Wednesday, 9 March 2016

திரு.விஜயகுமார்

அசத்தும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். என் பெயர் மு. விஜயகுமார். விழுப்புரம் மாவட்டம் ,கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள  சோமண்டார்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். இக்குழுவிலுள்ள பலரை போல எனது அரசு ஆசிரியப்பணியை இடைநிலை ஆசிரியராக 2007 ஆம் ஆண்டு தொடங்கினேன். பள்ளி பருவம் முழுதும் ஆங்கில வழியில் பயின்றும் , ஆங்கில வழிப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தும் , ஒரு மிகப்பெரிய கற்பனையுடன் இரிஷிவந்தியம் ஒன்றியம், கீழ்பாடி தொடக்கப்பள்ளியில் பணியை தொடங்கினேன். கற்பனையில் சில மட்டும் உண்மையானது (குழந்தைகள் குழந்தைகளாக இருந்தனர்) பலவை (கற்றல் நிலை, உடை, செயல்கள்) சவாலாகவும் புதுமையாகவும் இருந்தது. முதல் நாளிலிருந்தே, எனது கற்பனைகளை களைந்துஅவர்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவடுத்து இன்று வரை அதை பின்பற்றி வருகின்றேன்.⁠⁠
முதல் வகுப்பு கொடுக்கப்பட்டது. முதல் நாள் கையில் சுன்னக்கட்டியை எடுத்த நான் ,இரண்டாம் நாள் பள்ளிக்கு ஊசி நூலோடும் , சிறிது பொத்தான்களையும் வாங்கிக்கொண்டு போனதை என் பெற்றோர் ஆச்சரியமாகவும், மகிழ்வோடும் பார்த்தனர். ஆம்.இரண்டாம் நாளில் எனது முதல் வேலையாக எனது முதல் வகுப்பு பல குழந்தைகளின் சட்டையில் பொத்தான்களை நானே தைத்தேன். (பல குழந்தைகளின் சட்டையில் ஒன்று அல்லது இரண்டு பொத்தான்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது). என் குழந்தைகளுக்காக "ஏதேனும் நன்மை செய்து கொண்டே இருக்க  வேண்டும்" என்ற எண்ணச்சுடர் இன்றளவும்  இங்குள்ள ஆசிரியர்களுக்கு உள்ளதைப்போல எனக்கும் சிறிதும் குன்றாமல் எரிந்து வருகின்றது. குளிக்காமல் வந்த மாணவர்களுக்கு சோப் வாங்கிக்கொடுத்து குழாய் மூலம் சில ஆசிரியர்களுடன் இணைந்து குளிப்பாட்டிய அனுபவமும் உண்டு.  குழந்தைகளோடு குழந்தையாக கலந்து விளையாட்டு மூலமும் ,ஆடல் மற்றும் பாடல் மூலமாகவும்  கற்பிக்கத்தொடங்கினேன்.
எனது பள்ளிக்கு வழங்கப்பட்ட இரண்டு கணினிகள் , கணினி பாகங்களை பொறுத்த ஆள் வரவில்லையென , பெட்டி திறக்கப்படாமல் இருந்து வந்தது. அவற்றை தலைமை ஆசிரியர் அனுமதியுடன் பொருத்தி(முதற் முயற்சி) பயன்பாட்டுக்கு கொண்டுவந்தேன். சில ஆசிரியர்களும் ஒத்துழைக்க மாணவர்களுக்கு CD  பல வாங்கிவந்தும் கற்றல் நிகழ்வில் பயன்படுத்தினேன். இரண்டாம் ஆண்டில் புரஜக்டரும் வழங்கப்படவே, இதற்கென அட்டவணை தயாரித்து அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் தொடர்பான படங்கள்வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. பல புதிய முயற்சிகள் மேற்கொண்டு கற்பித்துவந்தேன். முதல் CRC கூட்டதிலேயே கருத்தாளராக பங்கேற்கும் வாய்ப்பு பெற்று, இன்று வரை ஒன்றிய , மாவட்ட , மாநில கருத்தாளராக இருந்து வருகின்றேன்.
இரண்டே ஆண்டுகளில், பள்ளிப்பட்டு ஊ. ஒ. நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். வருடம் ஒரு பள்ளியில் பணிபுரிந்த எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த பள்ளி இது. 5 வருடங்கள் பணிபுரிந்தேன். ஆங்கில பாடத்தை கடினம் என்று நினைத்த குழந்தைகளுக்கு எளிமையான முறையிலும், விளையாட்டு முறையிலும் ஆங்கிலத்தை அதுவும் குறிப்பாக ஆங்கில இலக்கணத்தை கற்பிக்கத் தொடங்கினேன். இதற்கு பக்க பலமாக கணினி சார்ந்த பொருட்கள்  பெரிதும் உதவியது. Situational Approach மூலமாக நடத்தவிருக்கும் தலைப்பை ஒட்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய பிறகே, அன்று நடத்த இருக்கின்ற தலைப்பையே கூறுவேன். பள்ளியை தவிர  எதற்கும் வெளியே எந்த போட்டிக்கும் சென்று கலந்துகொள்ளாத குழந்தைகளை பேச்சு  போட்டி, கட்டுரைப்போட்டி, சதுரங்கம், நடனம், கலை நிகழ்ச்சி போட்டிகள் என ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் 4 ஆசிரியர்களே பணிபுரிந்து இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஊர் தலைவர், முக்கியஸ்தர்கள் என பலரின் பார்வை பள்ளி பக்கம் திரும்பியது. நேரில் பாராட்டிச் சென்றனர் AEEO மற்றும் பெற்றோர்கள்.
தலைமை ஆசிரியர் களப்பணி செய்யவில்லை என்றாலும், என் மீதுள்ள நம்பிக்கையால் முழு சுதந்திரம் அளித்தார். பெற்றோரின் பார்வையும் பள்ளி பக்கம் திரும்பி நல்ல ஒத்துழைப்பு வழங்கிட, மாணவர் சேர்க்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தது.  1957 ல் ஆரம்பித்த பள்ளியின் முதல் ஆண்டு விழா மிகவும் சிறப்பான முறையில் , நான் பணியேற்ற முதல் வருடம் நடந்தது. மேடையில் ஐந்தாயிரம் ரூபாய்  பொது மக்கள், நன்கொடையாக வழங்கினர். எங்கள்  வேண்டுகோளை ஏற்று ஊர் தலைவர் சிறப்பான மேடை அமைத்து கொடுத்தார். பின்னர் தொடர்ச்சியாக ஆண்டு விழாவினை நடத்தினோம்.  அறிவியல்  ஆசிரியர்  இல்லாத போதிலும் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் அறிவியல் கண்காட்சியில் எனது மாணவர்களை பங்கேற்க செய்து பல பரிசுகளை வென்றிட வழிகாட்டினேன். பிறகு அனைத்து காலிப்பணியிடங்களும் நிறம்ப, சிறப்பான மாற்றங்களை இணைந்து கொண்டுவநதோம்.⁠⁠
பள்ளிக்கு அருகே என்றும் பூட்டப்பட்ட  நூலகத்தை, மாணவர்கள் பயன்படுத்தும் நோக்கில் முயற்சி செய்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரம்  இரண்டு பாட வேலைகள் நூலகத்திற்கு ஒதுக்கி, மாணவர்களை அங்கேயே அழைத்து சென்று, வாசிப்பு பழக்கத்தை வளர்த்தோம். வீட்டிற்கும் புத்தகங்களை  கொண்டு செல்ல அனுமதி பெற்று, முறையாக பயன்படுத்தினேன். அதிகாரிகளின் பாராட்டும் கிடைத்தது. பாடங்களை ஒட்டிய களப்பயணம் அதிக அளவில் கூட்டிச்சென்று இயற்கையோடு இணைந்த கல்விக்கு வழி வகுத்தேன். பல செடிகளை நட்டு மாணவர்களின் பெயர் வைத்து , அதை பராமரித்தோம். English club, Eco club, Cleanliness club, Hygiene club, Water club, Sports club, First aid club என பள்ளியின் 5-8 அனைத்து மாணவர்களும் பங்கேற்கும்படி குழுக்கள் அமைத்து, ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து செயல்படுத்தினோம். இரண்டாம் வருட ஆண்டு விழாவில்(2011) த.ஆ ஆண்டறிக்கை படிக்க படிக்க  , அது தொடர்பான அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் புரஜக்டர் மூலம் பொதுமக்களுக்கு காண்பித்தேன். இது பெரும் வரவேற்பு, நம்பிக்கை மற்றும் பாராட்டும் பெற்று தந்தது. அவ்வருடம் மாணவர் சேர்க்கை நன்கு அதிகரித்தது.
தினமும் வழிப்பாட்டு கூட்டத்தில் 5 ஆங்கில வார்த்தைகள், spelling, pronunciation, meaning ஆகியவை முடிந்த வரை உண்மை பொருட்களை காண்பித்து மாணவர்களை கூற  செய்தேன். அந்தவார வெள்ளிக்கிழமை மதிய வேளையில் English club members சிறுதேர்வு வைப்பார்கள். 25 /25 பெறுபவர்களுக்கு என் செலவில் பென்சில், பேனா, அளவுகோல் போன்றவை திங்கள் பொது வழிப்பாட்டுக்கூட்டத்தில் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக எடுக்கும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசளிக்கப்படுவார்கள். சிறந்த club ஆக தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு கோப்பை வழங்கப்படும். NMMS தேர்வில் மாணவர்களை பங்கேற்கச்செய்து இதுவரை பத்து  மாணவர்கள் (நான்கு ஆண்டுகளில்) வெற்றி பெற்றுள்ளனர். இவ்வெற்றிக்கு பின்னர்  CRC அளவில்  வகுப்பு நடத்தினோம். பெயரளவில் இல்லாமல் JRC counselor ஆகவும் , ஒன்றிய கன்வினியராகவும்  சிறப்பாக செயல்பட்டு பல அதிகாரிகளின் பாராட்டும் பெற்றேன். என்னை ஒரு ஆங்கில, அறிவியல், நடன, நாடக, உடற்கல்வி, கணினி, கலை ஆசிரியராக மெருகேற்றியது இப்பள்ளிதான்.⁠⁠
இச்சமயத்தில் தொடக்ககல்விதுறையிலிருந்து , பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில், சோமண்டார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். இங்கும் எனது வகுப்பறை செயல்பாடுகளில் ICT கருவிகளை இணைத்து கற்பித்து கொண்டிருக்கின்றேன். பயன்படுத்தப்படாத புரஜக்டர் பயன்பாட்டுக்கு வந்தது. பள்ளி மடிக்கணினி பெறுவதில் ஒரு சில சங்கடம் ஏற்படவே , எனக்கென்று ஒன்றை 40,000 செலவில் வாங்கினேன்.  இன்னும் சில காரணங்களால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியால் புரஜக்டர் மற்றும் டேப்லட் ஆகியவை புதியதாக வாங்கப்பட்டு  பயன்பாட்டில் இருக்கின்றது. நடுநிலைப்பள்ளியில் கிடைத்த சுதந்திரம், ஆசிரியர்கள் & தலைமை ஆசிரியர்  ஒத்துழைப்பு இங்கு கிடைக்கவில்லை. எனினும் இந்த ஒரு வருடத்தில் பல மாற்றங்களை மெதுவாக செய்து கொண்டு வருகின்றேன். ரோட்டரி சங்கம் உதவியுடன் ஒரு லட்சம் மதிப்புள்ள நீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. Waste management மையபடுத்தி RECYCLE - REPRODUCE - REUSE ஆகியவற்றை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன்.⁠⁠
                                                                                   

இப்பள்ளியில் பணியாற்றிய சமயத்தில் தான் முகநூல் வாயிலாக பல நண்பர்கள் நட்பு ஏற்பட்டது. என் மாவட்ட திலீப் அவர்களின் அறிமுகம் வாயிலாக SCERT நடத்திய முதல் flash animation workshop ல் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பணிமனையில் தான் , பல சாதனை ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. (திருவாளர்கள்: திலீப், ஆசிர், சித்ரா , பெர்ஜின், உமா ,கருனைதாஸ்,அன்பழகன்  சத்தியவேல், சினுவாசன்... இன்னும் பலர்) list ரொம்ப பெரியது. இந்த வாய்ப்பு ஐ.சி.டி யில் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு  செல்ல காரணமாக இருந்தது.  பல விஷயங்களை தெரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு தயாரானேன். மாணவர்களுக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற கணினி செயல்பாடுகளை வகுப்பறையில் செய்ய தொடங்கினேன். அதற்கான விளைவுகளும் நன்றாகவே இருந்தது.
அடுத்த கட்டமாக நண்பர் திலிப் அமைத்தது போல ஒரு சிறப்பான ICT Smart class (smart board enabled) அமைக்கும் நோக்கில் முயற்சி செய்து  வருகின்றேன். இங்கேயும் NMMS தேர்வை இதுவரை எதிர்கொள்ளாத  சுழலில், சென்ற வருடம் மாணவர்களை தயார் செய்தேன். ஒரு மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். NTSE (for X) தேர்வும் எழுதி முடிவிற்காக காத்திருக்கின்றனர். இப்பள்ளிக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளவரும் ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் சிறப்பு பயிற்சியும், ICT கருவிகளை பயன்படுத்துதல், கையாளுதல் போன்றவற்றில் நாளைய ஆசிரியர்களுக்கு இப்போதே தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு பயிற்சி அளித்து வருகின்றேன்.⁠⁠
இறுதியாக, ICT National awards 2015 தமிழக ஆசிரிய குழுவினர் அறுவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புது டெல்லி சென்று கடந்த டிசம்பர் இறுதியில் சென்று  Presentation முடித்து, ,முடிவிற்காக காத்திருக்கின்றேன். என்னை மேலும் மேலும் மெருகேற்றி  கொள்ள  அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் எனது நண்பர் திலீப் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சாதனை ஆசிரியர்களுக்கு மத்தியில் எனக்கு இவ்வாய்ப்பினை வழங்கிய சகோதிரி உமா அவர்களுக்கும் , கோபால் அவர்களுக்கும் நன்றி…                                                                                            

திருமதி.சிலம்பரசி

என் பெயர் கு.சிலம்பரசி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சோழங்கநந்தம், தஞ்சாவூர் மாவட்டம் |
7. 03. 2008 அன்று முதன் முதலில் ஊராட்சி ஒன்றிய அம்மாபேட்டை ரயிலடி பள்ளியில் பணியில் சேர்ந்தேன். அப்போது என்னுடைய பணி க்காலம் பயணங்களாலேயே நிரம்பியிருந்தது. கும்பகோணம் முதல் அம்மாப்பேட்டை செல்ல பள்ளி நேரத்தில் ஒரு பேருந்து மட்டுமே இருந்தது. அதனை பிடிக்க காலை 6.30மணிக்கு கிளம்புவேன். இல்லையெனில் தஞ்சாவூர் வழியாக செல்வேன், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அம்மாபேட்டையிலேயே தங்கி இருந்தோம்அங்கு கை ரேகை பார்க்கும் சமுதாயத்தினர் இருந்தனர். அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு வருவதே இல்லை என்ற பிரச்சனை இருந்தது. அவர்கள் அனைவரும் வெளியில் சென்று ஜோசியம் பார்க்க அந்தக் குழந்தைகள் சென்று விடுவார்கள். அப்பா அம்மா இருவரும் ஆறு மாதங்கள் வெளியூர்களில் தங்கி ஜோசியம் பார்க்க செல்வார்கள். அதனால் அந்த குழந்தைகள்  பள்ளிவருகிறார்களா என யாரும் வீட்டில் கவனிக்க மாட்டார்கள். குழந்தைகள் பாதி நாட்கள் பள்ளிக்கு வருவதே இல்லை என்ற பிரச்சனை இருந்தது. நான் அம்மாபேட்ைடயில் தங்கியிருந்த வீடு அவர்களின் தெருவைத் தாண்டி இருந்தது நான் நடந்து செல்வதால் அந்தக் குழந்தைகைளயும் நின்று ஒரு சேர அழைத்து செல்வேன். நிறைய சொல்வித் தரவில்ைலடியன்றாலும் அந்த குழந்ைதகளுக்கு அடிப்படைத் தமிழையும், கணக்கையும் சொல்லித் தருவேன்.இவ்வாறு அந்தப் பள்ளியில் ஓராண்டுகள் பணிப் புரிந்ேதன். அதன் பின் மனமொத்த மாறுதலில் சோழங்கநத்தம் பள்ளிக்கு வந்தேன்.  பள்ளி, அமைதியான பள்ளிச் சூழல், ஆனால் ஒன்றியத்தின் கடைசியில் இருந்ததால் அப்பள்ளியில் நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. அதுவே, அங்கு பிரச்சனையாக இருந்தது. என் வீட்டில் இருந்து 4 கி.மீ தொலைவு என்பதால் என் பள்ளி அது தான் என முடிவு செய்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல் மக்களும் என்னை அறிந்திருந்தனர். என்னால் இயன்ற வரை மாணவர்களுக்கு நல்லெ எழுக்கங்களையும், நேர்மறை எண்ணங்களையும், உதவும் தன்மையும் கொண்டவர்களாகவே அந்தக் குழந்ைதகள் வளர வேண்டும் என எண்ணியே செயல்படுவேன். தினமும் விடுகதையும், கதையும் சொல்வது என் இயல்பு. எங்கள் பள்ளிக்கான சுற்று சுவர் கட்டும் பணி முடிந்ததும் பள்ளியை சுற்றி மரம் வளர்க்க எண்ணி நான் 5 தென்னை மரங்கள் வாங்கிக் கொடுத்தேன். பெற்றோர்கள் வார்டு மெம்பர் எல்லார்கிட்டேயும் கேட்டு எங்கள் பள்ளியை சுற்றி 25 தென்னை மரங்கள் வைத்தோம்.
மேலும் தென்னை மரங்களுக்கு நீர் வசதி வேண்டி மரங்களுக்கு இடையே வாழை மரங்கள் வைத்து பராமரித்து வருகிறோம். அதிலிருந்து கிடைக்கும் பழங்கள் அனைத்தும்  மாணவர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பராமரித்து தருவது குழந்தைகளின் பெற்றோர்களே ......
2012 ஆம் ஆண்டு புதிய தலைமையாசிரியராய் பள்ளி வந்தவர் தான் நா.ரேவதி அவர்கள்.
அவர்களின் செயல்பாடுகளின் மூலமே எங்கள் பள்ளி தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. எனக்கான முன்மாதிரியாக திகழ்பவர்.
அவர் மூலமே ஒவ்வொரு விழாவிற்கும் அனைவரையும் நேரில் சென்று அழைக்க ஆரம்பித்தோம். பெற்றோர்களுடன் மாணவர்களுடைய கற்றல் திறன் குறித்து மாதம் ஒரு முறை நேரிலோ, தொலைப்பேசி வாயிலாகவோ கலந்துரையாடுவோம்.
1.குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சுத்தம் குறித்து  செயல்பாட்டுக்காக Star Card, இதன் மூலம் எங்கள் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் தூங்மையுடனே வருகின்றனர்.
மேலும், கிழிந்த ஆடைகள் இல்லாமல் இருப்பதற்காக பொத்தான்கள், ஊசிகள் அடங்கிய ப் பெட்டியும் உள்ளது .அதில்  மாணவர்கள் தங்களுடைய ஆடைகளை தாங்களே தைத்துக் கொள்வர்.
2. எங்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் தாங்களாகவே படம் வரைந்து , கதைகள் கேட்டு தலைப்புகள் தந்து , செய்தித்தாள்களில்  உள்ள கதைகள், துணுக்குகள் சித்திரங்கள், விடுகதைகள், சொற்களஞ்சியங்கள், சீன வடிவியல் உருவங்கள் , பாடல்கள் என சுமார் தற்போது 250 புத்தகங்கள் எழுதியுள்ளனர். உருவாக்கியுள்ளனர்.
இந்த செயல் பாட்டின் மூலம்| முதல் 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கதைப்புத்தகங்கள் உருவாக்கியுள்ளனர்.
அவர்களின் கற்பனைத் திறன், வரைதல் திறன், எழுதும் திறன், கையெழுது என அனைத்தும் மாற்றம் டைந்துள்ளது.
3. எங்களது 1 வகுப்பு மாணவர்கள் முயற்சியால் பள்ளியிலிருந்து சேகரிக்கப்பட்ட புங்கன், வேம்பு, நாவல் பழ விதைகளை எங்க ஊர் ஆரம்பம் முதல் முடிவு வரை 200 இடங்களில் 7ங்கள் சமுதாய பங்களிப்புடன் விதைத்துள்ளோம்.
அவற்றில் சுமார் 50 மரங்கள் முளைத்து வளர்கின்றன. மீதமுள்ளவற்றிற்காக நாங்கள் எண்ணெய் Cover சேகரித்து வருகிறோம். அடுத்த முறை விதைகளை விதைத்து பதியங்கள&க நட திட்டமிட்டுள்ளோம்

சென்ற வருடம் ,PB டபயிற்சிப் பெற்று எங்கள் பள்ளி மாணவர்கள்  DFC ல் சிறந்த 100 பள்ளிகளுள் ஒன்றாக தெளவு செய் பட் ட்டோம். அதுவே எங்களுக்கான முதல்் அடையாளம்.
உமா மேம் வழிகாட்டுதலுடன் நாங்க சென்ற வருடம் குஜராத் சென்று பரிசு வாங்கி வந்தோம்.
அப்போதுதான் தெரிந்து கொண்டேன் உமா மேம் அவர்களின் தன்மைகளை....
உண்மையான ஆசிரியர் , வழி நடத்துனர். முன் மாதிரிஎன்று அவரின் மூலமே நான் ICT எனும் பயிற்சிக்கு சென்றேன். கணிணி சார் மென்பொருள்களை என் மாணவர்களுக்கு கொண்டு செல்கிறேன். இவை அனைத்தும் என்று டைய கைப்பேசி மூலமே ...
எளிய முறைகளை மாணவர்களுக்கு கொண்டு செல்ல internet மூலம் முதல் நாள் பதிவிந க்கம் ெசய்து அடுத்த நாள் மாணவர்கள்  குழுவாக பார்த்து கேட்டு கற்கி
இந்த வருடம் PB ட பயிற்சிகா க கருத்தாளராக தஞ்சை மாவட்டத்திற்கு என்று 75 ஆசிரியர் களின் செயல் திட்டங்களை பதிவேற்றி முடித்தோம். அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் உதவியோடு உமா மேம் வழி காட்டுதலுடன் முடித்ேதன்.
மேலும் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த வருடமும் எங்கள் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட செயல் திட்டமானது சிறந்த 100 செயல் திட்டங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட் டது. இரண்டாவது முறையாக எங்கள் பள்ளி DF C ல் தெரிவு செய்யப்பட்டது
பள்ளியில் சேர்க்கை என்பதை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களுடைய பள்ளியில் இரண்டு வருடங்களாக மழலை வகுப்புகள் நடத்தி வருகிறோம். அவர்களுடைய ஆசிரியருக்கான ஊதியத்தினை நானும் என் தலைைமயாசிரியரும் பகிர்ந்து கொள்கிறோம்
குப்பை கள் நாங்கள் எதையும் ஒன்றும் இல்ைல என்பதை உணர்த்த பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து கலைப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களான ஒட்டைக் குச்சி, உண்டியல், பொம்மைகள், ஆக்டோபஸ் பொம்மை, எழுதுபொருள் வைப்பான் , பிளாஸ்டிக் பாட்டில் மேல் பாக பூத் தோரணங்கள் என அவர் களுடைய கலைத்திறனை வளர்த்து வருகிறோம்.
பிஸ்கட், சாக்லெட் பேப்பர் குப்பைகளை மாலைகளாக மாற்றியிருக்கிறோம்
மாணவர்களின் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட CD எனும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பையினைப் Vயன்படுத்தி புத்தகங்கள் வைக்கும் Stand, பொம்மைகள் என உருவாக்கியிருக்கிறேMம்.
மக்கும் குப்பைகளான பேப்பர்களைக் கொண்டு எங்களுக்கு தேவையான உடையாத ட்ரேக்கள் செய்து வைத்துள்ளோம்.
இவை அனைத்தும் என்னுடைய 35 மாணவர்களின் கை வண்ணங்களே |
மேலும், இந்த வருடம் நாங்கள் சுமார் 5000 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கழிவறை மேல் சுவரை எழுப்பி பிளாஸ்டிக் பாட்டில் மேற்க் கூரை போட்டுள்ளோம்.
இவ்வாறு தேவையற்ற வீணான பொருட்களைக் கொண்டே கழிவறை கட்ட இயலும். இப்படியேனும் கழிவறைக் கட்டுங்கள் என எங்கள் கிராமம் முழுவதும் எங்கள் மாணவர்கள் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஊர் முழுவதும் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.இவ்வாறு 4,5 மாணவர்கள் எழுதிய கைெயழுத்து பிரதிகள் 300 .
இவ்வாறு எங்களால் இயன்ற வரை எம்பள்ளி மாணவர்களை சமுதாய நல்விழுதுகளாக உருவாக்க முயற்சித்து வருகிறோம்
மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பிற்காக " சொல் உருவாக்கும் விளையாட்டு ", செய்திதாள் வாசிப்பு , அவர்கள் உருவாக்கிய கதைகளை நாடகமாக்கி நடித்தல் போன்ற செயல்பாடுகள் வாரம் 1 முறை நடைபெறும்.
ஆங்கில வாசிப்பிற்காக
நாங்கள்  பழைய AB ட Cards Spira | Binding  செய்து சேகரித்து வைத்துள்ளோம். உணவு இடைவேளியில் குழுப் பயிற்சியாகவும்,  தனியாகவும் எடுத்து வருகின்றனர்.
ஓவியத்திறன் மேம்பட நான் தினம் ஒரு சிறு கோட்டுப் படத்தினை வரைந்து காட்டி மாணவர்கள் வரையும் திறனை மேம்படுத்த முயற்சிக்கிறேன்.
கடந்த இரு வருடங்களாக எம் பள்ளி முதல், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி அடைந்துள்ளனர்.

தலைமையாசிரியர், நான் இணைந்து பள்ளி உள்கட்டமைப்பிற்காக சுமார் 25,000 மதிப்பிலான எழுதுப் பலகைகள், benches வாங்கி மேம்படுத்தியுள்ளோம்.
ஆண்டு விழாவிற்கு எங்கள் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வோம். ஆங்கில நாடகம், கதைக் கூறுதல், தனிநடிப்பு, நடனம், நிகழ்ச்சி தொகுப்பு என அனைத்தும் பள்ளி மாணவர்களே!
அதற்கnன செலவி…ற்கான  தொகை மட்டுமே எங்களுடையது.
எங்களுடைய மாணவர்கள் உதவும் தன்மை, நேர்மறை தன்மைகள்  மேம்பட நேர்மைக்கடை வைத்துள்ளோம். இவை அனைத்தும்  அவர்களாகவே தேவையானப் பொருட்களை எடுத்துக் கொண்டு பணத்தை  உண்டியலில் சேகரிக்கின்றனர். இதனை வைத்து மீண்டும் நோட்டு, பென்சில்,அழிப்பான் அைனத்னம்  நாங்கள வாங்கி்  வைத்து விடுவோம்.
இதில் பணம் குறைந்தாலும், நாங்கள் மாணவர்களிடம் கேட்டதில்லை.
எதுவும் இல்லையென அவர்களது கற்றல் சிதையக் கூடாது என்பதே எங்களது எண்ணம்.
கீழே கிடக்கும் பென்சில், பேனா ஆகியவற்றை pen Ci | CoIlector  box ல போட்டுவிடுவார்கள். தேவையானவர்கள் எடுத்து பயன்படுத்துவர்கள்
இதன் மூலம் அவர்களின் உதவும் குணம் அதிகரிக்கும் என எண்ணுகிேறாம்.
இவை அனைத்தும் இன்று அவர்கள் எப்படி சரியாகவோ? அல்லது தவறாகவோ செய்தாலும் நாளை அவர்கள் நல்லொழுக்கம் மிக்கவர்களாக திகழ்வர். அதற்கான பயிற்சியாகவே நாங்கள் இந்த சின்ன செயல்பாடு களை  செய்து வருகிறோம்.
என்னுடைய பள்ளி செயல்பாடுகளை Video es, மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும்  JD லதா மேம் என்னை பாராட்டியது எனக்கான ஆசிரியருக்கான அங்கீகாரமாக கருது கிறேன். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள்
 _ சிலம்பரசி பாலமுருகன்
புதிய தலைமுறைக்கல்வி நாளிதழில் என் பள்ளி செயல்பாடுகள் அனைத்தும் நவம்பர் 23 . 2015 நாளிதழில் வெளியிட்டு, பள்ளி எனும் ஒரு பொது சொத்தினைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றிராத எங்கள் ஊர் சோழங்க நத்தம் பள்ளி மாணவர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய என்னுடைய வழிகாட்டியாக திகழும் மோ.கணேசன் சார் அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ேளன். அதற்கான புகைப் படங்களை விரைவில் பதிவிடுகிறேன்.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற ICT சார்ந்த கணினி பயிற்சிக்கு தஞ்சையின் கருத்தாளராக பங்கேற்று என்னால் 50 ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு நமது உமா மேம் மூலமே எனக்கு அளிக்கப்பட்டது.
வீட்டில் என் கணவரின் ஒத்துழைப்புடனும்,
பள்ளியில் என் தலைமையாசிரியர்  மூலமும்,
என்னுடைய கல்வித் துறையில்  உமா மேம் மூலமும்,

மட்டுமே என்னால் இந்த அளவிற்கேனும் செய்ய முடிகிறது. 

திரு.கிறிஸ்து ஞானவள்ளுவன்

அன்புள்ள ஆசிரிய நட்புக்களுக்கு ச.கிறிஸ்து ஞான வள்ளுவனின் காலை வணக்கங்கள். நான் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கூராங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கு கடைசி எல்லையான வேம்பார். எங்கள் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்கிவிடுகிறது.

நான் பதிவு செய்திருந்தது தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் முதலில் பணியேற்றது காஞ்சிபுரம் மாவட்டம். "எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு" என்பது நம்பிக்கையூட்டுவதற்காக சொல்லும் வரியாக இருக்கலாம். ஆனால் என் வாழ்வில் அது மிகவும் சரியாக அமைந்தது. ஆம்  1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்களும் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப் பட்டனர். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு போகிப் பண்டிகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள  அண்ணா பயின்ற பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளியில் பணி நியமன ஆணை வழங்கப் பட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எனக்கு மிகவும் பொருந்தியது. ஆம் பொங்கல் விடுமுறைக்குப் பின் 28.1.1999 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் கூனங்கரணை கிராமத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளியில் பணியேற்றன்.

மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டில் நண்பர்களை விட 7 வருடங்களுக்கு முன்பாக பணி நியமனம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும் முதல் நாள் பணியேற்கச் சென்றது அந்த மகிழ்ச்சியை போக்கி விட்டது. போக்குவரத்து வசதியற்ற அந்த கிராமத்திற்கு எனது தந்தையாருடன் வயல் வரப்புகள் வழியாக 5கிமீ தூரம் நடந்து சென்றது மறக்க முடியாதது. சாலை வழியாக சென்றால் 7 கிமீ தொலைவு. மறு நாளே சைக்கிள் ஒன்று வாங்கி விட்டோம். இறைவா இப்படி ஒரு கிராமத்திலா எனக்கு வேலை தந்தாய் என அழுது தீர்த்தேன். அனால் பின்பு பலமுறை இப்படியொரு கிராமத்தில் வேலை தந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறியுள்ளேன். கிராம மக்கள் அவ்வளவு நல்லவர்கள். ஆசிரியருக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்கள்.

"கற்றலில் இனிமை" திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளை அது. நான் குறுவள மையத்திலும் வட்டார வள மையத்திலும் பயிற்சியில் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்பேன். ஒரு நாள் ஒரு பயிற்சியில் கருத்தாளர் வர தாமதமானதால் சார் நீங்கள் கொஞ்சம் நடத்துங்கள் என்றனர். நடத்தினேன். விளைவு அடுத்து பல பயிற்சிகளுக்கு நான் தான் கருத்தாளர். மூத்த ஆசிரியர்கள் பலரும் என்னைத் தட்டிக் கொடுத்து வரவேற்றனர். விளைவு மாவட்ட அளவில் வினாத் தாள் தயாரிப்பு உட்பட பல பயிற்சிகளுக்கு அனுப்பப் பட்டேன்.

நான் பணியேற்ற போது தலைமையாசிரியராய் இருந்த திரு.தண்டபானி ஆசிரியர் அவர்கள் மிகச் சரியான ஆசிரியர். ஆனாலும் தலைமையாசிரியரின் பணியை தலைமையாசிரியர் தான் செய்ய வேண்டுமென்ன எண்ணம் கொண்டவர். அவரிடமிருந்து பல நல்ல பண்புகளை கற்றுக் கொண்டேன். சுற்றுலா போன்றவைகளை துளியும் விரும்பதவர். அவருக்குப் பின்னர் வந்த தலைமையாசிரியர் அவருக்கு நேர் எதிரானவர் எல்லா வகைகளிலும். எல்லா பொறுப்புகளையும் என்னிடம் தந்து விட்டார். நான் அப்போது அங்கு தனியாக தங்கி ஹோட்டலில் சாப்பிட்டு வந்ததால் நேரம் தாராளமாய் இருந்தது. எனவே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளியே எனக்கு தஞ்சம். இதில் மாணவர்களின் பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் மற்ற ஆசிரியர்கள் இதை விரும்பவில்ல. நீ இப்போ 8 மணிக்கு பள்ளிக்கூடம் போனா நீ மாறிப் போன பின்னாடி நாங்களும் 8 மணிக்கு வர வேண்டுமென மக்கள் நினைப்பார்கள் விட்டு விடு என்றனர். நான் அதை காதில் போட்டுக் கொண்டதே இல்லை.
மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்று ஏற்பாடுகளை செய்தேன். கடைசி நேரத்தில் அவர் சுற்றுலா வர மறுத்து விட்டார். பள்ளி சத்துணவு பொறுப்பாரோடு மாணவர்களை வெற்றிகரமாக சுற்றிப் பார்க்க வைத்ததில் ஊராருக்கு மிகுந்த சந்தோஷம். ஏனெனில் 1961ல் பள்ளி ஆரம்பிக்கப் பட்டாலும் அது வரை அவ்வூர் மாணவர்கள் சுற்றுலா சென்றதே இல்லை. அதனைப் போலவே காஞ்சிபுரம் மாவட்ட அளவில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாராமன் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்தினார். பள்ளிக்கான பொருட்களை ஊர் மக்களின் நிதி உதவியில் வாங்கி கண்காட்சிப் படுத்த வேண்டும் என்றனர். விளைவு தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அங்கூ முன்பு பணிபுரிந்த ஆசிரியர்கள் அவ்வூர் மக்களிடம் ஒரு பைசா கூட வசூல் செய்ய முடியாது என்றனர். என்ன செய்வது என விழித்தேன். ஆனாலும் முயன்று பார்ப்போமே என வசூலில் இறங்கினேன். தாராளமாய் தந்தார்கள். அப்போதே ரூ 7000 வசூலானது. அதற்கு பொருட்களை வாங்கினேன். பெரிய பள்ளிகளை விட அதிகப் பொருட்கள் வாங்கியதற்காக கல்வி அதிகாரிகள் பாராட்டினர். அதன் பின் வந்த தலைமையாசிரியர் திரு குப்புசாமி என்னைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கியவர்களில் முக்கியமானவர். மிக எளிய தோற்றம் கொண்டவர். மிகுந்த ஆங்கில அறிவு மிக்கவர். அது என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இப்பணி 2004 மே வரை தொடர்ந்தது. ஜூன் மாதம் அங்கிருந்து மாறுதலாகி இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் எக்கக்குடி வந்தேன். மாறி வந்த பின்னர் கூனங்கரணைஹமக்கள் என்னை அழைத்து மிகப்பெரித பாராட்டு விழா நடத்தினர். மிகப் பெரிய திருமண விழா நடந்தது விருந்துகளோடு. எனக்கு அரைப் பவுனில் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். தங்கம் அணிவதை விரும்பாத நான் அணிந்த தங்க ஆபரணம் அது தான். அந்த ஊரார் ஆசிரியருக்கு நடத்திய ஒரே விழாவும் அதுதான். இதில் தலைமையாசிரியரின் பங்கு மிக அதிகம்.
இராமநாதபுரம் மாவட்டம் எக்கக்குடி பெரிய கிராமம். 90 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் ஊர். மிகவும் பழைவாதம் பேசும் பலர் உள்ள ஊர். இளைய தலைமுறையினருக்கு இந்த நடைமுறை பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டனர். 1.6.2004 அன்று 7 வது ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். நான் அங்கு பணியேற்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு ஊரார் எங்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் பணிபுரியக் கூடாது என கோரிக்கை வைத்ததால் ஆண் ஆசிரியர்கள் மூவர் மாற்றப் பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லும் ஆண் ஆசிரியர் நான். மற்ற ஆசிரியைகள் பயங்காட்டினர். ஆனால் தலைமையாசிரியரோ இதெல்லாம் ஒன்றுமில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இரண்டு வருடம் வேலை பார்த்தேன் அப்பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் பயங்கதைட்டியதைப்ப் போல் எதுவும் நடக்கவில்லை. எல்லாம் நல்லவைகளாகவே நடைபெற்றது.

ஜூன் அப்பள்ளியில் சேர்ந்தேன் காலாண்டுத் தேர்வுக்குள் 1, 2, 3, 4, 6 என எல்லா வகுப்பிற்கும் மாற்றப் பட்டேன். தலைமையாசிரியரைத் தவிர எல்லோருமே இடைநிலை ஆசிரியர்கள் தான். ஒருவழியாக காலாண்டுக்குப் பின் 7 ஆம் வகுப்பாசிரியர் ஆனேன். பின் எந்த வகுப்புக்கும் மாற்றவில்லை. அந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு வந்த போது நான் எட்டாம் வகுப்பாசிரியரானேன். இது எந்த நடுநிலைப் பள்ளியிலும் நடக்காத ஒன்று. என்னை நம்பி இந்த பொறுப்பைத் தந்த தலைமையாசிரியை திருமதி. புஷ்பவல்லி அவர்களை என்றுமே மறக்க முடியாது. இதனிடையே ஒன்றாம் வகுப்பை மற்ற ஆசிரியர்கள் எடுக்க தயங்கியதால் அதையும் நானே எடுத்தேன்.

முதலாம் வகுப்பில் 30 பேர்.எட்டாம் வகுப்பில் 30 பேர் என 60 பேர் எனது வகுப்பில். இதனால் பழு அதிகமானது. இதனைக் குறைக்க "தத்து எடுத்தல்" என்ற புதிய முறையை நடைமுறைப் படுத்தினேன். அதாவது எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் முதலாம் வகுப்பு மாணவர் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் படிப்பதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இது நல்ல பயனைத் தந்தது. பள்ளியைப் பார்வையிட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.கதிரேசன் அவர்கள் இதனை வெகுவாகப் பாராட்டினார்.
எக்கக்குடி பள்ளியில் பணிபுரிந்த போது வட்டார அளவிலான நடுநிலைப் பள்ளி தமிழ் பாடத்திற்கு கருத்தாளர் நான் தான். பல மூத்த ஆசிரியர்கள் தட்டிக் கொடுத்து என்னை வளர்த்தனர்
ஏழாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நான் செய்த அறிவியல் பாடத்திற்கான "அறிவியல் பெயர்களை நினைவில் வைப்பது எப்படி?" என்ற செயலாராய்ச்சி வட்டார அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு மஞ்சூர் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தால் பாராட்டப் பட்டேன். வட்டார அளவில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கிடையே நடைபெற்ற கற்பித்தல் பொருள் தயாரித்தலில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றேன்.

இதை எல்லாவற்றையும் விட இப்பள்ளிதில் சாதித்ததாக நான் கருதுவது எக்கக்குடியில் பெண் குழந்தை பெரியவளானால் படிப்பைத் தொடர விடுவதில்லை. இது சம்பந்தமாக தலைமையாசிரியர் துணையுடன் ஒரு பெண்ணின் பெற்றோருடன் பேசி பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்ததே. இப்படிதாக எக்கக்குடி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் 5.7.2006 வரை என் பணி தொடர்ந்தது.
6.7.2006 ல் கடலாடி ஒன்றியம் கூராங்கோட்டை பள்ளியில் என்னால் முடிந்த வரை சிறப்பாக பணியாற்றி வருகிறேன். பல எளிய யுக்திகளை பயன்படுத்தி கற்பித்து வருகிறேன். தலைமையாசிரியை திருமதி.பா.வைரமணி அவர்கள் எனது முயற்சிகளுக்கு  முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

மாணவர்களை ஆங்கிலப் பள்ளி மாணவர்களைப் போல் அறிவில் கொண்டு வந்தாலும் தோற்றத்திலும் மாற்ற வேண்டி உள்ளது. அதற்காக கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களுக்கு பனியன் துணியால் ஆன பேண்ட் சர்ட் வழங்கி வருகிறேன். பெல்ட்டும் எனது செலவில் வழங்கி வருகிறேன்.

கிராமப்புற மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு போனால் படிப்பதில்லை. இதனைப் போக்க பட்டதாரி பெண் ஒருவரை எனது செலவில் மாலை தனிப்பயிற்சி அளிக்கிறார். 5-6.30 மணி வரை வகுப்பெடுக்கும் அவர் மாதம் ரூ.600 மட்டுமே வாங்கினாலும் அப்பணியை ஒரு தவமாகவே செய்து வருகிறார்.

திபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என மதம் சார்ந்த பண்டிகைகளையும் மற்ற விழாக்களையும் தலைமையாசிரியையின் அனுமதியோடு கொண்டாடி வருகிறேன்.
கல்வி சார்ந்து எனது பணிகள்...
* நான் தொடக்கக் கல்வி பயின்ற  TNTDTA தொடக்கப் பள்ளியில் பயின்றவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பிடிப்பவருக்கு தலா 2000 மற்றும் 1000 என வருடந்தோறும் ரூ.6000 வழங்கி வருகிறேன்.
* நான் நடுநிலைக் கல்வி பயின்ற புனித பீற்றர் நடுநிலைப் பள்ளியில் பழைய மாணவர் மன்றத் தலைவராக செயல் பட்டு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

* வருடம் இரண்டு கஷ்டப்பட்ட  மாணவர்கள் கல்லூரிக் கல்வி பயில கல்விக் கட்டணம் செலுத்தி வருகிறேன்.
* பேடு என்ற தொண்டு நிறுவனத்தின் எங்கள் பகுதி கமிட்டி தலைவராக பதவியேற்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தருகிறேன்.
பெற்ற விருதுகள்...
* மதுரை தினமலர் 20.10.2014 அன்று வழஙகிய "லட்சிய ஆசிரியர் 2014" விருது.

*சென்னை எழில் இலக்கியப் பேரவை வழங்கிய "குறள் உரைச் செம்மல்" விருதை முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் கரங்களால் 25.10.2014 அன்று பெற்றேன்.

*காரைக்குடி வள்ளுவர் பேரவை நடத்திய மாநில அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றதற்காக "குறள் ஆர்வலர்" விருதை தவத்திரு.குன்றக்குடி அடிகளார் கரங்களால் பெற்றேன்.

*வாசுதேவநல்லூர் சிகரம் அறக்கட்டளை வழங்கிய "தமிழகத்தின் டாப் 9 மனிதர்" விருது பெற்றேன்.

* முகநூலை பயனுள்ள முறையில் பயன்படுத்தியதற்காக காஞ்சி முத்தமிழ் சங்கம் வழங்கிய "முகநுல் வேந்தர்" விருதை பேராசிரியர் கு.ஞான சம்மந்தன் அவர்கள் கரங்களால் 26.7.2015 அன்று பெற்றேன்.

* 5.9.2015 அன்று சென்னை கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுலனவனம் வழங்கிய "ஆசிரியர் செம்மல்" விருது பெற்றேன்

* 10.1.2016 அனறு வேம்பார் காமராஜர் சமுக நலப் பேரவை வழங்கிய "சாதனை நாயகன்" விருதும் தங்கப் பதக்கமும் பெற்றேன்.

* 26.1 2016 அன்று கோவை தமிழ் இலக்கியப் பாசறை வழங்கிய "கவித் தூதர்" விருதை கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி திரு.பொன்ராஜ் அவர்கள் கரங்களால் பெற்றேன்.

* இத்தனை விருதுகளைக் காட்டிலும் நான் பெருமையாக கருதுவது நான் பணிபுரியும் கூராங்கோட்டை கிராமப் பொதுமக்கள் 9.3.2015 அன்று மிகப் பிரமாண்டமாக நடத்திய பாராட்டு விழாவையும் அப்போது வழங்கிய நினைவுப் பரிசையும் தான்.
எழுத்துப்பணி....
1991ல் தொடங்கிய எழுத்துப்பணி இன்று வரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது. கதை ன, கவிதை, கட்டுரை, பேட்டி, துணுக்கு, சிரிப்பு, விமர்சனம் என எண்ணிக்கு 2400ஐத் தாண்டும்.

அண்மைக் காலமாக சிறுவர் பாடல்கள் அதிக அளவில் எழுதி வருகிறேன்.
பொழுது போக்கு...
* நாணயம், தபால் தலை, புத்தகம் சன, பழைய பொருட்கள் சேமிப்பு..
*தமிழ் நாளிதழ்கள் சேமிப்பு. இது வரை தமிழ் நாடு, வெளி மாநிலம், வெளி நாடு என 60 தமிழ் நாளிதழ்கள் சேகரித்துள்ளேன்.

* 21 10.2012ல் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட நிறைவு நாளில் நடைபெற்ற புரதானப் பொருட்கள் கண்காட்சியில் என்னிடம் உள்ள ஒரே மரத்தாலான சங்கிலியைக் காட்சிப் படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஸ் குமார் அவர்களிடம் நினைவுப் பரிசு பெற்றேன்.
தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சி...
* பொதிகை தொலைக்காட்சியின் காரசாரம் நிகழ்ச்சியில் இருமுறை.

* கலைஞர் தொலைக்காட்சியின் நெஞ்சு பொறுக்குதில்லையே... நிகழ்ச்சயில் ஒரு முறை.

* நெல்லை வானொலியில் வினாடி வினா.
*தூத்துக்குடி வானொலியில் குழுவாக ஒரு முறை.

26.1.2016 அன்று "இந்திய குடியரசின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் 13 நிமிட தனிப் பேச்சு....
இதுவே அடியேனின் எளிய சாதனை...

தலைமையாசிரியர் பணி மூப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளேன். ஜூன் மாதம் பதவி உயர்வு. அப்போதும் சிறப்பாய் செயல்பட வேண்டும். அதற்கு உங்களின் அன்பும் ஆலோசனையும் என்றும் தேவை .
நன்றி நட்புக்களே. உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

எனது முகநூல் பக்கம் :
Christhu Gnana Valluvan

முடிந்தால் பார்வையிடுங்கள்.

திரு.முரளிதரன்

இக்குழுவில் இடம் பெற அனுமதி  அளித்த உமா மகேஸ்வரிக்கு முதலில் நன்றி. இக்குழு நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்து எனது அனுபவ பதிவுகளை பதிவிடுகிறேன்.
- பகுதி - 1
எனது பெயர் இரா.கா.முரளிதரன். நான் அரசு பள்ளியில் சேர்வதற்கு முன்பே 10 மற்றும் 12 ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர் களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து தேர்வில் தேர்ச்சி பெற வைத்துள்ளேன். 31.07.95 ல் ஊ.ஒ.தொ.பள்ளி அரியந்தால் மரக்காணம் ஒன்றியத்தில் பணியேற்றேன். ஓராண்டு காலமாக முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்தேன். அந்த மாணவர்களுக்கு புரிய வைப்பது என்பது ஆசிரியரின் பணி மிகப் பெரிய சவாலானது என அறிந்தேன்.  தன்னை மாற்றிக் கொண்டு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்தினேன். இருந்தாலும் எனது மனம் மேல் வகுப்பு  கற்பித்தலுக்கு மனம் சென்றது. நான் தங்கியிருந்த பிரம்மதேசம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை வேலையில் சிறப்பு பயிற்சி அளித்தேன். சனி, ஞாயிறு நாட்களில் எனது சொந்த ஊரில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பேன். எனது மனதில் 1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பித்த ஆனந்தம்.
பகுதி - 2
- ஓராண்டு முடிவில் எனது சொந்த ஒன்றியத்தில் செTந்த ஊர் வேங்கை வாடி  நடுநிலை பள்ளிக்கு மாறுதல் ஆனேன்.  நான் இடைநிலை ஆசிரியராக இருந்தாலும் 6 - 8 வருப்புக்கு கணித பாட ஆசிரியராக பணியாற்றினேன். ஆங்கிலம் மற்றும் கணித பாடம் எடுக்க யாரும் முன்வரவில்லை. மூத்த ஆசிரியர்கள் இருந்தும் நான் தான் கணிதம் எடுத்தேன். அன்றில் இருந்து மாறுதல் சென்ற எல்லா பள்ளியில் 6.8 - கணித ஆசிரியராக பணியாற்றினேன். ஒரு முறை கவுன்சிலிங் மாறுதல் அளிக்கும் போது இரண்டாவது வாய்ப்பாக தொடக்கப் பள்ளி குறிப்பிட்டேன். எனது நேரம் முதலில் உள்ள நடுநிலைப் பள்ளியை விட்டு விட்டு இரண்டாவது அளித்த விருகாவூர் தொடக்க பள்ளிக்கு என்னுடன் ஆனந்த கண்ணன் மாறுதல் பெற்றோம். இருவரும் இணைந்து 5ம் வகுப்பு A மற்றும் B பிரிவை எடுத்துக் கொண்டோம். பள்ளியில் மிக பெரிய பிரச்சனையாக தரைமட்டம் விட தாழ்வாக இருந்தது. சிறிது மழை வந்தாலும் தண்ணீர் நிற்கும். அன்று மாணவர்கள் பள்ளியில் அமர இயலாது. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். நான் தான் பொறுப்பு ஆசிரியர் . ஒரு முறை மாவட்ட ஆட்சி தலைவர் மழை வெள்ளம்  பாதிப்பு பார்வையிட வந்த பேn து பள்ளியின் நிலையை சுட்டிக் காட்டினேன். அங்கேயே இந்த 0ள்ளியை இடித்து புதிய கட்டிடம் கட்ட உத்திர விட்டார். அதன் பேரில் புதிய கட்டிடம் கட்ட துவங்கப்பட்டது. பள்ளியை நடத்த இடம் இல்லாததால் தால் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு 7 வகுப்பறை பெற்றுக் கொண்டேன். மிகவும் ஆனந்தமாக பள்ளி தனித்தனி வகுப்பறையில் நடந்தது. ஆசிரியர்களை அழைத்து வகுப்பறை தேவையானவை உடனுக்குடன் வசதிகளை ஏற்படுத்தி தருவேன். எனது மனதுக்கு பிடித்த அனைத்தும் செய்ய முடிந்தது. கட்டிடம் 10 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அடுத்த பள்ளிக்கு மாறுதல் சென்றேன். ஏனெனில் பொறுப்பு ஆசிரியர் பணி ஏற்கும் பள்ளிக்கு மட்டும் மாறுதல் சென்றேன். மூத்த ஆசிரியராக நான் மட்டும் என்ற பள்ளிக்கு மாறுதல் செல்வேன். அடுத்த நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் போது 6 மாதம் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றேன்.
பகுதி 3
ஊ.ஒ.ந. நி.பள்ளி பல்லகச்சேரி இப்பள்ளியில் தலைமை பொறுப்பு ஏற்று 6 மாதத்தில் கல்வி சுற்றுலா. ஆண்டு விழா, மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மரக்கன்றுகள் நடுதல் என நான் நினைத்ததை நிறைவேற்றினேன். ஆசிரியர்கள் கூட்டம் வாரம் ஒரு முறை நடத்துவேன். குறைகளை கேட்டு உடனடியாக தேவையான வசதியை ஏற்படுத்தி தருவேன். எனக்கு எதிராக உள்ளூர் பணியாற் றும்  ஆசிரியரின் பொறாமை யால் நான் வேறு பள்ளிக்கு மாறுதல் செல்ல நிலைக்கு மிரட்டி தள்ளப்பட்டு அடுத்த பள்ளிக்கு சென்றேன்.
.
- பகுதி 4
- விரைவாக எனக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக காந்திநகர் பள்ளிக்கு பதவி உயர்வு பெற்றேன். எனக்கு ஆனந்தமாக இருந்தது. 4 மாதம் மட்டுமே நீடித்தது. அந்த காலக் கட்டத்தில் ஒரே கட்டிடத்தில் 5 வகுப்புஅதனை இரண்டு அறைகளை ஸ்கிரீன் துணி மூலம் பிரித்து AB ட வகுப்பறை உருவாக்கினேன். மற்ற பள்ளிகளை விட முன்மாதிரியாக இருக்க விரும்புவேன். எனக்கு 4 மாத இடைவெளி யில் நான் வடதொரசலூர் நடுநிலைப் பள்ளிக்கு கணித பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு . ஆனந்த கண்ணன் உதயமாம் oட்டு oள்ளிக்கு ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு . பெற்றோம்.
பகுதி-5
புதிய பள்ளியில் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர் இருந்ததால் எனது கோரிக்கை தள்ளுபடி ஆனது. அங்கு தான் என் நிலைமை மாற்றி மாணவர்கள் பக்கம் திரும்பியது.  எல்லா வகுப்புக்கும் கணினி பயன்பாடு பற்றிய விளக்கம் வகுப்புக்கள்  எடுத்தேன். CD BRC, கடைகள் மூலம் பெற்று கற்பித்தேன். மாணவர்கள் ஆர்வம் அறிந்தேன். CDன் விற்பனை முகவரி அறிந்து சேலம் கல்லூரிக்கு ெ ன்று எனது சொந்த செலவில் CD வாங்கி வந்தேன். அதனை கொண்டு கணித வகுப்பறை கலக்கினேன். எல்லா மாணவரும் என் பக்கம் திரும்பியதால் க ணினி வகுப்பு வேண்டாம் என தலைமை ஆசிரியரால் ஒதுக்கப் பட்டேன். உடனடியாக எனது தோழர் பணியாற்றி வரும் உதயமாம் பட்டு நடுநிலை பள்ளிக்கு மாறுதலாகி சென்றேன். மீண்டும் ஆனந்த கண்ணன் பலம் கிடைத்தது. பள்ளியில் மின்சாரம் ஒரு கட்டிடம் மட்டும் இருந்தது. உடனடியாக தலைமை ஆசிரியரின் உதவிப் படி SSA நிதியில் அனைத்து கட்டிடத்திற்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. கழிப்பறை பயன்பாடு இல்லை. நான் சில ஆர்வமிக்க மாணவர்களுடன் இணைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தேன். ஆனால் பெண் ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு என ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கு ஸ்பீக்கர் பெற்று வந்து இறை வணக்க கூட்டத்திற்கு பயன்படுத்தினோம். இரண்டு மூன்று பள்ளிகளை இணைத்து கல்வி சுற்றுலா சென்றோம். தற்போது வரை அங்கே பணியாற்றி வருகிறேன். ஓராண்டிற்குள் ஆனந்த் வேறு 0ள்ளிக்கு மாறுதலில் சென்று விட்டார். இப்போது தனித்தனியF அசத்தி வருகிறோம். பள்ளியில் சீனியர்கள் இரண்டு பேர் பதவி உயர்வில் வந்ததால் மூன்றாமிடம் தள்ளப்பட்டேன். இருப்பினும் தலைமை ஆசிரியர் ஆதரவு இருப்பதால் என் பணியை சிறப்பாக மேற்கொள்கிறேன்.

- பகுதி - 6
- நான் பணியாற்றிய காலத்தில் ஓராண்டு மட் டும் முதல் வகுப்பு   இரண்டாம் ஆண்டு முதல் 5 முதல் எட்டாம் வகுப்பு வரை கணித பாடம் எடுத்து வருகிறேன். அதே போன்று பள்ளி நிர்வாகம் பணிகள் அதிகமாக சாதித்தேன்.
- பகுதி - 7
- கருத்தாளர்.  நான் பணியேற்றது முதல் இன்று வரை அனைத்து CRC BRC பயிற்சியில் கருத்தாளராக பணியாற்றி வருகிறேன். வெளி மாவட்ட பயிற்சியாக இராணிப்பேட்டை DIET ல் தமிழ் தொலைவரங்க பயிற்சி 7 நாள்கள் ெ ன்றேன். மாவட்ட அளவில் கணித பயிற்சி பெற்று வந்துள்ளேன். குறுவட்ட மைய நடுநிலை பள்ளி சார்பில் கருத்தாளராக நியமிக்கப்பட்டேன். உமாமகேஸ்வரி ஆலோசனையின் படி 12 நாட்கள் CCR T ஹைதராபாத் பயிற்சிக்கு சென்றேன். உமா அவர்களுக்கு நன்றி.
பகுதி-8
- கணினி செயல்பாடுகள்.
மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கணினி மூலம் PPT பயன்படுத்தி கற்பிக்கும் போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் நான்காம் இடம் பெற்றேன். முதல் இடம் பெற்ற திரு திலீப் அறிமுகம் கிடைத்தது. சான்றிதழ் திலீப் அவர்கள் முயற்சியால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் பெற்றது முதன் முதலில்  அதிக மகிழ்ச்சி அடைந்தேன். திலீப் blogspot பார்த்து அசந்து போனேன். மேலும் வளர வேண்டும் என துடித்தேன்.

01.01. 15 முதல் பெரிய திருப்பம். திருச்சி ICT பயிற்சியில் டிஜிட்டல் C ontent தயாரிப்பு பணிமனை வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் தயாரித்த PPT பார்த்து எனது குழு தலைவர் சத்திய வேல் என்னை பாராட்டி ஊக்கப் படுத்தினார். என்னை சித்ரா அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். திலீப் சத்திய வேல் இவர்கள் மூலம் பாராட்டினை பெற்றேன். அடுத்த பயிற்சி மதுரைக்கு சிபாரிசு செய்தனர். அங்கு  லாரன்ஸ் அவர்கள் வீட்டிற்கு குழுவாக எனது காரில் அன்பழகன், திலீப் . சித்ரா, ஆசிர், ஆகியோர் சென்றோம். அப்போது ICT பற்றி ய நெட்ஒர்க் தெரிய வந்தது. மேலும் வளர ஏதுவாக ஜான் ராஜா Hot potato இரவு 11 மணி வகுப்பு மறக்க முடியவில்ை.. சித்ரா அவர்களின் போட்டோ ஸ்டோரி, ஆட்டோ கொலெஜ் போன்றவை இரவு பகல் பாராமல் கற்பித்த விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
பகுதி-9
- அடுத்த பயிற்சி மதுரையில் திருமதி உமா மகேஸ்வரி அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். இவர்களை பார்க்கும்  போது நான் மெய் மறந்து நின்றேன். கணினி துறையில் ஏதாவது நாமும் சாதிக்க வேண்டும் என துடித்தேன். எனது குழு தலைவர் செந்தில் செல்வம் அறிமுகம் கிடைத்தது. எனது ஆர்வம் கண்டு பாராட்டினார். ஆடியோ சேர்ப்பு பற்றி கற்று கொடுத்தார். அங்கு வந்த பிற ஆசிர்களின் திறன் கண்டு வியந்து போனேன். அவர்கள் போல நாணும் வர வேண்டும் என துடித்தேன்.  தொடர்ந்து சித்ரா, உமா அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.
மேலும் பூக்கள் வளரும்.... விரைவில்
பகுதி-10
- ICT Post என்ற வாட்சப் குழு வில் என்னை இணைக்க  ஆனந்த் மூலம் சிபாரிசு செய்து இணைந்தேன். அதில் அனைவரும் பார்த்த பிறகு எனது ஒன்றிய அளவில் வாட்சப் குழு உருவாக்கி னேன். நல்ல பாராட்டு கிடைத்தது.
- பகுதி-11
கணித குறுந்தகடு தயாரிப்பு பணிமனை

விழுப்புரம் சீனுவாசன் அவர்கள் தலைமையில் சண்முக சுந்தரம் மூலம் அறிமுக ஆனேன். DEEO விருப்ப படி குழு ஒரு மாதமாக செயல்பட்டது. அதில் உள்ள செoல்பாடுகள் பின்னர் உண்மை நகலாக தயாரானது. சீனுவாசன் திறமை வியப்பில் ஆழ்த்தியது. தொடக்கப் பள்ளி நிலை மட்டும் இறுதியில் தேர்வு செய்யப்பட்டு முடிவானது. ஆனால் எனது பதிவுகள் அதிகமாக 6 - 8 வகுப்புக்குரியது. எனது பதிவுகள் வெளியிட அனுமதி கிடைக்க வில்லை. சீனுவாசன் மூலம் எனது பதிவுகள் கேட்டதின் அடிப்படையில் அளித்தார். அப்போது தான் உருவானது எனது சிந்தனையில் வாட்சப்குழு தமிழ்நாடு முழுவதும் உருவாக்கினேன். இரண்டே நாளில் கணித குழு 5 ஆனது. மேலும் உற்சாகம் அடைந்தேன். அனைத்து பாடங்களும் உருவாக்கினேன். எனது வீடியே்க்கள் பதிவிட்டேன் மேலும் சீனுவாசன் கணித பாடல்களும் பதிவிட்டேன். மிகப் பிரபலமானது. SCERT மூலம் பாராட்டு கிடைத்தது. ICT உறுப்பினர்கள் அனைவரின் அறிமுகம் கிடைத்தது. இதன் மூலம் DF C க்கு RP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டேன். உமா அவர்களின் பாராட்டினை பெற்றேன்.் மேலும் உயர வழி கிடைத்த து. அவ்வப்போது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உமா அவர்கள் பாராட்டி வாழ்த்துவார். எனது அனைத்து குழுவிலும்  இடம் பெற்றார். சுட்டி விகிடன் நாளிதழ் அறிமுகம் கிடைக்க வழி வகை செய்தவர் உமா அவர்கள். சித்ரா மூலம் தினமலர் நாளிதழ் அறிமுகம் மூலம் பாராட்டுக் கள் பெற்றேன். நமது குழுவின் மூலம் பதிவுகள் சேகரிக்கப் பட்டு சுட்டி விகி டன், தினமலரில் பட்டம் பகுதியில் வெளிவருகிறது. இன்று 08.02.16 ல் எனது கணித 8ழு மூலம் நாமக்கல் மாவட்ட சுமதி மாணிக்கம் பதிவு வந்துள்ளது. சிறந்த கணித ஆசிரியர்கள் ரூபி போன்றவர்கள் அறிமுகம் கிடைத்தது. குழு நல்ல பெயரை எனக்கு பெற்று தந்தது. இதன் மூலம் தற்போது . லண்டனில் உள்ள தமிழ் பயில விரும்பும் மாணவர்களுக்கு Skype மூலம் கல்வி கற்பிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த குழுவின் மூலம் தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு நமது ஆசிரியர் களை கொண்டு Online மூலம் இணைப்பு வகுப்பு நடத்த அனுமதி கேட்டு ள்ளேன். விரைவில் அனைத்து பள்ளியில் செயல்பட உள்ளது. தொடக்கக் கல்வித்துரை அதிகாரிகள் வரை மிக விரைவாக பாராட்டினை பெற்று தந்த உமா, சித்ரா, ஆசீர். திலீப், சீனுவான். சண்முகம் எனது நண்பர் ஆனந்த கண்ணன். இறுதியாக எனது 45 குழுவில் உள்ள 2000 ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
- பகுதி-12
- எனது குழுவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கணினி, கல்வி இணை செயல்பாடுகள், நீதிக்கதைகள். சமையல், போன்ற வகையில் செயல்பட்டு வருகிறது. Hike, Telegram. Somo, google+ . facebook, blogspot. Twitter, அனைத்திலும் செயல்பட்டு வருகிறது. இறுதியாக நான் சாதித்தது 07.02.16 ல் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி தி.மு திருமணத்திற். கு பின் என்ற தலைப்பில் காலை 6 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை 8 குுழுக்களில்  நடைபெற்றது  மாலையில் ஜானகிராமன், ராஜேஷ், உமா மகேஸ்வரி, நான், ரூபி ஆகியோர் ஐவரின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. இது என் முதல் முயற்சி. இதற்கு காரணமான அனைவருக்கும் எனது நன்றி. இதன் மூலம் உ000 ஆசிரியர்கள் பயன் பெற்று அவர்களின் வகுப்பு மாணவர்கள் பயனடைந்து வருவது ஆனந்தமாக உள்ளது. ஆசிர் அய்யா அவர்கள் எனது வெற்றுக்கு மிகவும் அளித்த ஊக்கமும் ஒரு காரணம். குழு உறுப்பினர்கள் மேலும் என்னை வளர வைத்தார்கள். அனைவருக்கும் நன்றி.
- பகுதி-13
- DF C மற்றும் ICT பயிற்சிக்கு கருத்தாளராக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிட வாய்ப்பு கொடுக்க  உமா மகேஸ்வரி க்கு மிக்க நன்றி. அங்கு தான் மிகப் பெரிய பாராட்டினை பெற்றேன்.
பகுதி-14
- அசத்தல் குழுவில் வந்த அசத்தல் பதிவை விட கடுகு அளவு மட்டும் சாதித்துள்ளேன். எனது அனுபவங்களை மட்டுமே பதிவிட்டுள்|ளேன். எனக்கு ஆதரவு அளித்து உடன் இருக்கும் நண்பர் ஆனந்த கண்ணன்  நன்றி.
- முற்றும்.
மிகவும் பெரும் ஆதரவுடன் வெற்றி நடை போடும் நீதிக் கதைகள் குழு உருவாக்கியதில் உறுதுணையாக இருந்த திருமதி சித்ரா வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி. அறிமுக மில்லா 2000 ஆசிரியர்கள் எனக்கு நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைத்தது என்னால் என்னையே நம்ப முடியவில்லை. இது தான் மிகப் பெரிய சாதனை என் வாழ்வில் . தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் எனது குழு நண்பர்கள் கள்.
. தமிழ் விக்கிபிடியா பற்றி எனது ஊரில் உள்ள பாரதியார் தமிழ் சங்கத்தில் சிறு விளக்கம் அளித்தேன்.
- எனக் கே தெரியாத எங்கே இருந்த ரூபி ஆசிரியர் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அவரின் கணித செwல்பாடு தமிழ்நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.
- எனது எதிர்கால திட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளியிலும் online மூலம் கற்பித்தல் பணி மேற் கொள்ள முயற்சி எடுத்து வருகிறேன். லண்டனில் இருந்து ராசேஸ்வரி என்பவர் மூலம் இப்பணி மேற்கொள்ள உள்ளேன். அவருடைய வெப் சைட் மூலம் பயன் பெறலாம். வரும் வாரத்தில் லண்டனில்  உள்ள தமிழ் வாழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க உள்ளேன். சென்ற வாரம் எனது குழுவில் இருந்து நளினா அவர்கள் முயற்சி செய்தார்கள்..
- இதற்கான தமிழக அரசின் முறையானஅனுமதி பெற உள்ளேன்.
- மே மாதம் தமிழ்நாடு வர உள்ளார். அப்போது கணினி பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த உள்ளார்.
- இது பற்றி உமா அவர்களிடம் ஆலோசனை பெற்று உள்ளேன்.
- ஒவ்வொரு வாரம் வரும் தினமலர் பட்டம் இதழில் நமது கணித குழுவின் சிறந்த பதிவுகள் வெளியிட நர்மதா அவர்கள் தொடர்பில் உள்ளார். வரும் திங்கள் எனது பதிவு வர உள்ளது என செய்தி அனுப்பியுள்ளார்.
My  support links

  1. face book maths link   https://www.facebook.com/TN-MATHS-Teachers-GROUP-123602074656636
  2. face book tamil link  https://www.facebook.com/தமிழ்-ஆசிரியர்கள்-1670867759818710
  3. face book science link https://www.facebook.com/Tamilnadu-Whatsapp-Science-Teachers-524766211021384
  4. face book science link https://www.facebook.com/groups/1217641388253192
  5. facebook social link https://www.facebook.com/Tamilnadu-whatsapp-social-group-teachers-840267422759335
  6. facebook English link  https://www.facebook.com/groups/1705055916380157
  7. face book English group https://www.facebook.com/Tamilnadu-Whatsapp-English-Teachers-859354740829912
  8. blogspot link http://tnteachersgroups.blogspot.in/
  9. youtube link     https://www.youtube.com/channel/UCWUPS8mGlr46aGVzmQDdkcQ
  10. whatsapp goups number 9789603874
  11. hike number 9655312665  and 9789603874
  12. somo number 9789603874
  13. telegram number 9655312665
  14. google drive  https://drive.google.com/file/d/0B8HRDFaYJD3-bE1JbHFIbFdxcE0/view?usp=sharing
  15. Whatsapp group evaluation  https://docs.google.com/spreadsheets/d/1mKxLA8WUCxUBL7IQ6dBD-7oflwsSaJ8moNuO01cp6B4/edit?usp=sharing
  16. Google drive link https://drive.google.com/drive/folders/0B8HRDFaYJD3-RVZSWlU5WjY2NlE