நான் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமையனூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்.
நான் 2006ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக, பணியில் சேர்ந்தேன். இரண்டரை ஆண்டுகளில் மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறன் 95% எட்டினேன். (பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை
40). இதற்க்கு படிப்பும் இனிக்கும் திட்டம் சிறப்பாக உதவியது. இந்தத் திட்டத்தில் கொடுக்கப்பட்ட அட்டைகளை, இன்று வரை நான் மாணவர்களின் வாசிப்பு திறனிற்க்காக பயன்படுத்தி வருகிறேன். வாசிப்பு திறனிற்க்காக படிப்பும் இனிக்கும் விருது எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
எப்பொழுதுமே மாணவர்களின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், உடல்நலம் சீராக இல்லையென்றால், மாணவர்களால் படிக்க இயலாது. 2007ஆம் ஆண்டு என்னிடம் முதல் வகுப்பு சேர்ந்த ஒரு மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து, அவரது பெற்றோரிடம் பேசினேன். அவருக்கு, இதயத்தில் துளை இருப்பதாகவும், மருத்துவத்திற்கு வசதி இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள். உடனே, எங்கள் ஊரில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனத்திடம் பேசி, அவரது இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, அவர் 9ஆம் வகுப்பு சிறப்பான முறையில் பயின்று வருகிறார். அவரை பார்க்கும்போதெல்லாம், மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, அளவிடமுடியாதது.
அன்று முதல் இன்று வரை, மருத்துவ உதவி தேவைப்படும் எம்மாணவர்களுக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து வருகிறேன்.
இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த பொது, ஆங்கில வாசிப்பு திறனிலும், அக்கறை காட்டினேன். என்னிடம் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 பேரில், 5 மாணவர்கள், 6 வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயிலும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயின்று, 10ஆம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இன்று 12ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்று வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியராக பணிப்புரிந்த பள்ளியில், இரண்டு ஆண்டுகளும், சிறப்பான முறையில் பல்வேறு போட்டிகள் மற்றும் ஆண்டு விழாக்கள் நடத்தினேன்.
2009ஆம் ஆண்டு, காட்டுமலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுப் பெற்று வந்தேன். பேருந்து வசதிக் கூட இல்லாத ஊரில், மாணவர்களுக்கு, படிப்பின் மீது ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதை உணர முடிந்தது.
உடன் வேலை செய்த, மற்ற ஆசிரியர்களின் உதவியோடு, பள்ளியின் நடைமுறைகளில் சில மாற்றங்களை செய்தோம். போட்டிகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. விளையாட்டு வழியே கல்வியை ஊக்கப்படுத்தினோம். இதனால், மாணவர்களின் வருகையும் அதிகரித்து, படிப்பில் ஆர்வமும் அதிகரித்தது. கணினி வழிக் கல்வியில் சிறப்பு கவனம் அளித்தத்தால், மாணவர்கள் ஆர்வமோடு பள்ளிக்கு வரத் துவங்கினர். பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் சிறப்பாக நடைபெற ஆரம்பித்தது.
பள்ளியில் கம்யூனிட்டி க்ளப் ஆரம்பிக்கப்பட்டு, அதன் வழி, பல்வேறு சுற்று சூழல் தொடர்பான செயல்பாடுகள், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் பதிவுகளை youtube-இல் எனது பெயரில் காணலாம்.
அறிவியல் என்பது செய்து கற்றல் ஆகும். எனவே, என் பள்ளியில் அனைத்து அறிவியல் பாடங்களையும், முடிந்தவரை, வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி, பாடம் கற்பிக்க ஆரம்பித்தேன். இது மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை அதிகரித்தது. இப்போது, எல்லா பாடங்களும், செய்முறை மூலம் சிறப்பாக நடைபெறுகிறது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மனநிலைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் பொருட்டு, தனியார் மனநல மருத்துவர் ஒருவர் தன்னார்வலராக என் பள்ளிக்கு வருகை தருகிறார்.
பெரிய அளவில் சாதனைகள் செய்யவில்லை என்றாலும், விருதுகள் எதுவும் பெறவில்லை என்றாலும், மாணவர்களின் உடல்நிலையில் அக்கறையோடும், அவர்களின் படிப்பில் ஆர்வத்தோடு இருப்பதையுமே சிறப்பாக எண்ணி பணிபுரிந்து வருகிறேன்.
நான் 2006ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக, பணியில் சேர்ந்தேன். இரண்டரை ஆண்டுகளில் மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறன் 95% எட்டினேன். (பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை
40). இதற்க்கு படிப்பும் இனிக்கும் திட்டம் சிறப்பாக உதவியது. இந்தத் திட்டத்தில் கொடுக்கப்பட்ட அட்டைகளை, இன்று வரை நான் மாணவர்களின் வாசிப்பு திறனிற்க்காக பயன்படுத்தி வருகிறேன். வாசிப்பு திறனிற்க்காக படிப்பும் இனிக்கும் விருது எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
எப்பொழுதுமே மாணவர்களின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், உடல்நலம் சீராக இல்லையென்றால், மாணவர்களால் படிக்க இயலாது. 2007ஆம் ஆண்டு என்னிடம் முதல் வகுப்பு சேர்ந்த ஒரு மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து, அவரது பெற்றோரிடம் பேசினேன். அவருக்கு, இதயத்தில் துளை இருப்பதாகவும், மருத்துவத்திற்கு வசதி இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள். உடனே, எங்கள் ஊரில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனத்திடம் பேசி, அவரது இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, அவர் 9ஆம் வகுப்பு சிறப்பான முறையில் பயின்று வருகிறார். அவரை பார்க்கும்போதெல்லாம், மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, அளவிடமுடியாதது.
அன்று முதல் இன்று வரை, மருத்துவ உதவி தேவைப்படும் எம்மாணவர்களுக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து வருகிறேன்.
இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த பொது, ஆங்கில வாசிப்பு திறனிலும், அக்கறை காட்டினேன். என்னிடம் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 பேரில், 5 மாணவர்கள், 6 வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயிலும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலேயே பயின்று, 10ஆம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இன்று 12ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்று வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியராக பணிப்புரிந்த பள்ளியில், இரண்டு ஆண்டுகளும், சிறப்பான முறையில் பல்வேறு போட்டிகள் மற்றும் ஆண்டு விழாக்கள் நடத்தினேன்.
2009ஆம் ஆண்டு, காட்டுமலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுப் பெற்று வந்தேன். பேருந்து வசதிக் கூட இல்லாத ஊரில், மாணவர்களுக்கு, படிப்பின் மீது ஆர்வம் மிகக் குறைவாக இருப்பதை உணர முடிந்தது.
உடன் வேலை செய்த, மற்ற ஆசிரியர்களின் உதவியோடு, பள்ளியின் நடைமுறைகளில் சில மாற்றங்களை செய்தோம். போட்டிகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. விளையாட்டு வழியே கல்வியை ஊக்கப்படுத்தினோம். இதனால், மாணவர்களின் வருகையும் அதிகரித்து, படிப்பில் ஆர்வமும் அதிகரித்தது. கணினி வழிக் கல்வியில் சிறப்பு கவனம் அளித்தத்தால், மாணவர்கள் ஆர்வமோடு பள்ளிக்கு வரத் துவங்கினர். பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் சிறப்பாக நடைபெற ஆரம்பித்தது.
பள்ளியில் கம்யூனிட்டி க்ளப் ஆரம்பிக்கப்பட்டு, அதன் வழி, பல்வேறு சுற்று சூழல் தொடர்பான செயல்பாடுகள், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் பதிவுகளை youtube-இல் எனது பெயரில் காணலாம்.
அறிவியல் என்பது செய்து கற்றல் ஆகும். எனவே, என் பள்ளியில் அனைத்து அறிவியல் பாடங்களையும், முடிந்தவரை, வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி, பாடம் கற்பிக்க ஆரம்பித்தேன். இது மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை அதிகரித்தது. இப்போது, எல்லா பாடங்களும், செய்முறை மூலம் சிறப்பாக நடைபெறுகிறது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மனநிலைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் பொருட்டு, தனியார் மனநல மருத்துவர் ஒருவர் தன்னார்வலராக என் பள்ளிக்கு வருகை தருகிறார்.
பெரிய அளவில் சாதனைகள் செய்யவில்லை என்றாலும், விருதுகள் எதுவும் பெறவில்லை என்றாலும், மாணவர்களின் உடல்நிலையில் அக்கறையோடும், அவர்களின் படிப்பில் ஆர்வத்தோடு இருப்பதையுமே சிறப்பாக எண்ணி பணிபுரிந்து வருகிறேன்.