்க்காமல் இருக்க,வீணான பிளாஸ்டிக் குளிர்பான பாட்டிலை இரண்டாக வெட்டி அடிப்பகுதியை PEN STAND ஆகவும், மூடியுடன் இருக்கும் மேல் பகுதி அழிப்பான் செய்யவும் பயன் படுத்தினோம்.இப்போது சாக்கை அவிழ்க்காமல், குளிர்பான பாட்டிலின் மூடியை திறந்து சுண்ணக்கட்டி தூசுகளை வெளியாற்றுவது சுலபமாக இருந்தது. கரும்பலகையை இன்னும் சுத்தமாக அழிக்கும் பொருட்டு உள்ளே ஸ்பாஞ் வைத்தோம். அது மேல்புறத்தில் இறுக்கமாக இருப்பதற்காக குச்சிகளை உடைத்து கூட்டல் குறி வடிவத்தில் இடையில் செருகினோம்.
இவை அனைத்தையும் எங்கள் மாணவர்களே முயன்று தவறி மீண்டும் முயற்சித்து இறுதி வடிவம் கொடுத்தார்கள்! சுண்ணக்கட்டி தூசுக்கு விடை கொடுத்தார்கள்!!

முதல் 100 வெற்றிக் கதையில் எங்கள் பள்ளியின் பெயரை பார்த்ததும் மாணவர்கள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை!
குஜராத் செல்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்யத் தொடங்கினோம்! கிராமக்கல்விக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக ஒத்துழைப்போடு ஆறாம் வகுப்பு மாணவன் பெ.ஆனந்தராஜை அழைத்துக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் மூலம் அகமதாபாத் சென்றுவர முன்பதிவு செய்தோம்!ஆனால் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து, பயணம் இரத்தானது.
இருப்பினும் முதல் 20 இடங்களில் எங்கள் பள்ளியும் ஒன்று என்ற செய்தி எங்களை தொலைபேசி வழி வந்தடைந்தது!
விழாவில் சென்று பங்கேற்க முடியாவிட்டாலும் எங்கள் பள்ளிப்பிள்ளைகள் கதாநாயகர்களே!

ஏனென்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் தெரியும்!!
எதையும் தைரியமாக எதிர் கொள்வதற்கான துணிச்சலை டி.எப்.சி. வழங்கி இருக்கிறது!அவர்களுக்கு அதுவே போதும்!!
நன்றி! வணக்கம்!!
இங்கனம்,
வழிகாட்டி ஆசிரியர்
கு.சீனுவாசன் .
...நி.பள்ளி,
சாலைஅகரம்,கோலியனூர் ஒன்றியம்,
விழுப்புரம் மாவட்டம்-605103
இக்குழுவில் என்னையும் சேர்த்து பதிவிட வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!!!