Friday, 8 January 2016

திரு.சதிஷ்குமார்

சி.சதிஷ்குமார்
பணிநிலை:
       இடைநிலை ஆசிரியர்
கல்வித்தகுதி:
     MA, MBA, MSW, DTEd, FCED
பள்ளி:
ஊ.ஒ.தொ.பள்ளி
எருக்கலக்கோட்டை
அறந்தாங்கி
புதுக்கோட்டை
2004 ..
பணியில் சேர்ந்த ஆண்டு
ஊ.ஒ.தொ.பள்ளி வீரராகவபுரம்
2006
ஊ.ஒ.தொ.பள்ளி
அலஞ்சிரங்காடு
2006- 2014
ஊ.ஒ.தொ.பள்ளி
வேம்பங்குடி (மே)
2014 முதல்
தற்பொழுதையப் பள்ளி
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி என்னும் தாகூரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்...
அதனடிப்பயிலேயே எனது கல்விப்பணி அமைகிறது...
கற்றுக்
கொடுப்பவரெல்லாம் எவரிடமிருந்து கற்கிறோமோ அவரே ஆசிரியர் என்பதை உணர்ந்து நான் ஆற்றிவரும் பணிகளை உங்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்.
நான் பணியேற்றது என்னவோ 2004 ஆக இருந்தாலும் நான் 2006 முதல் பணியாற்றிய பள்ளியில்தான் எனது கனவை அரங்கேற்றினேன்.
முதலாக அப்பள்ளியில் நான் சேர்ந்தபொழுது அத்தொடக்கப் பள்ளியில் 102 மாணவர்கள் பயின்றனர். நான் எனது தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் சில திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கினேன். முதலாவதாக வண்ணச்சீருடை
தனியார் பள்ளிகளில் இருப்பதைக் காட்டிலும் மாணவர் சீருடை மாற்றம் செய்வோம் என்று செய்து PTA கூட்டம் மூலம் முடிவு செய்து அறிவித்து, வண்ணச்சீருடை அணிவித்தோம். தனியாக ஒருநாள் முழுவதும் விளையாட்டு விழாவை நடத்தி ஆண்டுவிழா தனியாக நடத்தினோம். இதை மட்டுமே செய்ததற்குப் பலன் மாணவர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.
கணினி அறை
மாணவர்களின் கல்வியை உயர்த்த முடிவு செய்து
கொடையுள்ளம் கொண்டோரைத் தேடிச் சென்றதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரைக் கண்டறிந்து அவரிடம் கணிணி அறை ஏற்படுத்தும் திட்டமிடலைக் கூறி அதற்கு ரூ 2.80 லட்சம் நிதி கேட்டு இன்று கண்ணாடி அறையால் சூழப்பட்ட அறையில் 5 கணினிகள்  தரை விரிப்புகள் சுழல் நாற்காலிகள் கொண்ட கலாம் கணினி அறை எனப் பெயரிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கொண்டு திறக்கச் செய்து, பின் அரசு சார்பில் 2 கணினி வழ்ங்கப்பட்டு 7 கணினிகளைக் கொண்ட தனி அறை தனி ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது...பள்ளியில் பயிலும் மாணவரில் பெரும்பான்மையர் கணினி அறிவுள்ளவராக தொடக்கப் பள்ளியில் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது..
பசுமைப்படை
பின்னர் அரசு உயர் & மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே இருக்கக் கூடிய பசுமைப்படையினை மாவட்ட பசுமைப்படை அலுவலரை அனுகி பள்ளியில் பசுமைப்படைத் திட்டத்தினை ஏற்படுத்தி அனைத்து வகையான சுற்றுச் சூழலியல் தினங்களையும் கொண்டாடப்பட்டு வந்தது.
மாணவர் சிறு சேமிப்புத் திட்டம்
பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை வரவழைத்து PTA  கூட்டம் கூட்டி தொடங்கினோம். மானவர்கள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக
ரூ 40000 சேமித்து வருகின்றனர்.
குங்பூ தற்காப்பு
மாணவர்கள் அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என முடிவு செய்து மாதம்.ஒரு மாணவருக்கு ரூ 25 என முடிவு செய்து தற்காப்பு பயிற்சி வழங்கினோம்.. தொடர்ந்து 3 ஆண்டுகள் நடைபெற்ற பயிற்சி இப்போது தடைபட்ட நிலையில் உள்ளது...
102 லிருந்து 141 ஆன தொடக்க நிலை மாணவர் எண்ணிக்கை 161 ஆனது.
அடுத்ததாக மாணவர்களுக்கு இருவகையான எழுத்துப் பயிற்சி நோட்டுகள், முதல் வகுப்பிற்கு கட்டம் போட்ட நோட்டுகள் வழங்கி பயிற்சி ஆரம்பித்தோம்.
அனைத்து வகுப்புகளுக்கும்
இரு மின்விசிறிகள் வசதி, தொலைக்காட்சி, ஆடியோ வசதி என நவீனப்படுத்தினோம்...
ஆசிரியப் பயிற்சி  மாணவர்கள் எம்பள்ளிக்கு வந்தால் சிறப்பாக கற்க முடியும் என்னும் நிலையை உருவாக்கியதன் விளைவு ஒரே நேரத்தில் 15 பயிற்சி ஆசிரியர்கள் எம் பள்ளியைத் தேர்வு செய்து வந்தனர்...
கல்வி வளர்ச்சி நிதியை ஏற்படுத்தி பள்ளி நிதியாக ரூ. 72000 பள்ளி நிதியாக வைப்பில் உள்ளது..
சதுரங்கப் பயிற்சி அளிக்க ஆரம்பித்து தொடர்ந்து 3 ஆண்டுகள் எம்பள்ளி மாணாக்கர்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினர்.
மாவட்டத்தில்  CEO, SSA CEO, DEEO,DIET principal என அனைத்து வகை கல்வி அதிகாரிகளாலும் பார்வையிடப்பட்டு பாராட்டப்பட்ட தொடக்கப்பள்ளியாகத் திகழ்ந்தது.
சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழக விருது பள்ளிக்கு கிடைத்தது.
SSA மூலம் எனக்கு சிகரம் தொட்ட ஆசிரியர் விருது கிடத்தது, அரிமா சங்க விருது, தனிமனித மேம்பாட்டு இளைஞர் விருது என சில அங்கீகாரங்கள் எனது பணிக்காக கிடைத்தன.
மாணவர்களிடம் நான் எப்பொழுதும் ஒரு சக மாணவனாக மட்டுமே பழகி வருகிறேன். பெற்றோரிடத்தில் சக சமூகத்தினனாக மட்டுமே பழகி வருகிறேன்.
இறுதியாக நான் தெரிவிக்க விரும்புவது...
ஒன்றுதான்
பள்ளிசார் சமுதாயத்தை எந்தப் பள்ளி பயன்படுத்திக் கொள்கிறதோ...
எந்த ஒரு ஆசிரியர் பள்ளிக்காக சமுதாயத்தை நாடுகிறாரோ...
ஈகோ இல்லாமல் எங்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரோ..
அந்தப் பள்ளியும் அந்த ஆசிரியரும் ,
அந்த சமுதாயமும் சிறந்ததாய் விளங்கும் என்பது மட்டுமே நான் எனது அனுபத்தில் கற்றுக்கொண்ட கல்வியாகும்
நன்றி.....

No comments:

Post a Comment