Friday, 8 January 2016

திரு.இராஜேஷ்

அனவருக்கும் வணக்கம்
என் பெயர்
இரா.இராஜேஷ்
கணித ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
வடசிறுவளூர்,
ஒலக்கூர் ஒன்றியம்,
விழுப்புரம் மாவட்டம்.
நான் 11 ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளியில் கடைசி 9 ஆண்டுகள் என்னிடம் தொழில் வரி வசூலித்ததே இல்லை.என்னை தொடர்ந்து எனக்கு பின் வந்தவர்களிடமும் வசூலிப்பதில்லை..இதனை என் பணிக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறேன்..
த ஆ இல்லாத,புதிதாக தொடங்ப்பட்ட பள்ளியில் டிசம்பர் 2000 த்தில் பணியில் சேர்ந்தேன்.பணியில் சேர்ந்த 1 ஆண்டுகளிலேயே கட்டிடம் இல்லா புதிய பள்ளிக்கு பொறுப்பு த ஆ ஆனேன்...அப்போது என் வயது 20 ஐ கூட தொட்டிருக்காது...
முதல் வேலையாக கிராம மக்களிடம் பேசி பள்ளிக்கு இடத்தை பெற்றேன்..பின்பு பள்ளிக்கட்டிடமும் கட்டினேன்.கல்வெட்டில் என் பெயர் பொறிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.பணியில் சேர்ந்த மூன்றாவது ஆண்டு ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த ஆசிரியர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்..இதற்கான சான்றிதழை அப்போதைய CEEO அவர்கள் கையால் பெற்றேன்.
கற்றல் என்பது மாணவர்கள் விருப்பப்படி அமையவேண்டும் எனபதை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு ஆசிரியர் பணியை செய்துவருகிறேன்.கற்ப்பித்தலை பொறுத்த வரை மாணவர்கள் தங்கள் முகத்தில் காட்டும் reaction ஐ வைத்தே என்னை மதிப்பிட்டுக் கொள்கிறேன்.மாணவர்கள்தான் நம் எஜமானர்கள் என்பதையும் நன்கு உணர்ந்து செயல்பட்டுவருகிறேன்.
2003 ஆண்டே கணினி பாடத்தை நடத்த எனக்கு தெரிந்த கணினி மையத்தில் இருந்து 300 ரூபாய் வாடகைக்கு எடுத்துச் சென்று பாடம் நடத்திய அணுபவம் உண்டு..துணைக்கருவிகள் கொண்டு பாடம் நடத்துவதில் சிறப்பான ஆசிரியர் என்ற பெயரையும் பெற்றேன்..அனுபவங்கள் கற்றுதந்த பாடத்தின் மூலம் மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக நடத்துவது என்பதை அறிந்து அதன் வழி கற்பித்தலை செய்தேன்..எம்மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் என அனைத்திலும் சிறந்து விளங்கினர்.ஒன்றிய அளவில் நடந்த மெட்ரிக் மேளா,அறிவியல் கண்காட்சி,விளையாட்டு போட்டிகள் என அனைத்திலும் பரிசில்லாமல் திரும்பியதே இல்லை..ஒன்றியத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக அனைத்து அதிகாரிகளாலும் பாராட்டை பெறத்துவங்கியது.
எங்கள் பள்ளியில் மிகவும் நன்றாக படித்த மாணவர்கள் 5 ஆம் வகுப்பு முடித்து வெளிப் பள்ளிகளுக்கு செல்லும் போது போதிய கவனிப்பின்றி சரியாக படிக்காமல் போனது எங்களுக்கு பெரும் வேதனையை தந்தது.அந்த நிலையை மாற்ற நாங்களே அவர்களை நல்ல பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினோம்..அது நல்ல பயனைத் தந்தது..அவர்கள் 12 வகுப்பு முடிக்கும் வரை அவர்களை கண்கானிக்க தொடங்கினோம்.அதன் பயனாக அந்த கிராமத்தின் முதல் பொறியாளரை உருவாக்கினோம்.அம்மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் படித்தது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது..
தம் பிள்ளைகளை பணம் கொடுத்து படிக்க வைக்கும் பெற்றோர்களை நம் பள்ளிக்கு அழைத்து வந்து எம் மாணவர்களின் திறமையை காணச் செய்தோம்..பார்த்து வியந்த பலர் அடுத்த ஆண்டே எங்கள் பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்துவிடுவர்..
தற்போது அந்த கிராமத்தில் பல பொறியாளர்கள் உருவாகிவிட்டனர்..அக்கிராம மக்களின் அன்பை பெற்ற எனக்கு அவர்கள் புத்தாடைகள் எடுத்து தருவர்..அதிசய நிகழ்வாக அவர்கள் இல்ல விழாக்களின் அழைப்பிதழ்களில் ஊர் தலைவர் பெயருக்கு அடுத்து என் பெயரை போடுவர்..சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்வர்
இடையில் வேறு பள்ளியில் நடந்த பிரச்சனையை சமாளிக்க என்னை நிர்வாக மாறுதலில் அனுப்பினர்..இதை கேள்விப்பட்ட அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2 நாட்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு மாறுதல் ஆணையை ரத்து செய்தனர்..
பள்ளிக்கு த ஆ நியமிக்கப்பட்டார்.அதுவரை சுதந்திரமாக செயல்பட்ட நம் கைகள் கட்டப்பட்டன..பாடம் நடத்துவதோடு நம் வேலையை சுருக்கிக் கொண்டேன்..இப்படியே சில காலம் ஓடியது..2011 ல் அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்..அப்போது ஊர் கூடி நடத்திய பிரிவு உபசாரவிழாவை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது..
புதிய பள்ளிக்கு வந்ததும் சிறிது காலம் சூழலை பார்த்து,யாருக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம் என் புதிய முயற்ச்சிகளை செய்யத் தொடங்கினேன்..கணித பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தி,மற்ற எல்லா பாடங்களை விட கணிதம் மிக எளிமையாக கற்கக் கூடய பாடம் என்பதை மாணவர்களுக்கு புரியவைத்தேன்.மற்ற பாடங்களை போல் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...கவனித்தாலே போதுமானது என்பதை மாணவர்கள் உணர்ந்தனர்..
இதற்க்கிடையே ஆசிரியர்களுக்கு இடையே நடந்த கணிதம் கற்பித்தல் போட்டியில் ஒன்றிய அளவிலும்,மாவட்ட அளவவிலும் வெற்றி பெற்று "சிகரம் தொட்ட ஆசிரியர் " என்ற பரிசை பெற்றுள்ளேன்..
கற்றல் என்பது மாணவர்கள் விருப்பப்படி அமையவேண்டும் எனபதை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு ஆசிரியர் பணியை செய்துவருகிறேன்.கற்ப்பித்தலை பொறுத்த வரை மாணவர்கள் தங்கள் முகத்தில் காட்டும் reaction ஐ வைத்தே என்னை மதிப்பிட்டுக் கொள்கிறேன்.மாணவர்கள்தான் நம் எஜமானர்கள் என்பதையும் நன்கு உணர்ந்து உள்ளேன்.
பாடல்கள் மூலம் பாடக்கருத்தினை புரிய வைக்க முயற்சி செய்வேன்...அப்படி எழுதிய என்னுடைய பாடல் ஒன்று ABL அட்டையில் வந்துள்ளது..
கணித பாடத்தை பொறுத்தமட்டில் syllabus க்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,தேர்வு நோக்கத்தில் பாடம் நடத்தாமல் objective type questions க்கு தனியாக நோட்டு போட்டு,அதற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்..இது நல்ல பலனை தருகிறது..
கணித பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த செஞ்சி சத்தியவேல் ஆசிரியர் வழங்கிய tuxmath போன்ற கணினி application களை பயன்படுத்திவருகிறோம்.
2014 ஆண்டில் எங்கள் பள்ளி மாணவர்களோடு இணைந்து செய்த செயல்திட்டம் DFC top 100 செயல்திட்டங்களில் ஒன்றாக தேர்வானது..இது தான் எங்கள் பள்ளிக்கும் என கற்பித்தல் பணிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது..உமா அக்காவின் அரவணைப்பிற்க்குள் வந்தோம்..அதற்க்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறத்துவங்கியது...திலிப் சாரின் நட்பு கிடைத்தது..மதுரை digital training என் கற்பித்தல் பாணியில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது..இந்த நேரத்தில் ஆசிரியர் செந்தில்செல்வன் அவர்களை நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்...கற்பித்தலுக்கு உதவும் கணினி மென்பொருட்களை நன்கு கற்றறிந்து அதை வகுப்பரையில் செயல் படுத்ததுவங்கினேன்..அது நல்ல பலனை அளித்தது..
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தை நடத்துவர்..அதில் தினமும் திருக்குறள், அறிவியல் செய்தி,கணிதச் செய்தி,பொது அறிவு,விடுகதை,proverb,சிந்தனை,தமிழ்செய்திகள்,ஆங்கிலச் செய்திகள் வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
என்னதான் நாம் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரே முகத்தை பார்ப்பதற்க்கு மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும்...அதை சமாளிக்க கதை சொல்லும் நிகழ்வு,easy maths,பொம்மலாட்டம் நிகழ்ச்சி என மாதந்தோறும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அந்தந்த துறையில் பிரபலமானவர்களை கொண்டு நடத்தி வருகிறோம்.
ஐயப்பன் ஆசிரியரின் phonetic CD பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காலகடத்தில் நண்பர்களோடு இணைந்து ஒரு விடுமுறை நாளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்த அனுபவம் அதிகாரிகள் அளவில் பெரிதாக பேசப்படது
Inspire award அறிவியல் கண்காட்சிகளில் எம் பள்ளி மாணவர்களை தயார் செய்து இரு முறை மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளோம்..நாங்கள் தொழிற்முறை கலைஞர்களுக்கு இணையான வில்லுப்பாட்டு குழு(மாணவர் குழு) ஒன்றை உருவாக்கியுள்ளோம்..அதன் மூலம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்..
சென்ற ஆண்டு கணித ஜாம்பவான் சாலை அகரம் பள்ளியின் ஆசிரியர் திரு சீனுவாசன் அவர்களின் நட்பு கிடைத்தது..அவரோடு இணைந்து அவருடைய தலைமையில் எளிமையாக கணித கற்பித்தலுக்கு உதவும் CD,தமிழ் CD க்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.அவரிடம் கற்ற வித்தைகள் ஏராளம்..அவரை என் குரு என்று கூறிக்கொளவதில் பெருமைப் படுகிறேன்
நண்பர் ஆரோக்கியராஜ் உடன் இணைந்து கலாம் பற்றிய album song தயார் செய்தோம்..மேலும் விழுப்புரம் மாவட்ட ICT முத்துக்களான திலீப் சார்,சத்தியவேல்,சங்கர நாராயணன்,வேலூர் மாவட்ட தெருவிளக்கு கோபிநாத் ஆகியோரிடம் இருந்து நாள்தோறும் கற்றல் நடந்து கொண்டு தான் இருக்கிறது..
செஞ்சி தமிழரசன் ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின்படி பள்ளியில் கருத்துசுதந்திரப் பெட்டி வைத்து மாணவர்களின் மனஓட்டத்தை அறிந்து செயல்படுகிறோம்..
கணித பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த செஞ்சி சத்தியவேல் ஆசிரியர் வழங்கிய tuxmath போன்ற கணினி application களை பயன்படுத்திவருகிறேன்
எமக்களித்த மிகப்பெரிய கொடையாக camtasia மென்பொருளை கருதுகிறேன்..கற்ப்பித்தலுக்கு மட்டுமல்லாமல்,மாணவர்களின் வித்தியாசமான செயல்பாடுகளை அவர்களுக்கு படமாக திரையிட்டு காட்டுவதற்க்கும் இம்மென்பொருளை பயன்படுத்துகிறோம்.இதன் மூலம் மாணவர்கள் மேலும் உற்சாகமாக செயல்படுகின்றனர்
கற்பித்தலில் சீனுவாசன் சாரயும்,பல்துறை திறமைகளில் தெருவிளக்கு கோபிநாத்தும் ,சமூக ஒத்துழைப்பை பெறுவதில் வசந்த் கிரிஜாவையும் பார்த்து வியக்காத நாளே இல்லை..
எது எப்படி இருந்தாலும் இன்னும் கற்பித்தல் திறனில் முழுமை பெறாதவனாக ,இன்னும் நிறைய கற்க வேண்டும் என்பதிலேயும்,மற்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலும் ஆவலாக உள்ளேன்..

No comments:

Post a Comment