என் பெயர் கு.சிலம்பரசி
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சோழங்கநந்தம், தஞ்சாவூர் மாவட்டம் |
7. 03. 2008 அன்று
முதன் முதலில் ஊராட்சி ஒன்றிய அம்மாபேட்டை ரயிலடி பள்ளியில் பணியில் சேர்ந்தேன். அப்போது
என்னுடைய பணி க்காலம் பயணங்களாலேயே நிரம்பியிருந்தது. கும்பகோணம் முதல் அம்மாப்பேட்டை
செல்ல பள்ளி நேரத்தில் ஒரு பேருந்து மட்டுமே இருந்தது. அதனை பிடிக்க காலை 6.30மணிக்கு
கிளம்புவேன். இல்லையெனில் தஞ்சாவூர் வழியாக செல்வேன், இரண்டு மாதங்களுக்குப் பின்னர்
அம்மாபேட்டையிலேயே தங்கி இருந்தோம்அங்கு கை ரேகை பார்க்கும் சமுதாயத்தினர் இருந்தனர்.
அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு வருவதே இல்லை என்ற பிரச்சனை இருந்தது. அவர்கள் அனைவரும்
வெளியில் சென்று ஜோசியம் பார்க்க அந்தக் குழந்தைகள் சென்று விடுவார்கள். அப்பா அம்மா
இருவரும் ஆறு மாதங்கள் வெளியூர்களில் தங்கி ஜோசியம் பார்க்க செல்வார்கள். அதனால் அந்த
குழந்தைகள் பள்ளிவருகிறார்களா என யாரும் வீட்டில்
கவனிக்க மாட்டார்கள். குழந்தைகள் பாதி நாட்கள் பள்ளிக்கு வருவதே இல்லை என்ற பிரச்சனை
இருந்தது. நான் அம்மாபேட்ைடயில் தங்கியிருந்த வீடு அவர்களின் தெருவைத் தாண்டி இருந்தது
நான் நடந்து செல்வதால் அந்தக் குழந்தைகைளயும் நின்று ஒரு சேர அழைத்து செல்வேன். நிறைய
சொல்வித் தரவில்ைலடியன்றாலும் அந்த குழந்ைதகளுக்கு அடிப்படைத் தமிழையும், கணக்கையும்
சொல்லித் தருவேன்.இவ்வாறு அந்தப் பள்ளியில் ஓராண்டுகள் பணிப் புரிந்ேதன். அதன் பின்
மனமொத்த மாறுதலில் சோழங்கநத்தம் பள்ளிக்கு வந்தேன். பள்ளி, அமைதியான பள்ளிச் சூழல், ஆனால் ஒன்றியத்தின்
கடைசியில் இருந்ததால் அப்பள்ளியில் நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. அதுவே, அங்கு பிரச்சனையாக
இருந்தது. என் வீட்டில் இருந்து 4 கி.மீ தொலைவு என்பதால் என் பள்ளி அது தான் என முடிவு
செய்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல் மக்களும் என்னை அறிந்திருந்தனர். என்னால் இயன்ற
வரை மாணவர்களுக்கு நல்லெ எழுக்கங்களையும், நேர்மறை எண்ணங்களையும், உதவும் தன்மையும்
கொண்டவர்களாகவே அந்தக் குழந்ைதகள் வளர வேண்டும் என எண்ணியே செயல்படுவேன். தினமும் விடுகதையும்,
கதையும் சொல்வது என் இயல்பு. எங்கள் பள்ளிக்கான சுற்று சுவர் கட்டும் பணி முடிந்ததும்
பள்ளியை சுற்றி மரம் வளர்க்க எண்ணி நான் 5 தென்னை மரங்கள் வாங்கிக் கொடுத்தேன். பெற்றோர்கள்
வார்டு மெம்பர் எல்லார்கிட்டேயும் கேட்டு எங்கள் பள்ளியை சுற்றி 25 தென்னை மரங்கள்
வைத்தோம்.
மேலும் தென்னை
மரங்களுக்கு நீர் வசதி வேண்டி மரங்களுக்கு இடையே வாழை மரங்கள் வைத்து பராமரித்து வருகிறோம்.
அதிலிருந்து கிடைக்கும் பழங்கள் அனைத்தும்
மாணவர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பராமரித்து தருவது
குழந்தைகளின் பெற்றோர்களே ......
2012 ஆம் ஆண்டு
புதிய தலைமையாசிரியராய் பள்ளி வந்தவர் தான் நா.ரேவதி அவர்கள்.
அவர்களின் செயல்பாடுகளின்
மூலமே எங்கள் பள்ளி தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. எனக்கான முன்மாதிரியாக
திகழ்பவர்.
அவர் மூலமே ஒவ்வொரு
விழாவிற்கும் அனைவரையும் நேரில் சென்று அழைக்க ஆரம்பித்தோம். பெற்றோர்களுடன் மாணவர்களுடைய
கற்றல் திறன் குறித்து மாதம் ஒரு முறை நேரிலோ, தொலைப்பேசி வாயிலாகவோ கலந்துரையாடுவோம்.
1.குழந்தைகள் ஒவ்வொருவருக்கும்
தன் சுத்தம் குறித்து செயல்பாட்டுக்காக
Star Card, இதன் மூலம் எங்கள் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் தூங்மையுடனே வருகின்றனர்.
மேலும், கிழிந்த
ஆடைகள் இல்லாமல் இருப்பதற்காக பொத்தான்கள், ஊசிகள் அடங்கிய ப் பெட்டியும் உள்ளது .அதில் மாணவர்கள் தங்களுடைய ஆடைகளை தாங்களே தைத்துக் கொள்வர்.
2. எங்கள் பள்ளியில்
உள்ள மாணவர்கள் தாங்களாகவே படம் வரைந்து , கதைகள் கேட்டு தலைப்புகள் தந்து , செய்தித்தாள்களில் உள்ள கதைகள், துணுக்குகள் சித்திரங்கள், விடுகதைகள்,
சொற்களஞ்சியங்கள், சீன வடிவியல் உருவங்கள் , பாடல்கள் என சுமார் தற்போது 250 புத்தகங்கள்
எழுதியுள்ளனர். உருவாக்கியுள்ளனர்.
இந்த செயல் பாட்டின்
மூலம்| முதல் 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கதைப்புத்தகங்கள் உருவாக்கியுள்ளனர்.
அவர்களின் கற்பனைத்
திறன், வரைதல் திறன், எழுதும் திறன், கையெழுது என அனைத்தும் மாற்றம் டைந்துள்ளது.
3. எங்களது 1 வகுப்பு
மாணவர்கள் முயற்சியால் பள்ளியிலிருந்து சேகரிக்கப்பட்ட புங்கன், வேம்பு, நாவல் பழ விதைகளை
எங்க ஊர் ஆரம்பம் முதல் முடிவு வரை 200 இடங்களில் 7ங்கள் சமுதாய பங்களிப்புடன் விதைத்துள்ளோம்.
அவற்றில் சுமார்
50 மரங்கள் முளைத்து வளர்கின்றன. மீதமுள்ளவற்றிற்காக நாங்கள் எண்ணெய் Cover சேகரித்து
வருகிறோம். அடுத்த முறை விதைகளை விதைத்து பதியங்கள&க நட திட்டமிட்டுள்ளோம்
சென்ற வருடம்
,PB டபயிற்சிப் பெற்று எங்கள் பள்ளி மாணவர்கள்
DFC ல் சிறந்த 100 பள்ளிகளுள் ஒன்றாக தெளவு செய் பட் ட்டோம். அதுவே எங்களுக்கான
முதல்் அடையாளம்.
உமா மேம் வழிகாட்டுதலுடன்
நாங்க சென்ற வருடம் குஜராத் சென்று பரிசு வாங்கி வந்தோம்.
அப்போதுதான் தெரிந்து
கொண்டேன் உமா மேம் அவர்களின் தன்மைகளை....
உண்மையான ஆசிரியர்
, வழி நடத்துனர். முன் மாதிரிஎன்று அவரின் மூலமே நான் ICT எனும் பயிற்சிக்கு சென்றேன்.
கணிணி சார் மென்பொருள்களை என் மாணவர்களுக்கு கொண்டு செல்கிறேன். இவை அனைத்தும் என்று
டைய கைப்பேசி மூலமே ...
எளிய முறைகளை மாணவர்களுக்கு
கொண்டு செல்ல internet மூலம் முதல் நாள் பதிவிந க்கம் ெசய்து அடுத்த நாள் மாணவர்கள் குழுவாக பார்த்து கேட்டு கற்கி
இந்த வருடம்
PB ட பயிற்சிகா க கருத்தாளராக தஞ்சை மாவட்டத்திற்கு என்று 75 ஆசிரியர் களின் செயல்
திட்டங்களை பதிவேற்றி முடித்தோம். அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் உதவியோடு உமா மேம்
வழி காட்டுதலுடன் முடித்ேதன்.
மேலும் நிறைய கற்றுக்
கொண்டேன்.
இந்த வருடமும்
எங்கள் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட செயல் திட்டமானது சிறந்த 100 செயல் திட்டங்களுள்
ஒன்றாக தெரிவு செய்யப்பட் டது. இரண்டாவது முறையாக எங்கள் பள்ளி DF C ல் தெரிவு செய்யப்பட்டது
பள்ளியில் சேர்க்கை
என்பதை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களுடைய பள்ளியில் இரண்டு வருடங்களாக
மழலை வகுப்புகள் நடத்தி வருகிறோம். அவர்களுடைய ஆசிரியருக்கான ஊதியத்தினை நானும் என்
தலைைமயாசிரியரும் பகிர்ந்து கொள்கிறோம்
குப்பை கள் நாங்கள்
எதையும் ஒன்றும் இல்ைல என்பதை உணர்த்த பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து கலைப் பொருட்கள்,
வீட்டு உபயோக பொருட்களான ஒட்டைக் குச்சி, உண்டியல், பொம்மைகள், ஆக்டோபஸ் பொம்மை, எழுதுபொருள்
வைப்பான் , பிளாஸ்டிக் பாட்டில் மேல் பாக பூத் தோரணங்கள் என அவர் களுடைய கலைத்திறனை
வளர்த்து வருகிறோம்.
பிஸ்கட், சாக்லெட்
பேப்பர் குப்பைகளை மாலைகளாக மாற்றியிருக்கிறோம்
மாணவர்களின் வீடுகளில்
இருந்து சேகரிக்கப்பட்ட CD எனும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பையினைப்
Vயன்படுத்தி புத்தகங்கள் வைக்கும் Stand, பொம்மைகள் என உருவாக்கியிருக்கிறேMம்.
மக்கும் குப்பைகளான
பேப்பர்களைக் கொண்டு எங்களுக்கு தேவையான உடையாத ட்ரேக்கள் செய்து வைத்துள்ளோம்.
இவை அனைத்தும்
என்னுடைய 35 மாணவர்களின் கை வண்ணங்களே |
மேலும், இந்த வருடம்
நாங்கள் சுமார் 5000 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கழிவறை மேல் சுவரை எழுப்பி பிளாஸ்டிக்
பாட்டில் மேற்க் கூரை போட்டுள்ளோம்.
இவ்வாறு தேவையற்ற
வீணான பொருட்களைக் கொண்டே கழிவறை கட்ட இயலும். இப்படியேனும் கழிவறைக் கட்டுங்கள் என
எங்கள் கிராமம் முழுவதும் எங்கள் மாணவர்கள் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஊர் முழுவதும்
கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.இவ்வாறு 4,5 மாணவர்கள் எழுதிய கைெயழுத்து பிரதிகள்
300 .
இவ்வாறு எங்களால்
இயன்ற வரை எம்பள்ளி மாணவர்களை சமுதாய நல்விழுதுகளாக உருவாக்க முயற்சித்து வருகிறோம்
மாணவர்கள் தமிழ்
மற்றும் ஆங்கிலம் வாசிப்பிற்காக " சொல் உருவாக்கும் விளையாட்டு ", செய்திதாள்
வாசிப்பு , அவர்கள் உருவாக்கிய கதைகளை நாடகமாக்கி நடித்தல் போன்ற செயல்பாடுகள் வாரம்
1 முறை நடைபெறும்.
ஆங்கில வாசிப்பிற்காக
நாங்கள் பழைய AB ட Cards Spira | Binding செய்து சேகரித்து வைத்துள்ளோம். உணவு இடைவேளியில்
குழுப் பயிற்சியாகவும், தனியாகவும் எடுத்து
வருகின்றனர்.
ஓவியத்திறன் மேம்பட
நான் தினம் ஒரு சிறு கோட்டுப் படத்தினை வரைந்து காட்டி மாணவர்கள் வரையும் திறனை மேம்படுத்த
முயற்சிக்கிறேன்.
கடந்த இரு வருடங்களாக
எம் பள்ளி முதல், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி
அடைந்துள்ளனர்.
தலைமையாசிரியர்,
நான் இணைந்து பள்ளி உள்கட்டமைப்பிற்காக சுமார் 25,000 மதிப்பிலான எழுதுப் பலகைகள்,
benches வாங்கி மேம்படுத்தியுள்ளோம்.
ஆண்டு விழாவிற்கு
எங்கள் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வோம். ஆங்கில நாடகம்,
கதைக் கூறுதல், தனிநடிப்பு, நடனம், நிகழ்ச்சி தொகுப்பு என அனைத்தும் பள்ளி மாணவர்களே!
அதற்கnன செலவி…ற்கான தொகை மட்டுமே எங்களுடையது.
எங்களுடைய மாணவர்கள்
உதவும் தன்மை, நேர்மறை தன்மைகள் மேம்பட நேர்மைக்கடை
வைத்துள்ளோம். இவை அனைத்தும் அவர்களாகவே தேவையானப்
பொருட்களை எடுத்துக் கொண்டு பணத்தை உண்டியலில்
சேகரிக்கின்றனர். இதனை வைத்து மீண்டும் நோட்டு, பென்சில்,அழிப்பான் அைனத்னம் நாங்கள வாங்கி் வைத்து விடுவோம்.
இதில் பணம் குறைந்தாலும்,
நாங்கள் மாணவர்களிடம் கேட்டதில்லை.
எதுவும் இல்லையென
அவர்களது கற்றல் சிதையக் கூடாது என்பதே எங்களது எண்ணம்.
கீழே கிடக்கும்
பென்சில், பேனா ஆகியவற்றை pen Ci | CoIlector
box ல போட்டுவிடுவார்கள். தேவையானவர்கள் எடுத்து பயன்படுத்துவர்கள்
இதன் மூலம் அவர்களின்
உதவும் குணம் அதிகரிக்கும் என எண்ணுகிேறாம்.
இவை அனைத்தும்
இன்று அவர்கள் எப்படி சரியாகவோ? அல்லது தவறாகவோ செய்தாலும் நாளை அவர்கள் நல்லொழுக்கம்
மிக்கவர்களாக திகழ்வர். அதற்கான பயிற்சியாகவே நாங்கள் இந்த சின்ன செயல்பாடு களை செய்து வருகிறோம்.
என்னுடைய பள்ளி
செயல்பாடுகளை Video es, மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் JD லதா மேம் என்னை பாராட்டியது எனக்கான ஆசிரியருக்கான
அங்கீகாரமாக கருது கிறேன். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள்
_ சிலம்பரசி பாலமுருகன்
புதிய தலைமுறைக்கல்வி
நாளிதழில் என் பள்ளி செயல்பாடுகள் அனைத்தும் நவம்பர் 23 . 2015 நாளிதழில் வெளியிட்டு,
பள்ளி எனும் ஒரு பொது சொத்தினைத் தவிர வேறு ஒன்றையும் பெற்றிராத எங்கள் ஊர் சோழங்க
நத்தம் பள்ளி மாணவர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய என்னுடைய வழிகாட்டியாக திகழும்
மோ.கணேசன் சார் அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ேளன். அதற்கான புகைப் படங்களை
விரைவில் பதிவிடுகிறேன்.
கடந்த அக்டோபரில்
நடைபெற்ற ICT சார்ந்த கணினி பயிற்சிக்கு தஞ்சையின் கருத்தாளராக பங்கேற்று என்னால்
50 ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு நமது உமா மேம் மூலமே எனக்கு அளிக்கப்பட்டது.
வீட்டில் என் கணவரின்
ஒத்துழைப்புடனும்,
பள்ளியில் என்
தலைமையாசிரியர் மூலமும்,
என்னுடைய கல்வித்
துறையில் உமா மேம் மூலமும்,
மட்டுமே என்னால்
இந்த அளவிற்கேனும் செய்ய முடிகிறது.
No comments:
Post a Comment