Wednesday, 9 March 2016

திரு.ஆனந்தக்கண்ணன்

அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் வணக்கம்
என்னுடைய பெயர்
கோ அனந்தகண்ணன்
பட்டதாரி ஆசிரியர்
நி பள்ளி
முடியனூர்
தியாகதுருகம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்
பணியில் சேர்ந்த நாள் 
இடைநிலை ஆசிரியராக -14-12-2000
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு 02-08-2008
என்னுடைய கற்றல் கற்பித்தல் அனுபவங்களை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
பணியில் சேர்ந்த நாள்-14-12-2000
விழுப்பரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், தேப்பிரம்பட்டு, . .. நி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் அமர்ந்தேன்.நண்பர் திலீப்பும்  நானும் ஒரே ஒன்றியம்,மற்றும் ஒரே தேதியில் பணியாற்றினோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.
மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறனை மேம்படுத்தவும்,ஆங்கில இலக்கணத்தில் சிறந்த புலமை பெறவும் தினமும் மாலை 4.15முதல்5.30 வரை சிறப்பு ஆங்கில இலக்கண வகுப்பு நடத்தினேன்.எட்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் போது மாற்றுச் சான்றிதழுடன் மாணவர்கள் ஆங்கில இலக்கணம் குறித்து நான் கற்பித்த குறிப்பேடுடன் வெளியேறுமாறு பார்த்துக் கொண்டேன்
இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
என்னிடம் கல்வி பயின்ற மாணவர்களில் பெரும்பாலோனர் ஆசிரியர்களாக எனது ஒன்றியத்திலும் ,பக்கத்து ஒன்றியத்திலும் ,நான் கற்பித்த ஆங்கில இலக்கண குறிப்பேட்டுடன் பள்ளிக்கு செல்வதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.அன்றிலிருந்து இன்று வரை ஆங்கில இலக்கணத்தில் எனது மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து அனுப்பி வருகிறேன்.
பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் சென்ற நான் ,பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் ஏழைகளாகவும் ,மாணவர்கள் கல்வி கற்க தயாராக இருப்பதையும் உணர்ந்தேன்
ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் தணியாத ஆர்வம் எனக்கு.மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்த தினமும் மாலை பள்ளி முடிந்த பின் சிறப்பு வகுப்பு எடுத்தேன்.அப்போதைக்கு ,எனக்கு தெரிந்த கற்பித்தல் உத்திகள் மூலம் கற்பித்தேன்.மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கினேன்.பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் கல்வி அவசியத்தை உணர்த்த முயற்சி செய்தேன்.முதல் ஒராண்டில் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்த நான் 2001 ம் ஆண்டு விருப்ப மாறுதலில் விழப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், கொங்கராயபாளையம், . . .நி பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன்.
இங்கு தலைமை ஆசிரியரை சேர்த்து நாங்கள் மூவர் மட்டுமே.மாணவர்கள் தூய ஆடை உடுத்தாமலும் தன்சுத்தம் இல்லாமலும் இருந்ததை மாற்றி அமைத்தேன்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு மாடுகள் உள்ளே மேய்ந்தன
குடிமகன்கள் பள்ளியில் பள்ளி நேரத்திலேயே குடிப்பதுமாக இருந்தது
இதனால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஊராட்சி தலைவரை அணுகினேன்.பலனில்லை.ஆதலால் மாணவர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் சென்று ஆடாதடா செடியை வெட்டி பள்ளக்கு வேலி அமைத்தேன்.இடைஇடையே மரக்கன்றுகள் நட்டேன்.பாராமரிப்புப் பணியை மாணவர்களிடமே ஒப்படைத்தேன்
அர்விந்த் குப்தா அவர்களின் அறிவியல் சோதனைகள் மற்றும் விளையாட்டுகளை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி மாணவர்களே செயல்பாடுகளை வடிவைமைத்து அமைத்துள்ளனர்
2002
ல் நண்பர் முரளிதரன் அவர்கள் மாறுதலில் என்னுடன் இணைந்தார்.2002முதல் 2012(10ஆண்டுகள்) வரை இருவரும் ஒன்றாக பணியாற்றினோம்.இது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
2004 ல் மாறுதலி்ல் விருகாவூர் தொ பள்ளிக்கு வந்தேன்.இங்கு மாணவர்களுக்கு பாடத்திறனை எளிதி்ல் புரிய வைக்க மனதில் பதிய வைக்க TLM (கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்)மூலம் கற்பித்து வெற்றியடைந்தேன்.இதற்காக மாவட்ட அளவில் சிறந்த TLM பயன்பாட்டிற்காக விருது பெற்றேன்.2004 முதல் வட்டார வள மைய சிறப்பு கருத்தாளராகவும் பணியாற்றி வருகிறேன்
2012
ல் மாறுதலில் முடியனூர்  நி பள்ளியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகிறேன்.ஆரம்பம் முதலே எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணத்தி்ல் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறேன்.மெல்ல மலரும் மாணவர்களை அடையாளம்கண்டு ஆங்கிலத்தி்ல் சிறந்த அறிவு பெற சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்து கற்பித்து வருகிறேன்.
கற்பித்தலி்ல் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த ஆங்கில இலக்கணத்திற்கென DIGITAL CONTENT தயாரித்து கற்பித்து வருகிறேன்
கற்பித்தலி்ல் தகவல் தொழில் நுட்பத்தை(laptop,Desktop,LCD projector, Android phone with speakers,)பயன்படுத்தி கற்பித்து வருகிறேன்
2015 சனவரி ICT -SCERT க்கு மதிப்பற்குறிய உமா அக்கா, சித்ரா அக்கா, நண்பர் திலீப், மூலம் அறிமுகம் செய்யப்பட்டு இவர்களால் கடந்த ஒரு வருடமாக மெரூகூட்டப்பட்டு இருக்கிறேன்
SCERT க்கு Digital contents ஆங்கில இலக்கணத்தற்காக தயாரித்து கொடுத்து இருக்கிறேன்
அர்விந்த் குப்தா அவர்களின் அறிவியல் சோதனைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு translation and dubbing (70 contents) செய்து இருக்கிறேன்.
தற்போது வரை ஆங்கில பாடத்திற்கு அனைத்து பாடத்திற்கும் (6,7,8 வகுப்புகள்)digital contents தயாரித்து நடத்தி வருகிறேன்.இதன் மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர்
2008
ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று உதயமாம்பட்டு நி பள்ளியில் சேர்ந்தேன்.அங்கு இடைநிற்றல் மாணவர்களை கண்டு அதற்கான காரணத்தை ஆராய்ந்து பெற்றோருடன் பேசி பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில வைத்தேன்.ஆங்கிலத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக தினமும் மதியம் 1.15முதல்2.00 மணி வரையும் ,மாலை 4.15 முதல் 5.30 வரை ஆங்கில இலக்கண வகுப்பு நடத்தி மாணவர்களுக்கு ஆங்கலத்தல் ஆர்வத்தை ஏற்படுத்தி வெற்றியும் கண்டேன்.
2007
ல் BEST TEACHER in Crc level  மற்றும் BEST TEACHER IN block level(ஆங்கிலம் கற்பித்தலுக்காக) விருது பெற்றேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்காக பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள், மருத்துவர்கள் ,சும்மாடு இயக்கம் அனைவரும் சேர்ந்து 500 மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்காக பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள், மருத்துவர்கள் ,சும்மாடு இயக்கம் அனைவரும் சேர்ந்து 500 மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்
இதையே DFC 2015 ல் project based learning காக தயாரித்து கொடுத்தோம்
15
வருட ஆசிரியர் பணியில் ஆங்கில இலக்கணத்திற்கு முக்கியத்தவம் அதிகம் அளித்து கற்பித்து வருகிறேன்
எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் முன் ஆங்கில இலக்கணத்தில் அடிப்படை முதல் மேம்பட்ட இலக்கணம் வரை கற்பித்து நன்றாக தெரிந்த பின்னரே செல்கின்றனர்
ஆங்கிலத்தில் பேசவும் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் தற்போது மாணவர்களால் முடிகிறது
என்னுடைய 15 வருட கற்றல் கற்பித்தல் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்பபளித்த "உமா அக்கா" அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்
தற்போது ஆங்கில இலக்கணத்திற்கும் ஆறு ஏழு எட்டாம் வகுப்புகளில் உள்ள அனைத்து ஆங்கில பாடத்தற்கும் digital contents தயாரித்து வருகிறேன்
விரைவில் மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் அளிக்கும் விதத்தில் தயார் செய்து வருகிறேன்
கற்பித்தல் பணியில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற முனைப்பிலும்,மாணவர்களுக்கு கற்றலை இன்னும் எளிமையாக்கிட சிறந்த உத்திகளை பயன்படுத்தவும் தயாராகி வருகிறேன்


No comments:

Post a Comment