Friday, 8 January 2016

திருமதி.ஜெயப்பிரியா.


நான் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமையனூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்.
நான் 2006ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக, பணியில் சேர்ந்தேன். இரண்டரை ஆண்டுகளில் மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறன் 95% எட்டினேன். (பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை
40). இதற்க்கு படிப்பும் இனிக்கும் திட்டம் சிறப்பாக உதவியது. இந்தத் திட்டத்தில் கொடுக்கப்பட்ட அட்டைகளை, இன்று வரை நான் மாணவர்களின் வாசிப்பு திறனிற்க்காக பயன்படுத்தி வருகிறேன். வாசிப்பு திறனிற்க்காக படிப்பும் இனிக்கும் விருது எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

எப்பொழுதுமே மாணவர்களின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், உடல்நலம் சீராக இல்லையென்றால், மாணவர்களால் படிக்க இயலாது. 2007ஆம் ஆண்டு என்னிடம் முதல் வகுப்பு சேர்ந்த ஒரு மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து, அவரது பெற்றோரிடம் பேசினேன். அவருக்கு, இதயத்தில் துளை இருப்பதாகவும், மருத்துவத்திற்கு வசதி இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள். உடனே, எங்கள் ஊரில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனத்திடம் பேசி, அவரது இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, அவர் 9ஆம் வகுப்பு சிறப்பான முறையில் பயின்று வருகிறார். அவரை பார்க்கும்போதெல்லாம், மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, அளவிடமுடியாதது.

அன்று முதல் இன்று வரை, மருத்துவ உதவி தேவைப்படும் எம்மாணவர்களுக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து வருகிறேன்.

இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த பொது, ஆங்கில வாசிப்பு திறனிலும், அக்கறை காட்டினேன். என்னிடம் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 பேரில், 5 மாணவர்கள், 6 வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயிலும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயின்று, 10ஆம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இன்று 12ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்று வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியராக பணிப்புரிந்த பள்ளியில், இரண்டு ஆண்டுகளும், சிறப்பான முறையில் பல்வேறு போட்டிகள் மற்றும் ஆண்டு விழாக்கள் நடத்தினேன்.

2009ஆம் ஆண்டு, காட்டுமலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுப் பெற்று வந்தேன். பேருந்து வசதிக் கூட இல்லாத ஊரில், மாணவர்களுக்கு, படிப்பின் மீது ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதை உணர முடிந்தது.

உடன் வேலை செய்த, மற்ற ஆசிரியர்களின் உதவியோடு, பள்ளியின் நடைமுறைகளில் சில மாற்றங்களை செய்தோம். போட்டிகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. விளையாட்டு வழியே கல்வியை ஊக்கப்படுத்தினோம். இதனால், மாணவர்களின் வருகையும் அதிகரித்து, படிப்பில் ஆர்வமும் அதிகரித்தது. கணினி வழிக் கல்வியில் சிறப்பு கவனம் அளித்தத்தால், மாணவர்கள் ஆர்வமோடு பள்ளிக்கு வரத் துவங்கினர். பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் சிறப்பாக நடைபெற ஆரம்பித்தது.

பள்ளியில் கம்யூனிட்டி க்ளப் ஆரம்பிக்கப்பட்டு, அதன் வழி, பல்வேறு சுற்று சூழல் தொடர்பான செயல்பாடுகள், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் பதிவுகளை youtube-இல் எனது பெயரில் காணலாம்.

அறிவியல் என்பது செய்து கற்றல் ஆகும். எனவே, என் பள்ளியில் அனைத்து அறிவியல் பாடங்களையும், முடிந்தவரை, வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி, பாடம் கற்பிக்க ஆரம்பித்தேன். இது மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை அதிகரித்தது. இப்போது, எல்லா பாடங்களும், செய்முறை மூலம் சிறப்பாக நடைபெறுகிறது.

சிறப்பு கவனம் தேவைப்படும் மனநிலைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் பொருட்டு, தனியார் மனநல மருத்துவர் ஒருவர் தன்னார்வலராக என் பள்ளிக்கு வருகை தருகிறார்.

பெரிய அளவில் சாதனைகள் செய்யவில்லை என்றாலும், விருதுகள் எதுவும் பெறவில்லை என்றாலும், மாணவர்களின் உடல்நிலையில் அக்கறையோடும், அவர்களின் படிப்பில் ஆர்வத்தோடு இருப்பதையுமே சிறப்பாக எண்ணி பணிபுரிந்து வருகிறேன்.

திரு.சதிஷ்குமார்

சி.சதிஷ்குமார்
பணிநிலை:
       இடைநிலை ஆசிரியர்
கல்வித்தகுதி:
     MA, MBA, MSW, DTEd, FCED
பள்ளி:
ஊ.ஒ.தொ.பள்ளி
எருக்கலக்கோட்டை
அறந்தாங்கி
புதுக்கோட்டை
2004 ..
பணியில் சேர்ந்த ஆண்டு
ஊ.ஒ.தொ.பள்ளி வீரராகவபுரம்
2006
ஊ.ஒ.தொ.பள்ளி
அலஞ்சிரங்காடு
2006- 2014
ஊ.ஒ.தொ.பள்ளி
வேம்பங்குடி (மே)
2014 முதல்
தற்பொழுதையப் பள்ளி
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி என்னும் தாகூரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்...
அதனடிப்பயிலேயே எனது கல்விப்பணி அமைகிறது...
கற்றுக்
கொடுப்பவரெல்லாம் எவரிடமிருந்து கற்கிறோமோ அவரே ஆசிரியர் என்பதை உணர்ந்து நான் ஆற்றிவரும் பணிகளை உங்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்.
நான் பணியேற்றது என்னவோ 2004 ஆக இருந்தாலும் நான் 2006 முதல் பணியாற்றிய பள்ளியில்தான் எனது கனவை அரங்கேற்றினேன்.
முதலாக அப்பள்ளியில் நான் சேர்ந்தபொழுது அத்தொடக்கப் பள்ளியில் 102 மாணவர்கள் பயின்றனர். நான் எனது தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் சில திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கினேன். முதலாவதாக வண்ணச்சீருடை
தனியார் பள்ளிகளில் இருப்பதைக் காட்டிலும் மாணவர் சீருடை மாற்றம் செய்வோம் என்று செய்து PTA கூட்டம் மூலம் முடிவு செய்து அறிவித்து, வண்ணச்சீருடை அணிவித்தோம். தனியாக ஒருநாள் முழுவதும் விளையாட்டு விழாவை நடத்தி ஆண்டுவிழா தனியாக நடத்தினோம். இதை மட்டுமே செய்ததற்குப் பலன் மாணவர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.
கணினி அறை
மாணவர்களின் கல்வியை உயர்த்த முடிவு செய்து
கொடையுள்ளம் கொண்டோரைத் தேடிச் சென்றதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரைக் கண்டறிந்து அவரிடம் கணிணி அறை ஏற்படுத்தும் திட்டமிடலைக் கூறி அதற்கு ரூ 2.80 லட்சம் நிதி கேட்டு இன்று கண்ணாடி அறையால் சூழப்பட்ட அறையில் 5 கணினிகள்  தரை விரிப்புகள் சுழல் நாற்காலிகள் கொண்ட கலாம் கணினி அறை எனப் பெயரிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கொண்டு திறக்கச் செய்து, பின் அரசு சார்பில் 2 கணினி வழ்ங்கப்பட்டு 7 கணினிகளைக் கொண்ட தனி அறை தனி ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது...பள்ளியில் பயிலும் மாணவரில் பெரும்பான்மையர் கணினி அறிவுள்ளவராக தொடக்கப் பள்ளியில் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது..
பசுமைப்படை
பின்னர் அரசு உயர் & மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே இருக்கக் கூடிய பசுமைப்படையினை மாவட்ட பசுமைப்படை அலுவலரை அனுகி பள்ளியில் பசுமைப்படைத் திட்டத்தினை ஏற்படுத்தி அனைத்து வகையான சுற்றுச் சூழலியல் தினங்களையும் கொண்டாடப்பட்டு வந்தது.
மாணவர் சிறு சேமிப்புத் திட்டம்
பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை வரவழைத்து PTA  கூட்டம் கூட்டி தொடங்கினோம். மானவர்கள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக
ரூ 40000 சேமித்து வருகின்றனர்.
குங்பூ தற்காப்பு
மாணவர்கள் அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என முடிவு செய்து மாதம்.ஒரு மாணவருக்கு ரூ 25 என முடிவு செய்து தற்காப்பு பயிற்சி வழங்கினோம்.. தொடர்ந்து 3 ஆண்டுகள் நடைபெற்ற பயிற்சி இப்போது தடைபட்ட நிலையில் உள்ளது...
102 லிருந்து 141 ஆன தொடக்க நிலை மாணவர் எண்ணிக்கை 161 ஆனது.
அடுத்ததாக மாணவர்களுக்கு இருவகையான எழுத்துப் பயிற்சி நோட்டுகள், முதல் வகுப்பிற்கு கட்டம் போட்ட நோட்டுகள் வழங்கி பயிற்சி ஆரம்பித்தோம்.
அனைத்து வகுப்புகளுக்கும்
இரு மின்விசிறிகள் வசதி, தொலைக்காட்சி, ஆடியோ வசதி என நவீனப்படுத்தினோம்...
ஆசிரியப் பயிற்சி  மாணவர்கள் எம்பள்ளிக்கு வந்தால் சிறப்பாக கற்க முடியும் என்னும் நிலையை உருவாக்கியதன் விளைவு ஒரே நேரத்தில் 15 பயிற்சி ஆசிரியர்கள் எம் பள்ளியைத் தேர்வு செய்து வந்தனர்...
கல்வி வளர்ச்சி நிதியை ஏற்படுத்தி பள்ளி நிதியாக ரூ. 72000 பள்ளி நிதியாக வைப்பில் உள்ளது..
சதுரங்கப் பயிற்சி அளிக்க ஆரம்பித்து தொடர்ந்து 3 ஆண்டுகள் எம்பள்ளி மாணாக்கர்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினர்.
மாவட்டத்தில்  CEO, SSA CEO, DEEO,DIET principal என அனைத்து வகை கல்வி அதிகாரிகளாலும் பார்வையிடப்பட்டு பாராட்டப்பட்ட தொடக்கப்பள்ளியாகத் திகழ்ந்தது.
சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழக விருது பள்ளிக்கு கிடைத்தது.
SSA மூலம் எனக்கு சிகரம் தொட்ட ஆசிரியர் விருது கிடத்தது, அரிமா சங்க விருது, தனிமனித மேம்பாட்டு இளைஞர் விருது என சில அங்கீகாரங்கள் எனது பணிக்காக கிடைத்தன.
மாணவர்களிடம் நான் எப்பொழுதும் ஒரு சக மாணவனாக மட்டுமே பழகி வருகிறேன். பெற்றோரிடத்தில் சக சமூகத்தினனாக மட்டுமே பழகி வருகிறேன்.
இறுதியாக நான் தெரிவிக்க விரும்புவது...
ஒன்றுதான்
பள்ளிசார் சமுதாயத்தை எந்தப் பள்ளி பயன்படுத்திக் கொள்கிறதோ...
எந்த ஒரு ஆசிரியர் பள்ளிக்காக சமுதாயத்தை நாடுகிறாரோ...
ஈகோ இல்லாமல் எங்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரோ..
அந்தப் பள்ளியும் அந்த ஆசிரியரும் ,
அந்த சமுதாயமும் சிறந்ததாய் விளங்கும் என்பது மட்டுமே நான் எனது அனுபத்தில் கற்றுக்கொண்ட கல்வியாகும்
நன்றி.....

திரு.பாலமுருகன்

பாலமுருகன்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நல்லூர். வலங்கைமான் ஒன்றியம்,
திருவாரூர் மாவட்டம்.
10.01.2005 ல் ஊ.ஒ.தொ.பள்ளி கல்யாணஓடை,  மதுக்கூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டதில் இடைநிலை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டேன்.  இரண்டு ஆசிரியர் பள்ளி. மாணவர்களின் எண்ணிக்கை 20 க்கும் கீழ் இருந்தது.    மூன்றரை ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். அப்பள்ளியின் தலைமை  ஆசிரியரும் ,  மாணவர்களும்  என்னைமுழுமையான  ஆசிரியராக மாற்றும் மமுயற்சியில்  அவர்களை அறியாமல் செய்தனர்.
முதல் மூன்று வருடங்கள் புதிய முயற்சிகள் ஏதும் செய்யவில்லை . புத்தகங்களை மாணவர்களுக்கு வாசித்து காண்பித்தது தவிர...........
பிறகு திருவாரூர் மாவட்டதிற்கு விருப்ப மாறுதலில் வலங்கைமான் ஒன்றியத்தில் 2008 ல் பணியேற்றேன். வேடம்பூர் நடுநிலைப்பள்ளி.   வாகைசூடவா திரைப்படதில் குறிப்பிடப்படும் இடம் , முழுக்க முழுக்க செங்கல் காளவாய் உள்ள இடம் ........ இங்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவு .....   வருகையை மேம்படுத்த 3 மாதம் நேரில் சென்று அவ்ர்களை பள்ளிககு வரவழைத்தேன்aieeaaaiiuககிaமாஅaaமுதல் மூன்று வருடங்கள் புதிய முயற்சிகள் ஏதும் செய்யவில்லை . புத்தகங்களை மாணவர்களுக்கு வாசித்து காண்பித்தது தவிர...........
பிறகு திருவாரூர் மாவட்டதிற்கு விருப்ப மாறுதலில் வலங்கைமான் ஒன்றியத்தில் 2008 ல் பணியேற்றேன். வேடம்பூர் நடுநிலைப்பள்ளி.   வாகைசூடவா திரைப்படதில் குறிப்பிடப்படும் இடம் , முழுக்க முழுக்க செங்கல் காளவாய் உள்ள இடம் ........ இங்கு மாணவர்களின் வருகை மிகவும் குறைவு .....   வருகையை மேம்படுத்த 3 மாதம் நேரில் சென்று அவ்ர்களை பள்ளிககு வரவழைத்தேன்
அடுத்த ஆண்டு ஒன்றிய மாறுதலில் நல்லூர் நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றேன்.   இங்கு பணியாற்றியது முதல் அலுவலக பணிகள் செய்ய அழைக்கப்பட்டேன். 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் அலுவலகம் சென்றதால்  ஏற்பட்ட விளைவு  6 விபத்துகள்,    மருத்துவ செலவு . மனநிறைவு இன்மை.  பின்னர் பள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
அவர்களுக்கு பல குழந்தை திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அனைத்து எ. பி. எல் அட்டை பாடல்களுக்கும் திரைப்பட பாடல்கள் மெட்டில் கற்றுதரப்பட்டட்து . 25/ 156 வருகை 130/156 என்று அதிகரித்தது....  தினமும் கபடி கோ.கோ  கால்பந்தாட்டம் கற்று கொடுக்கப்பட்டது.   விளைவு ஒன்றிய அளவில் மாணவர்கள் கனிசமான் வெற்றிகளைப் பெற்றனர்.   பெற்றோர்களும்  மாணவர்களை வேலைக்கு அழைத்து செல்லாமல் பள்ளிக்கு அனுப்பினர் .  4 ஆசிரியர்கள்  மட்டுமே அப்போது பணியாற்றினோம்.  ouieaoஅவர்களுக்கு பல குழந்தை திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அனைத்து எ. பி. எல் அட்டை பாடல்களுக்கும் திரைப்பட பாடல்கள் மெட்டில் கற்றுதரப்பட்டட்து . 25/ 156 வருகை 130/156 என்று அதிகரித்தது....  தினமும் கபடி கோ.கோ  கால்பந்தாட்டம் கற்று கொடுக்கப்பட்டது.   விளைவு ஒன்றிய அளவில் மாணவர்கள் கனிசமான் வெற்றிகளைப் பெற்றனர்.   பெற்றோர்களும்  மாணவர்களை வேலைக்கு அழைத்து செல்லாமல் பள்ளிக்கு அனுப்பினர் .  4 ஆசிரியர்கள்  மட்டுமே அப்போது பணியாற்றினோம்.
மாணவர்களைக்கொண்டு ஒவ்வொரு வகுப்பு பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து காலை  8.45 ஒலி பெருகியில் ஒலிபரப்பினோம். மாணவர்கள் உற்சாகத்துடன் காலை வழிபாட்டிற்கு  தாமதம் இன்றி வந்தனர்.   அடுத்து கோல்கேட் கம்பெனி உதவியுடன் மருத்துவ குழு பற்கள் பாதுகாப்பு முகாம் வருடா வருடம் நடத்தி வருகிறோம்மாணவர்களைக்கொண்டு ஒவ்வொரு வகுப்பு பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து காலை  8.45 ஒலி பெருகியில் ஒலிபரப்பினோம். மாணவர்கள் உற்சாகத்துடன் காலை வழிபாட்டிற்கு  தாமதம் இன்றி வந்தனர்.   அடுத்து கோல்கேட் கம்பெனி உதவியுடன் மருத்துவ குழு பற்கள் பாதுகாப்பு முகாம் வருடா வருடம் நடத்தி வருகிறோம்
நீர் நிலைகளை பற்றி மாணவர்கள்   தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் ஆறு. குளம், ஏரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.  கல்வி சுற்றுலாவாக கோடியக்கரைக்கு அழைத்து சென்று கடலை நேரில் கண்டனர்
பள்ளியில் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி  நடைபெருகிறது. கடந்த ஆண்டு 2015 அறிவியல் கண்காட்சியில் தோழர் திரு. மணிமாறன் உதவியுடன் எம் பள்ளியில் மாதிரி கோளரங்கம் அமைக்கப்பட்டது. ஒன்றிய அளவில் மாணவர்க்aள் பயனடந்தனர்.  மாதிரி இராக்கெட் யெவுதல் நிகழ்சி அனைவரையும் நெகிழ்ந்தனர்.
அரவிந் குப்தா அவர்களின் எளிய அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
வெள்ளி கிழமை 3.30 மணிக்கு மாணவர் நேரம். இதில் நாடகம் நடனம் பேச்சு  கவிதை  விடுகதைகள் பாடல் வில்லுப்பாட்டு  ஆகியவை இடம்பெறும்
செய்திதாள் வாசிக்கும் பயிற்சி தினமும் கொடுக்கப் படுகிறது. இதனால் செய்திகள் மாணவர்களுக்குள் பரிமாற்றம் செய்தனர் விளைவு மாவட்ட அளவில் எம் பள்ளி மாணவர்கள் வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்றனர்(2012).  3.45 முதல் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது  ஒன்றிய அளவில் எம் பள்ளி மாணவன் 100மீ முதலிடம் மாவட்ட அள்வில் 4 ம் இடம்.

திசைகளைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளி மைதானத்தில்  உலக வரைபடம் வரைந்து கண்டங்கள் கடல்கள் நாடுகள் ஆகிவற்றை விளையாட்டு மூலம் கற்றனர். ஒரு கால் பந்தை வரைபடத்தில் உருட்டிவிட அது எங்கு நிற்கிறதோ அதன் பெயர் என்ன  என்று கேட்க மாணவர்கள்  அவ்விடத்தின் பெயரை கூறுவர்......... இதற்கு கிடைத்த பரிசு  " ஐ கேன்" விருது . மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக  புதிய தலைமுறை  இணை ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள்  எங்கள் பள்ளியின் செய்தியை வெவெளியிட்டது  எம் பள்ளி மாணவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத செய்தி.

திரு.மணிமாறன்

1.Map உருவாக்கினோம்.
தெர்மோகோலில் இந்திய வரைபடம் வரைந்து அதை ஒவ்வொரு மாநிலமாக பிரித்து பின் இந்தியா வரைபடம் உருவாக்கினோம்

இதன் மூலமாக மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் ஒவ்வொரு மாநிலத்தினையும் தனித்தனியாக தெரிந்து கொண்ட னர். பெரிய அளவு உள்ள தெர்மோகோல்.
2. கதை நூல்கள் வாசித்தல் - நூலத்திற்கு அழைத்துச் சென்று போட்டி வைப்போம் ஓராண்டில் எவ்வளவு கதைகளை படித்தனர் என்றும் அதனை எவ்வாறு வெளிக் கொணர்ந்தனர் என்றும்
3.ஒவ்வொரு மாணவருக்கும் 10 மரக்கன்றுகளைக் கொடுத்து வளர்க்க செய்தோம் அவை வளர்ச்சி அடைந்த வீடுகளுக்குச் சென்று பாராட்டி பரிசளித்தோம்.
4. பள்ளிக்குப் போதுமான இடம் இலலாத போது சுமார் 2.5 ஏக்கர் மெயின் இடத்தில் சந்தை மதிப்பு ரூ.3000000/- இடத்தினை இலவசமாக வாங்கி புதிய இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்டினோம்.
5. அறிவியல் கண்காட்சி ஒன்றிற்கு பள்ளியில் ஏற்பாடு செய்து அதில் ஒன்றியத்தில் இருந்த அனைத்து பள்ளிகளையும் பங்கேற்க வைந்தோம்.
6. பள்ளியில் பயின்ற 250 மாணவர்களுக்கும் இலவசமாக புத்தாடை வாங்கித் தந்தோம்
7. ஆண்டு தோறும் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினோம்
8. குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து அனைத்து குழந்தைகள் பங்கேற்கும் மன்றங்களை இயக்கினோம்.
மாணவர்களைக் கொண்டே நிகழ்த்திடும் நிகழ்வுகள் மாதம் தோறும் நடத்தினோம்.
இவை அனைத்தும் 2004-2008 ஆம் ஆண்டுகளில்.
மருத்துவ மனை, கோவில்கள், வயல்வெளிகள், அஞ்சலகம்,இரயில்நிலையம், பேருந்து நிலையம், வங்கி இவற்றினை வகுப்பறையாக மாற்றினோம்.
10. மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கங்களை ஊக்குவித்தோம்..முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் அழைத்துப் பாராட்டினார்.
11.இரவு வான் நோக்கும் நிகழ்வினை நிகழ்வினை இரண்டு telescope உடன் நிகழ்த்தினோம்
12. Childline உதவியுடன் குழந்தைகள் உரிமைகளை தெரிய வைத்தோம்.
தீயணைப்பு அலுவலர்களை அழைத்து அவர்களது செயல்பாடுகளை தெரிய வைக்க விழிப்புணர்வு தீபாவளி கொண்டாடிடோம்..
மாணவர்கள் தயாரித்த நூல்களை விற்பனை செய்து புதிய விற்பனை நிலையங்களை உருவாக்கினோம்..காய்கறிச்சந்தை அமைத்தோம்.
இதனைப் பாராட்டி பக்கத்தில் இருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருந்து 150 கடிகாரங்களை பரிசாக வழங்கினர். ஒவ்வொன்றின் மதிப்பு ரூ.250/-
இப்போது 2015,2016 செய்து வருபதை முகநூலில் மணிமாறன் என்ற பக்கத்தில் காணலாம். இவை அனைத்தும் 2008 வரை செய்தது. இப்போது பழமையாக இருக்கலாம்.. அப்போது புதுமையான நிகழ்வு . 2009-2014 மற்றொரு முறை பதிவிடுகின்றேன் நன்றி அக்கா.

திரு.நீதிதாஸ்

அணைவருக்கும் வணக்கம்,நான்
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம்,மைலங்குப்பம் ஊ.ஒ.து.பள்ளி, இ.நி.ஆசிரியர் தே.நீதிதாஸ்.
2008 ம் ஆண்டு பணிக்கு வந்தேன் ஈராசிரியர் பள்ளி முதல் மூன்று மாதங்களில்
பாடம் நடத்தி சோர்வடைந்தேன் என்னுடைய கற்பிக்கும் முறை அவர்களுக்கு புரியவில்லை என்பதும் அவர்களுக்கு கற்பிக்க என்னை நான் அவர்களுக்கென தயார்செய்ய வேண்மடுமெனவும் முடிவெடுத்தேன்.
என்னுடைய வகுப்பை எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருக்க அவர்களுடன் இணைந்திருந்தேன்.
💥ஆரம்பப்பள்ளி ஒரு மலர்தோட்டம்எனில் அதில் மாணவர்கள் மலரினும் மென்மையானவர்கள்...முதல்வகுப்பிற்கு... பேச,பாட,உற்றுநோக்க,சிந்திக்க, குழுவுடன் செயல்பட,கற்பனை செய்ய....முதலில் கற்றுத்தந்தேன் அனைத்தும் நேரடி அனுபவம் பின்னரே வரைய,படிக்க ,எழுத(வரிவடிவத்துடன்), அவர்களை தயார்படுத்தினேன், எவ்வாறு கூறினால் அவர்களுக்கு புரியும் ,என்பதை கண்டறிய நாட்களாயிற்று,பாடப்பொருளை கூடியவரையில் நேரடி அனுபவமாக அளித்தேன்...இது வெற்றி தந்தது.
வயல்கள்,தோட்டம், ,குளம்,குட்டை போன்ற நீர்நிலைகள், தபால்நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம்..ஊராட்சி மன்றம்,நியாய விலைக்கடை ஆகிய பொதுஇடங்களுக்கு களப்பயணம் சென்றோம்.
💥 கடினமான பாடப்பகுதிகளுக்கு கணினியை பயன்படுத்தி கற்பிக்கிறேன் இஃது மாணவர்களுக்கு விருப்பமான ஒன்று குழந்தைகளின் கண்ணையும் ,கருத்தையும் கவரும் விதத்தில் உள்ளது.
குருமூர்த்தி ஆசிரியர் அவர்களின் குறுந்தகடுகளை உபயோகிக்கிறேன், நன்றி குருமூர்த்தி சார், தற்போது photostory ,PPT .மற்றும் பதிவிறக்கம் செய்த காணொலி காட்சிகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகிறது, சகோதரி சாலை கலாவள்ளியின் குரலில் பாடல்கள் ஒலிக்கிறது.
💥 💥முதல் வகுப்பு மாணவர்களுக்கு மெழித்திறனை வளர்க்க கேட்டல்,பேசுதல்,வாசித்தல், போன்றவற்றை, கதை கூறியும்,கதை அவர்களை கூறக்கேட்டும் வளர்ந்த மாணவர்களின் திறன், எழுதுதலில் குறைகள் கண்டது அதனைக்களைய நான் மேற்கொண்டசெயல் முதல்வகுப்பிலே வரிவடிவத்தை கற்பித்தேன்...உதாரணமாக "அ" என்னும் எழுத்தை எழுத சுழியில் தொடங்கி கீழ்பிறை கோட்டுடன் படுக்கைகீற்று இட்டு இறங்குகீற்றுடன் முடிக்கவேண்டும் என்று கற்பிப்பது அவர்களுக்கு மேலும் சில வார்தைகளை அறிவதுடன் வரிவடிவத்தை அறிகின்றனர் .
சுழி
கீழ்ப்பிறை
படுக்கைகீற்று
மேல்படுக்கைகீற்று
இறங்குகீற்று
ஏறுகீற்று
சாய்க்கீற்று
சிறுவளைக்கீற்று
உள்வளைக்கீற்று
கொம்பு
கொம்புக்கால்
விலங்கு
மேல்விலங்கு போன்ற முக்கிய வரிவடிவங்களை கற்பிப்பது பயனளிக்கும்
..இதனை முதல்வகுப்பில் நான் செயல் படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன்.(புலவர்.கனகலட்சுமியின் "கசடற கற்க கற்பிக்க" என்ற நூலில்
இருந்து பின்பற்றிய முறைகள்)
💥உணவு இடைவேளை நேரங்களில் மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்
சதுரங்கம் விளையாடுவது மாணவர்களின் தன்நம்பிகையை வளர்பதுடன் கற்கும் சிந்தனையையும் தூண்டுகிறது ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்கின்றனர்.
இதற்கு முத்தாய்ப்பாக பாரதியார் தின சதுரங்க போட்டியில் என் பள்ளி 5ம் வகுப்பு மாணவி க.திரிஷா ஒன்றியத்தில் முதலிடமும்,மாவட்டத்தில் மூன்றாமிடமும் ,மண்டல அளவில் 4 ம் இடத்தையும் பெற்றார்.
💥மெதுவாய் கற்கும் மாணவர்களை இரு குழுவாய் பிரித்து, கரும்பலகையை வலதுபக்க மூலையில் மேக்ஸ் கார்னர் என்றும் மற்றொரு மூலையை இங்கிலீஸ் கார்னர் என்று பிரித்து இருதினங்களுக்கொருமுறை சிறிய கணக்குகள் ஐந்து ,எளிய ஆங்கில வார்த்தைகளை ஐந்து அவர்களுக்கென எழுதி பயிற்சி அளிக்கப்படுகிறது மறுநாள் கணித குழு, ஆங்கில குழுவிற்கும் ஆங்கில குழு கணித குழுவிற்கும் அவர்களே கற்பிக்கின்றனர் இம்முறை எனக்கு நல்ல முன்னேற்றத்தை தந்துள்ளது.
💥உணவுத்திருவிழா என்ற பாடத்திற்கு முன்தயாரிப்பாக ஒவ்வொரு மாணவரையும் அழைத்து பாரம்பரிய உணவுவகைகளை அவர்களே வீட்டில் தயாரித்து வர பொற்றோரிடமும் அனுமதி பெற்று...ஒவ்வொருவரும் ஒரு உணவு வகையை தயாரித்து வருமாறு கூறினேன் அனைவரும் ஒரு, ஒரு வகைகளை கொணர்ந்தனர் ...
சோள தோசை
சோளஉப்புமா
களி
கோழ்வரகு கூழ்
கீரை அடை
புட்டு
அறுகம்புல் சாறு
கேழ்வரகு கஞ்சி
பால்பாயாசம்
கோழ்வரகு அடை
பொட்டுக்கடலை உருண்டை
இன்னும் பல... காலை உணவாக அதையே பள்ளியில் உண்டனர் .
💥என்னுடைய கற்பித்தல் முறையில் முழுவதுமாக பாடப்பொருளை செய்துகற்றல், நேரடிகற்றல், செயல்திட்டங்கள் மூலம் கற்பிக்கிறேன்.
செயல்திட்டமாக ஆண்டுதோறும் மழைக்காலங்களில் அணைத்து பெற்றோர்களும் தங்களுடைய தோட்டங்களில்(பள்ளியில் இடவசதி இல்லை ) குழி எடுத்து வேலி அமைத்த பின்னரே மாணவர்களுக்கு இரு மரக்கன்றுகள் வழங்கபடுகிறது...அவற்றை மாணவர்கள் வளர்க்கவேண்டும், இதை கண்காணிப்பு செய்ய மாணவர் குழு ஒன்று உள்ளது,இறுதியாக கலாம் அய்யா,அவர்களின் பிறந்த தினத்திற்கு மரக்கன்றுகளை வழங்கினேன்.
💥 கற்றல் கற்பித்தல், கருவிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்படுகிறது,
குறிப்பாக ஆங்கிலத்தில் வரியொற்றிய எழுத இரண்டு A4 அளவுள்ள சார்ட் பேப்பரில் எழுத்துக்களை எழுதி அதன்மேல் சொல்லோடேப் ஒட்டிவிட்டேன் இதில் அணைத்து மாணவர்களும் மார்கரால் எழுதி, அழித்து ஒவ்வொருவராக பயன்படுத்தினர்.
💥 பலவிதமான TLM களை நானே உருவாக்குகிறேன்... கடந்த ஆண்டு 4000 ரூபாய் செலவில் மார்கர் போர்டை என் பிறந்த்தினத்திற்கு, மாணவர்களுக்கு பரிசளித்தேன்.
💥 மாணவர்கள் அணைவரும் களப்பயணம்,சுற்றுலா செல்ல பள்ளியில் ஓரு உண்டியல் வைத்து அணைவரும் பணம் சேமித்து வருகின்றனர்.அவர்களின் தொகையை தாங்களாகவே குறித்து வைக்கின்றனர்.
💥 பொதுவாக எங்கள் பகுதி பொற்றோர்கள் ஆண்பிள்ளைகளை மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளை எங்கள் பள்ளியிலும் சேர்ப்பது வழக்கம் கடந்த இரண்டாண்டுகளாக தங்கள் பெண்பிள்ளைகளின் படிப்பைக்கண்டு பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளையும் இடையில் எங்கள்(4,5 வகுப்புகளில்) பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இவ்வாறு மெட்ரிகுலேசன் பள்ளியில் இருந்து எங்கள் பள்ளிக்கு வந்துசேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 7.
💥மூன்றாம் வகுப்பிற்கு 3ம் பருவத்திற்கான ஐவகைநிலங்கள்,பாடத்தி்ற்க்கு நிஜ மாதிரிகளை் போல...மாணவர்களை கொண்டே தத்ரூபமாக உருவாக்கி அதன் மூலம் கற்பித்தேன் அப்படி பயின்ற மாணவர்கள் பாடப்பொருளை மறக்காமல் இன்றளவும் உள்ளனர்.
💥உடல் உறுப்புகளை பற்றிய பாடத்திற்கு,ஓணான் மற்றும் தவளையை dissection செய்து காண்பித்து உடல் உறுப்புகளின் இயக்கத்தை விளக்கினேன்.
💥ஐந்தாம் வகுப்பு மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினர்களாக்கி..."விஞ்ஞான சிறகு" இதழை படிக்க ஆர்வமூட்டுகிறேன்.சுட்டி விகடன்,கோகுலம்,துளிர் போன்ற இதழ்களை வாங்கிதந்து அவர்களை வாசிக்க தூண்டுகிறேன்.
💥 எனது நண்பர்களின் பிறந்த்தினத்தன்று அவர்களிடம் 1000ரூபாய் பணம் பெற்று எங்கள் வட்டாரத்தில் உள்ள மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான Day care centre ல் மதிய உணவு,பழங்களை அளித்து வருகிறேன்.
💥 தேசத்தலைவர்களின் பிறந்ததினத்தில் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் அல்லது திரைப்படத்தை உணவுஇடைவேளையில் திரையிட தவறுவதில்லை.
: மேற்கண்ட அணைத்து செயல்பாடுகளும் ஒவ்வொருஆண்டும் சிறு மாற்றங்களுடன் எம்பள்ளியில் நடைபெறுகிறது.

திருமதி.தென்றல்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அனைவருக்கும் வணக்கம்.                                         
நான், பா.தென்றல்,D.T.Ed.,M.A.,B.Ed.,M.Phil.,
இடைநிலை ஆசிரியை,  
                  இணைப்பு -1                                                                                                                                          
ஸ்ரீ கார்த்திகேயன் உதவி பெறும் தொடக்கப் பள்ளி, 
காரைக்குடி. 630001
சிவகங்கை மாவட்டம்.
எங்கள் பள்ளி, திண்ணைப்பள்ளியாகப் பிறந்து, தொடக்கப் பள்ளியாக வளர்ந்து நிற்கிறது. 100 வயதையும் கடந்து விட்டது. 
1991
ல்  என் பணியேற்பு;
Teach to reach
என்பதை சில ஆண்டுகளில் புரிந்து கொண்டேன். செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள். சமீபத்தில் மேற்கொண்டவை பற்றி மட்டும் பகிர்கின்றேன்.
6.1.2010 அன்று 147 என்ற பதிவு எப்படி இன்று 375 மாணவர்கள் ஆனது? இன்றைய தலைமை ஆசிரியை முனைவர். ஜீ.சுவேதாவின் பெரு முயற்சிகளுடன் எனது சிறு பங்களிப்பும் காரணம். அவற்றுள் சில :
1.வருகை நேரம்:
  காலை 8.40 மணி முதல் 9.20 வரை ஆயத்த வகுப்பு நடைபெறுகிறது.அனைத்து ஆசிரியர்களும் ஆஜர். மாணவர்களனைவரும் முழுமையான சீருடையில் பள்ளிக்கு வருகின்றனர்.
2.காலை வழிபாட்டுக்கூட்டம்:  

Prayer song, Pledge இரண்டும் ஆங்கிலத்திலும் சொல்வர் மாணவர்கள். ஆசிரியர் உரை ஆங்கிலத்தில் மட்டுமே பகர்வேன், மாணவர்களின் கேட்டல் திறனை வளர்ப்பதற்காக.
3.ஆங்கிலத்தில் நலம் நாடுதல்:
.  காலை வணக்கம் கூறியதும் அப்படியே அன்றைய காலை உணவு, நிகழ்ச்சிகள் பற்றி சிறு உரையாடல் ஆங்கிலத்தில் நடக்கும். மாணவர்களும் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளப் பயிற்சியும் உண்டு.
            விடியோ இணைப்பு-1,2
4.கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுகள் :
வகுப்பறைக்குள் நுழைந்ததும் கண் மூடி அமர்ந்து, கணபதி ஸ்லோகம், அயக்ரீவர் ஸ்லோகம், சரஸ்வதி ஸ்லோகம், குரு ஸ்லோகம் ஆகிய  நான்கு ஸ்லோகங்கள் சொல்வோம். தினமொரு கவிஞரின் பாடல் ஒன்று பாடுவோம். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் மற்றும் முடியரசனார் பாடல்களில் ஒன்று. 
வெள்ளிக்கிழமை இந்து,கிறிஸ்தவ, இசுலாமிய தெய்வ பக்திப்பாடல்கள் பாடுவோம்.
5.தகவல் பலகை :
 தகவல் பலகையில் அன்றைய செய்தித்தாளில் வெட்டி எடுத்த படம் ஒட்டி, கலந்துரையாடுவோம். தினம் ஒரு மாணவர் செய்தித் தாளில் சிறு பகுதி மட்டும் வாசிப்பர். கல்விச்செய்திகள் மட்டுமன்றி, பரவலாகப் படிப்போம்.
6.எல்லோரும் கொண்டாடுவோம்
பள்ளியில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்காகவும், குழந்தைகள் கற்றல் செயல்களில் மகிழ்ச்சியாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் விழாக்கள் கொண்டாடி, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கிறோம். பரிசில்களும் உண்டு என்பதால் குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
                          இணைப்பு -2 (4 படங்கள் )                                                                                                                                         
7. "நாளும் வரைவோம் இந்தியா ":
 தினம் ஒரு மாணவர் என ஒரு கரும்பலகையில் இந்திய வரைபடம் வரைந்தும், மற்றொன்றில் ஒரு வாய்பாடும் எழுதி இருப்பர். அதைத் திருத்துதல்.மூன்றாம் பருவம் முதல் தமிழ்நாடு எல்லைக்கோடு படம் வரைகின்றனர்.
8. வருகைப் பதிவு நேரம் :
அப்பொழுது 'பள்ளிக்கண்ணாடி' வந்து விடும். ’என்னால்தான் தாமதம் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உலவுகிறது. உடனே மாணவர் வருகைப் பதிவேடு எடுப்பேன். என் செல்வங்கள் அழகாக ஆங்கிலத்தில் 6 முழு வார்த்தைகள் கூறி, present சொல்வார்கள். ஜூன் முதல், மாதம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிப் பயிற்சி கொடுப்பேன்.
           விடியோ இணைப்பு-3
        
9.இன்றைய வார்த்தை :
  வகுப்பில் அடிக்கடி பேசும் வார்த்தையை மொழிபெயர்த்து Sentence for the day உருவாக்கி,  அதைக் கரும்பலகையில் எழுதி வைப்பேன்.அன்று முழுவதும் பயன்படுத்துவோம். மாலையில் Oral home work கொடுத்து, மறுநாள் சரிபார்ப்பேன்.
10.தினம் தினம் திருக்குறள் :
வகுப்பு தொடங்கும் முன் தினமும் ஐந்து குறள் ஒப்பிக்கும் திட்டத்தில் மூன்று மாணவிகள் வெற்றி பெற்று, காரைக்குடிSMSV ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. சேவு முத்துகுமார் அவர்களிடமும், என்னிடமும் பரிசு பெற்றுள்ளனர். ஸ்ரீஹரிணி, பிரகதாம்பாள், கோகிலவேணி ஆகிய மூவரும் இன்று வரை 36 அதிகாரங்கள் படித்துள்ளனர். 360 திருக்குறளையும் எப்பொழுது கேட்டாலும் சொல்வர்
               இணைப்பு - 3 (2 படங்கள் )                                                                                                                                   
11. கேள்வி நேரம்
 பாடத்திற்கு இடையே, "நீ கேளு நான் சொல்றேன் " பயிற்சி நடக்கும். தருமி போல் மாணவர்கள் கேள்வி கேட்க ஆசிரியர் பதில் சொல்லியே ஆகணும். வரையறைக்கு உட்பட்ட தலைப்புகள் கொடுப்பேன்; அவ்வப்பொழுது நெறிப்படுத்துவேன்.
12. பேசும் சுவர்கள்:
வகுப்பறை சுவர்களில் சார்ட் பொட்டலங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றில் மனக்கணக்கு, பொதுஅறிவு, குறள் படிப்போம், கணக்குக்கதம்பம், பைந்தமிழ்ப் பயிற்றகம், வினாடி வினா, உள்விளையாட்டு, proverbs, translate, no fear no tear போன்ற செயல்பாடுகளுக்காகத் தயார் செய்த அட்டைகள் இருக்கும். தேவையான போது பயன்படுத்திக் கொள்வோம்.
                       இணைப்பு - 4 (2 படங்கள் )                                                                                                                                         
13.மாணவர் விருப்பப்படி பாடம்:
மாணவர்களுக்கு ஐந்து தெரிவுகள் உண்டு. பாடல், கதை, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு என. அவர்கள் கருத்தின்படியே பாடம் நடக்கும். சமயத்தில் சுடச்சுட ஸ்கிரிப்ட் தயார் செய்தும் நடத்துவேன்.
14. அலமாரி நிறைய TLM and SLM
துணைக்கருவியும், முன் தயாரிப்பும் இன்றிக்  கற்றல் கற்பித்தல் சிறக்காது என்பது என் எண்ணம்.  எனவே அனைத்துப் பாடங்களுக்கும் ஒரு அட்டையாவது தயார் செய்யும் பழக்கம் உண்டு.
                     இணைப்பு - 5 (2 படங்கள் )                                                                                                                                         
15. நண்பகலில் மன அமைதி :
யோகாசனம், பிராணாயாமம், தியானம்  ஆகியவற்றை முதலில்
முறைப்படி குருவிடம் நான் கற்று, பிறகுதான் கற்பிக்கத் தொடங்கினேன். எளிய உடற்பயிற்சிகளும் செய்வோம்.
                   இணைப்பு - 6 (1 படம் )                                                                                                                                         
16.மதியஉணவுநேரம்:
 மாணவர்கள் தரையில்  சிறுதுண்டு விரித்து, ஸ்பூன் வைத்து சாப்பிடுவர்.
அசைவ உணவு கூடாது. நடுவில் அமர்ந்து நானும் அவர்களுடனே.
17.அறிவுக்கருவூலம்: 
சொந்தமாகப் புத்தகங்கள் வாங்கி, புத்தகப்பூங்கொத்து அறிமுகப்படுத்து முன்பே  அண்ணஞ்சார் நூலகம் வைத்து, நாங்கள் படித்து வருகிறோம். அக்பர் பீர்பால் முதல் அக்னி சிறகுகள், சத்திய சோதனை வரை உண்டு. பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள்,பட்டுக்கோட்டையார் பாடல்கள்,சுஜாதா மற்றும் உதயமூர்த்தி நூல்கள்,எனக்குரிய இடம் எங்கே, மலர் அல்ஜீப்ரா போன்ற சில நூல்கள் எனக்காக உண்டு. அறிக அறிவியல், துளிர், புன்னகை உலகம், புன்னகை கிட்ஸ்,சிறுவர் மலர், கோகுலம், சுட்டி விகடன், சுழல் போன்ற இதழ்களும் வாசிப்போம்.
18. மரபு சார் விளையாட்டுகள் ;
மாலையில் பல்லாங்குழி, தாயம், சதுரங்கம், பம்பரம், வளையல் சூட்டீஸ் போன்றவை விளையாடி மகிழ்கிறோம். மைதானத்தில் உடற்பயிற்சிகளும் செய்கிறோம்.
                 இணைப்பு - 7 (3 படங்கள் )                                                                                                                                         
19. பரதம் கற்றேன் ;
எந்த ஆசிரியரும் குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுத்தர இயலாது என்பது புரிந்த போது நான் களமிறங்கினேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முனைவர். மா.சுப.சரளா அம்மாவின் மாணவியாகி, மூன்று வருடங்கள் மிகவும் சிரமப்பட்டு கற்று, இன்று மாணவிகளை ஆட்டுவிக்கிறேன்.
                  இணைப்பு - 8 (3 படங்கள் )                                                                                                                                         
20. பாடல்கள் எழுதுதல் ;
இந்தியச்சூழலுக்கும், பாடப் பொருளுக்கும் ஏற்ப ஏராளமான ஆயத்தப் பாடல்கள் எழுதி இருக்கிறேன். அவற்றையும் பாடுகிறோம். எடுத்துக்காட்டாக,
                          WELCOME RAIN( Rhyme)
                    Rain, rain come here ;
                    Come again and often here ;
                    Little Rani wants to drink ;
                    Rain , rain come here. 
 21. கர்நாடக சங்கீதம்:
பாட்டு சொல்லிக் கொடுப்பதில் பின்னடைவு ஏற்பட்ட போது , அழகப்பா பல்கலைக் கழகத்தில் வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்ந்தும், இசையாசிரியர் திரு.முத்துகுமார் அவர்களிடம் தனிப் பயிற்சி பெற்றும் இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து, இன்று குழந்தைகளுடன் ஆதி, ரூபகம், திஸ்ர ஏகம் போன்ற எளிய தாளங்கள் போட்டு, பாடல்கள் பாடுகிறோம்.  பாட்டுப்போட்டிகளில் பரிசும் வென்று வருகிறார்கள் எங்கள் மாணவர்கள்.
         இணைப்பு - 9 (3 படங்கள் )                                                                                                                                         
22..களம் கண்டு கற்றல் :
சாலையோர தாவரங்கள், இலைகள், பூக்கள் சேகரித்தல், நீர்நிலைகளைப் பார்வையிடல், ரேஷன் கடை, மரப்பட்டறையில் உற்றுநோக்கல் என்று புறப்பட்டு நேரடி அனுபவம் பெற்று வருகிறோம்.
          இணைப்பு - 10 (3 படங்கள் )                                                                                                                                         
23.ஆங்கிலத்தில் கூவும் தமிழ்க் குயில்கள் :
 பள்ளியில் அடிக்கடி நடக்கும் விழாக்களில் என் மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவர். பாரதியார், கட்டபொம்மன், ஔவையார் என  எந்த வேடம் தரித்தாலும்  அவர்களின் பேச்சு ஆங்கிலத்தில் தான்.
          வீடியோ இணைப்பு -  4 , 5
24.உளவியல் செயல்பாடுகள் :
 மற்ற வகுப்புகளில் ஆசிரியர்களால் சமாளிக்க முடியாத மாணவர்கள், அழுது கொண்டேயிருக்கும் குழந்தைகள், உடல் நலமில்லை என்று பொய் சொல்லும் சிறுவர்கள்,அதிக சேட்டை செய்யும் குழந்தைகள் ஆகியோர் என் வகுப்பில் சில காலம் இருந்து, மாற்றம் பெற்று, திரும்பிச் செல்கின்றனர்.
25.  பள்ளியில் கண்காட்சி ;
பொம்மை உலகம் பாடத்திற்காக, ”பொம்மைக் கண்காட்சி நடத்தினேன். பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தயார் செய்து கொண்டு வந்த அனைத்துப் பொருட்களும் அருமை.
                 இணைப்பு - 11 (3 படங்கள் )                                                                                                                                         
26. அறிவியல் செயல்பாடுகள்
சிலந்தி அட்டையின் அத்தனை செயல்பாடுகளும் மாணவர்களே செய்வர். இன்றும் அறிவியல் சோதனைகளை ஆர்வமுடன் செய்கிறார்கள்.
          இணைப்பு - 12 (6 படங்கள் )                                                                                                                                         
27. உள்ளே வெளியே :
 வகுப்பறைக்குள் செடியின் வளர்ச்சியை அளப்பதற்குச் செடி வளர்ப்போம். வெளியே உயிர்வேலியாக நித்ய கல்யாணி போன்ற செடிகள் வளர்க்கிறோம்.
          இணைப்பு - 13 (3 படங்கள் )                                                                                                                                         
28.சுவர்களற்ற வகுப்பறை
கோள்களின் இயக்கம், விண்வெளிப் பயணம், கிரகணங்கள், விசைகள், சாலைக்குறியீடுகள் போன்ற பல பாடங்கள் மைதானத்தில் நடக்கும். (பாதி நேரம் இப்படியே ஓட்டு என்று முன்னாள் தலைமை ஆசிரியர் கடிந்து கொண்ட போதும் தொடர்கிறது. )
          இணைப்பு - 14 (4 படங்கள் )                                                                                                                                         
29. Map drawing:
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய நிலப்படங்கள் வாங்கிக் கொடுத்து, இந்திய எல்லைகள், அண்டை நாடுகள், அரசியல் அமைப்பு , இயற்கை அமைப்புகள் ஆகியவை வரையப் பயிற்சி அளிக்கிறேன்.ஆசையாக, அழகாகச் செய்கிறார்கள்.
         இணைப்பு - 15 (2 படங்கள் )                                                                                                                                         
30.சிறப்பு வகுப்புகள் :
 முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் எழுத்துகளை அடையாளம் காணுதலிலும், வாசித்தல் திறனிலும் அடைவு குறைவாக இருப்பதைக் கண்டறிந்து, அது எனது வகுப்பிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அதனால் சென்ற ஆண்டு  முதல் சனிக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
31. ஆண்டு விழாக் கொண்டாட்டம் :  
கடந்த ஐந்து வருடங்களாக ஆண்டு விழா நடத்தி வருகிறோம். நான் ஸ்கிரிப்ட் எழுதி அரங்கேற்றும் ஆங்கில நாடகம், வில்லுப் பாட்டு, பரத நாட்டியம் ஆகியவை  கட்டாயம் உண்டு. இரண்டு வருடங்களாக என் மாணவர்கள் நிகழ்ச்சி தொகுத்தளித்தலை, (compering) ஆங்கிலத்தில் வழங்கி அசத்துகிறார்கள்.
           இணைப்பு - 16 (4 படங்கள் )                                                                                                                                         
32. தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு :
 வாட்ஸ் அப் கதைகள், செய்திகளை வகுப்பில் வாசிப்போம்.
தேர்ந்தெடுத்த whats app படங்களைக் குறுந்தகட்டில் ஏற்றி, போட்டுக் காட்டுகிறேன். முகநூலில் எங்கள் பள்ளிக்கென்று தனியாக ஒரு பக்கம் தொடங்கி,பதிவுகள் இட்டுவருகிறேன். இப்பொழுது கணினி வழிக் கற்றலிலும் அடி எடுத்து வைத்து இருக்கிறோம்
         இணைப்பு-17(4படங்கள்)                                                                                                                                         .33.பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்கள்:
 வருடத்தில் ஒரு முறை பள்ளியின் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்துகிறோம், பல்கலைக் கழகம் மற்றும் DIET பேராசிரியர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருகிறோம். அவர்களின் அனுபவப் பேச்சுகள் அனைவருக்கும் பாடங்களாகின்றன. பருவத்திற்கொரு முறை வகுப்புவாரிப் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
         இணைப்பு - 18 (2 படங்கள் )                                                                                                                                          
34.பள்ளி நேரம் தாண்டி
 எப்பொழுதும் என் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், சில நேரங்களில் குறிப்பேடுகள் திருத்தம் செய்யவும், CCE மதிப்பீட்டிற்காகவும் , மதிப்பெண் பதியவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்குச் சென்று வருகிறேன்.
35. சிகரம் தொட்ட ஆசிரியர் விருது :
 சிறந்த முறையில் ஆங்கிலம் கற்பித்தலுக்காக வட்டார வள மைய அளவிலும், ஒன்றிய அளவிலும் இரண்டு முறை விருது பெற்றிருக்கிறேன்.
                இணைப்பு - 19 (2 படங்கள் )                                                                                                                                         
36.KING LEAR மற்றும் பாரத மாதா
B.Ed.படிக்கும் போது, நான் கதை தேர்ந்தெடுத்து, ஸ்க்ரிப்ட் எழுதி, இயக்கி, KING LEAR ஆக நடித்து எங்கள் பேராசிரியர்கள் பலரிடம் பாராட்டுகள் பெற்றேன்.அவ்வப்பொழுது பள்ளியில் பாரதமாதா, கலாம், இந்திராகாந்தி போன்ற வேடங்களில் வலம் வந்து ,மாணவர்களுக்கு ஆர்வமூட்டுகிறேன்.
        இணைப்பு - 20 (3 படங்கள் )                                                                                                                                         
37. கருத்தாளர் பணி :
 மாநிலக் கருத்தாளராகவும், மாவட்டக் கருத்தாளராகவும் ABL,SALM,COMMUNICATIVE ENGLISH போன்ற பல பயிற்சிகள் பெற்று, சிறந்த முறையில் வகுப்புகள் எடுத்துப் பலமுறை பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். மாவட்டக் கருத்தாளராக ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும். ஆசிரியப்பயிற்றுநர்களுக்கும் வகுப்பு எடுத்த போது பெற்ற நட்பும் ஒத்துழைப்பும் மிகவும் இனியவை. சென்ற ஆண்டு ICT பயிற்சி பெற்று, கருத்தாளராகவும் பணியாற்றியதில் கணினி பற்றி, நிறையக் கற்று, கற்றதைப் பள்ளியில் பயன்படுத்தியும் வருகிறேன்.
         இணைப்பு - 21 (3 படங்கள் )                                                                                                                                           
38.பொம்மலாட்டப் பயிற்சி:
2015 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் PUPPETRY IN EDUCATION பயிற்சி அளித்தார்கள். பொம்மலாட்டம் பற்றிய பல படிகளை அறிந்து கொண்டதோடு அல்லாமல், பல மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றியும் அறிந்து வியந்தோம்.
          இணைப்பு - 22 (4 படங்கள் )                                                                                                                                         
39. தொடக்கக் கல்வி முடித்ததும்:
ஆறாம் வகுப்பில் சேர, உள்ளூரிலமைந்துள்ள இரண்டு சிறந்த மேல்நிலைப் பள்ளிகளில் எங்கள்  பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களின் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
40.ஆசிரியர் எப்போதும் மாணவரே:
            இணைப்பு - 23 (4 படங்கள் )                                                                                                                                         
நான் அரசுப் பணியில் சேர்ந்த பிறகுதான் தொலைநிலைக்கல்வி வாயிலாக B.A., M.A., B.Ed., M.Phil ஆகிய பட்டங்கள் பெற்றேன். இதுவரை பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட அகில இந்திய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் தயாரித்து வழங்கி இருக்கிறேன் (Paper presentation). தற்பொழுது ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி (Ph.D.) செய்து வருகிறேன்.
            இணைப்பு - 24 (1 படம் )                                                                                                                                         
2014,டிசம்பரில் SCERT நடத்திய EFFECTIVE CLASSROOM PROCESSES AND PRACTICES TO ENABLE CHILDREN AS 21ST CENTURY CITIZENS என்ற கருவிலான  கருத்தரங்கில் முதன் முறையாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் Paper presentation செய்தது மிகவும் மகிழ்ச்சி.
       வீடியோ  இணைப்பு 6                                                                                                                          
                         
                 மனமுவந்து செய்யும் ஆசிரியப்பணி - அந்த
                 மகேசனுக்குச் செய்யும் அருட்திருப்பணி.
                                    நன்றி.