Friday, 8 January 2016

திரு.மணிமாறன்

1.Map உருவாக்கினோம்.
தெர்மோகோலில் இந்திய வரைபடம் வரைந்து அதை ஒவ்வொரு மாநிலமாக பிரித்து பின் இந்தியா வரைபடம் உருவாக்கினோம்

இதன் மூலமாக மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் ஒவ்வொரு மாநிலத்தினையும் தனித்தனியாக தெரிந்து கொண்ட னர். பெரிய அளவு உள்ள தெர்மோகோல்.
2. கதை நூல்கள் வாசித்தல் - நூலத்திற்கு அழைத்துச் சென்று போட்டி வைப்போம் ஓராண்டில் எவ்வளவு கதைகளை படித்தனர் என்றும் அதனை எவ்வாறு வெளிக் கொணர்ந்தனர் என்றும்
3.ஒவ்வொரு மாணவருக்கும் 10 மரக்கன்றுகளைக் கொடுத்து வளர்க்க செய்தோம் அவை வளர்ச்சி அடைந்த வீடுகளுக்குச் சென்று பாராட்டி பரிசளித்தோம்.
4. பள்ளிக்குப் போதுமான இடம் இலலாத போது சுமார் 2.5 ஏக்கர் மெயின் இடத்தில் சந்தை மதிப்பு ரூ.3000000/- இடத்தினை இலவசமாக வாங்கி புதிய இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்டினோம்.
5. அறிவியல் கண்காட்சி ஒன்றிற்கு பள்ளியில் ஏற்பாடு செய்து அதில் ஒன்றியத்தில் இருந்த அனைத்து பள்ளிகளையும் பங்கேற்க வைந்தோம்.
6. பள்ளியில் பயின்ற 250 மாணவர்களுக்கும் இலவசமாக புத்தாடை வாங்கித் தந்தோம்
7. ஆண்டு தோறும் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினோம்
8. குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து அனைத்து குழந்தைகள் பங்கேற்கும் மன்றங்களை இயக்கினோம்.
மாணவர்களைக் கொண்டே நிகழ்த்திடும் நிகழ்வுகள் மாதம் தோறும் நடத்தினோம்.
இவை அனைத்தும் 2004-2008 ஆம் ஆண்டுகளில்.
மருத்துவ மனை, கோவில்கள், வயல்வெளிகள், அஞ்சலகம்,இரயில்நிலையம், பேருந்து நிலையம், வங்கி இவற்றினை வகுப்பறையாக மாற்றினோம்.
10. மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கங்களை ஊக்குவித்தோம்..முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் அழைத்துப் பாராட்டினார்.
11.இரவு வான் நோக்கும் நிகழ்வினை நிகழ்வினை இரண்டு telescope உடன் நிகழ்த்தினோம்
12. Childline உதவியுடன் குழந்தைகள் உரிமைகளை தெரிய வைத்தோம்.
தீயணைப்பு அலுவலர்களை அழைத்து அவர்களது செயல்பாடுகளை தெரிய வைக்க விழிப்புணர்வு தீபாவளி கொண்டாடிடோம்..
மாணவர்கள் தயாரித்த நூல்களை விற்பனை செய்து புதிய விற்பனை நிலையங்களை உருவாக்கினோம்..காய்கறிச்சந்தை அமைத்தோம்.
இதனைப் பாராட்டி பக்கத்தில் இருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருந்து 150 கடிகாரங்களை பரிசாக வழங்கினர். ஒவ்வொன்றின் மதிப்பு ரூ.250/-
இப்போது 2015,2016 செய்து வருபதை முகநூலில் மணிமாறன் என்ற பக்கத்தில் காணலாம். இவை அனைத்தும் 2008 வரை செய்தது. இப்போது பழமையாக இருக்கலாம்.. அப்போது புதுமையான நிகழ்வு . 2009-2014 மற்றொரு முறை பதிவிடுகின்றேன் நன்றி அக்கா.

No comments:

Post a Comment