அனைவருக்கும் வணக்கம்.
நாட்டில் மாணாக்கர்களிடையே புதுமைகளை புகுத்தி , இன்றைய கால கட்டத்தில் தேவையானவற்றை விதைக்க பல்வேறு விதமான உத்திகளை பயன்படுத்த வேண்டி யுள்ளது. மாணாக்கர்களிடத்தில் நாட்டுப்பற்றை வளர்த்து , லஞ்சம் இல்லாத சமுதாயம் உருவாக நாம் புத்தக கல்வியோடு மட்டுமின்றி வாழ்க்கை தத்துவங்களையும், பொதுவாழ்வியல் பற்றியும் அறிவு புகட்ட வேண்டும். தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் எதையும் சிந்தித்து முடிவு எடுக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் வளர்க்க வேண்டும் , மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும். அன்றாட அறிவியல் வளர்ச்சிகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
புதுமையான சிந்தனைகளை மாணாக்கர்கள் யோசிக்க வேண்டும்.ஆசிரியர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி மனப்பான்மையையும் ஏன் ? எதற்கு? எப்படி போன்ற கேள்விகளை எழுப்ப மாணாக்கர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் …
நான் கண்ணபிரான், திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து..
குடும்ப சூழலால் பொறியியல் படிக்க அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் ,சேர இயலாமல் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்..ஆனாலும் செய்கின்ற பணியை சரியாக செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்த நான்..ஆசிரியப்பயிற்சி முடித்து 2008 ம் ஆண்டில் உடுமலை ஒன்றியம் பூளவாடி புதுநகரில் ஆசிரியராக பணியேற்றேன்..
உடுமலை தென்கோடி பகுதியில் இருந்த அந்த பள்ளியில் ஓராண்டு எப்படி பணியாற்றுவது…என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்ததும்.. ..2009 ல் இராகல்பாவி பள்ளிக்கு மாறுதல்.. கடந்த 6 ஆண்டுகளாக..ஈராசிரியர் பள்ளி என்றாலும் 50 மாணவர்களுக்கு குறைவில்லாமல் ஒவ்வொரு வருடமும்……ஒரு குக்கிராமாக இருப்பதால் மாணாக்கர்களின் எண்ணிக்கை அப்படியே.. நான் பள்ளிக்கு வந்தவுடன் பள்ளிக்கு தலைமையாசிரியர் சாவித்திரி அவர்களும் பணி மாறுதல் பெற்று இப்பள்ளிக்கு வருகை…
முதலில் பள்ளிக்கு நுழைந்தவுடன் எனக்கு காத்திருந்த அதிர்ச்சி..பள்ளியில் அடிப்படை வசதிகளில் குறைபாடு..பள்ளிக்கு கழிப்பறை இல்லாததால் மாணாக்கர்கள் அனைவரும் பள்ளிக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குள் தான் செல்வர்..காரணம் கழிப்பிடமானது மிகவும் பழுதடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை எஸ்.எஸ்.ஏ, மூலம் உடனடியாக நிதியுதவி பெற்று சுற்றுச்சுவருடன் கழிப்பறை மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக… ..தண்ணீர் வசதிக்காக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒரு மோட்டார் பெறப்பட்டு அனைத்து இடங்களிலும் தண்ணீர் வசதி BDO அலுவலகம் மூலம் பெறப்பட்ட நிதி மூலம் ..பின்னர் பழைய சத்துணவு கூடமானது மிகவும் பழுதடைந்து இருந்தது.ஒரு நாள் சமைக்கும் பொழுது அதில் மேற்கூரை இடிந்து உணவுக் குள்ளேயே விழுந்துவிட்டது. அன்று முதல் தொடர்ச்சியாக முயற்சி செய்து MLA நிதி மூலம் புதிதாக சத்துணவு கூடம்..பின்னாளில் சமையல் எரிவாயு இணைப்பு பெறப்பட்டு மாணாக்கர்களுக்கு உணவு சமைக்கப் படுகிறது. ஆகவே சுத்தமான குடிநீர் , உணவு, கழிப்பறை ஆகியவற்றை நிறைவு செய்தோம்..பின்னர் 1 மற்றும் 2 ம் வகுப்புக்கு மட்டும் வண்ணம் பூச்சு அடிக்க ஊரிலுள்ள ஒருவரை அணுகி அழகாக மாற்றினோம்..பின்னர் , மின்சார சார்பான பணிகளை முடித்து எல்லா வகுப்பறைகளுக்கும் SBI வங்கி மூலம் மின்விசிறிகள் பொருத்தப்பட்டது..
கற்பித்தலில் மாற்றம் வேண்டும் என்பதற்காக கணிப்பொறி இருந்தால் கற்பிக்க இன்னும் வசதியாகவும், கணினியே எப்படி இருக்கும் என்று தெரியாத மாணவர்களுக்கு புதுமையாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் அருகிலுள்ள பள்ளியிலிருந்து மடிக்கணினி வாங்கி
அதில் பாடப் பொருளை கற்பிக்க ஆரம்பித்தேன்..பின்னர் முகநூலில் பள்ளிக்கு ஒரு கணினி இருந்தால் எங்கள் கிராமத்துப் பள்ளி மாணவர்கள் பயில வசதியாக இருக்கும் என்ற பதிவை பதிவிட்டேன்… உடுமலை சேர்ந்தவரும் தற்போது புதுதில்லியில் வசிப்பவருமான சாஜகான் அவர்கள் தாங்களாகவே பள்ளிக்கு வந்து ஒரு கணினியை அன்பளிப்பாக அளித்தார்..( அதைப் பற்றிய குறிப்பை அவர் தற்போது வெளியிட்ட பயணக்காதலன் அல்லது சக்கரக்காலன் என்ற புத்தகத்தில் பள்ளியை பற்றி எழுதி உள்ளார்)..கற்றல் கற்பித்தல் மட்டுமில்லாது ஊர் மக்களையும், பெற்றோர்களையும் பள்ளிக்கு வர வைக்க வேண்டும் என்ற அடுத்த இலக்கிற்கு தயாரானோம்.. அதன் அடிப்படையில் பள்ளி உங்கள் பள்ளி.. கிராமம் நமது கிராமம்.. நலமான கிராமம் என்ற அடிப்படையில் சுற்றுப் புற சுகாதாரம், மாணாக்கர்களின் கல்வியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்த விடுமுறை நாட்களில் மாணாக்கர்களின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தேன்…அவர் தெருக்களில் இதுவரை சென்சஸ் வேலைக்கு மட்டுமே சென்று இருந்ததால் அவர்களின் எண்ண ஓட்டமும் அப்படியே இருந்தது. பின்னர் ஒவ்வொருவரிடமும் கல்வியின் முக்கியத்துவத்தையும் பெற்றோர்களின் பங்கேற்பை பற்றியும் எடுத்துச் சொன்னவுடன் ..ஆசிரியர் வேறு ஊரில் இருந்து நமது குழந்தைகளுக்காக நம்மிடம் பேசுகிறார் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்ததும் என் நோக்கம் .. நிறைவேறியது..மேலும் பள்ளியில் மாணாக்கர்களோடு , குழந்தைகளோடு ஒன்றி அவர்களை தட்டிக் கொடுத்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்த ஆரம்பித்ததும்..பெற்றோர்கள் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்தனர்..மாதம் ஒரு முறை கூட்டங்கள் கூட்டி பெற்றோர்களுக்கு பள்ளியின் செயல்பாடுகளை விளக்க ஆரம்பித்தேன்..பின்னர் அறிவியல் செயல்பாடுகளிலும் , தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உதவியினாலும் பல்வேறு செயல்பாடுகளை செய்து வந்தேன்.. அதன் அடிப்படையில் 2011 ல் இந்திய அரசின் , தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் VIPNET CLUB பற்றி அறிந்து பள்ளியில் கலிலியோ அறிவியல் கழகம் (VP-TN0014 இந்த பதிவெண் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் 24 அறிவியல் கழகங்களுள் ஒன்று மேலும் தகவலுக்கு ; www.vigyanprasar.gov.in ) ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மிகச் சிறப்பாக பள்ளி அளவில் மட்டுமல்லாது , உடுமலை பகுதியிலும் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம்..அறிவியல் மனப்பான்மையை மாணாக்கர்களிடம் வளர்க்கும் பொருட்டு அருகிலுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் சார் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் விஞ்ஞான் பிரச்சார் நடத்திய பல்வேறு பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு , அங்கு தரப்பட்ட பயிற்சிகளை உடுமலை பகுதியிலுள்ள பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் அறிவியல் சார் பயிற்சி பட்டறைகள் நடத்தி உள்ளேன்..
விஞ்ஞான் பிரச்சார் நடத்திய பல்வேறு பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டது.
1.
Transit of Venus – 2012 Trichy Planetorium ( இங்கு தான் அன்பழகன் ஆசிரியர் மற்றும் கிருஸ்ணவேணி ஆசிரியையை சந்தித்தது)
2.
Physics Olympiad Workshop in Mumbai – HBCSE
3.
ISON COMET awareness Workshop – IISC, Bangalore
4.
Activity Based Maths Workshop in Chennai and
Madurai
5.
VIPNET Club Meet in Coimbatore
6.
Model Rocketry Workshop in Birla Planetorium,
Chennai. (இப்பயிற்சியின் போது ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு சென்று வந்தது , உண்மையிலேயே வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று)
7.
Multi disciplinary workshop in Palakkad organized
by Vigyan Prasar.
8.
டெலஸ்கோப் தயாரித்தல் பயிற்சி-பஞ்சாப்
பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு அந்த பயிற்சிகளை உடுமலை பகுதிகளில் நடத்துவது எடுத்துக்காட்டாக வெள்ளி இடைமறிப்பு, ஐசான் வால்சத்திரம் சார் பயிற்சி பட்டறை, மாதிரி ஏவுகணை , மல்டி டிசிப்லினரி போன்ற பயிற்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளேன்.
அறிவியல் செயல்பாடுகளை செய்து பார்த்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் வாரமிருமுறை அறிவியல் சார் செயல்பாடுகள்: செய்து காண்பித்து அதற்கான காரணங்கள் எடுத்துக் கூறப்படும். விஞ்ஞான் பிரச்சார் மூலம் பள்ளிக்கு பல்வேறு அறிவியல்சார் புத்தகங்கள், சிடிக்கள், அறிவியல் உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. கணிதம், சார்பான சிடிக்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது… அதன்மூலம் பகல்நேர வானியல், எளிய அறிவியல் பரிசோதனைகள் ஆகியவற்றை சிறப்பாக கற்றுத் தர முடியும்..(விஞ்ஞான் பிரச்சார் பற்றியும் பள்ளி அறிவியல் கழகத்தை எவ்வாறு விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்துடன் இணைப்பது என்பது பற்றியும் இன்னொரு பதிவில் விளக்கமாக அளிக்கிறேன்..)
கற்பித்தலில் ..புதுமை..
கணினி மூலம் மாணக்கர்களுக்கு பாடப்பொருளை எளிமையாக கற்றுக் கொடுக்க பல்வேறு மென்பொருள்கள் மூலம் கற்பித்தல்..
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை எளிமையாக கற்க பல்வேறு செயலிகள் மூலம் TAB மற்றும்
SMARTPHONE மூலம் கற்பித்து வருகிறேன்..
எளிமையான கணக்குகள் செய்ய பல்வேறு செயலிகள் உள்ளன..இதன் மூலம் வண்ணப்படங்களும் , சரியாக செய்யும் மாணவர்களுக்கு star வழங்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்வாக கற்கின்றனர்,
விளையாட்டாகவும் அறிவியல் கருத்துக்களை கொண்டு செல்ல மேஜிக் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தானியத்திருவிழா , சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு , முக்கியமான தினங்கள் அனுசரித்தல், முக்கிய தலைவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுதல் , அறிவியல் விழிப்புணர்வு தினங்களை அனுசரித்தல், எடுத்துக்காட்டாக சுற்றுச்சூழல் தினம், தண்ணீர் தினம், பூமி தினம், ஹிரோசிமா நாகசாகி தினம், மனித உரிமைகள் தினம், தேசிய கல்வி தினம்,உலக எழுத்தறிவு தினம், உலக தாய்மொழி தினம், குழந்தைகள் தினம், தேசிய அறிவியல் தினம், தேசிய வாக்காளர் தினம், ராமானுஜம் பிறந்த தினம், பாரதியார் பிறந்த தினம், காமராசர் தினம், விவேகானந்தர் பிறந்த தினம், உலக எயிட்ஸ் தினம், விடுதலை வீரன் பகத்சிங் பிறந்த தினம் ஆகியன இதன் மூலம் மாணாக்கர்களிடையே அன்றைய நாளின் முக்கியத்துவத்தை மாணாக்கர்களிடயே கலந்துரையாட முடிகிறது.. தற்போது மாணாக்கர்களே அத்தனை நாட்களையும் வீட்டில் சென்று கலந்துரையாடியதை பெற்றோர் SMC கூட்டத்தில் பகிர்ந்து கொண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது..
உடுமலை வேளாண்துறை சார்பில் நடைபெற்ற இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் மாணாக்கர்களை ஈடுபடுத்தி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கியது.
மாணாக்கர்களுக்கு சமுதாய அக்கறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பூகம்பம், வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் அதை பற்றி எடுத்துக் கூறுவது. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் இறந்ததற்கு இராகல்பாவியில் அஞ்சலி செலுத்தப்பட்டது
களப்பயணமாக மாணாக்கர்கள் அறிவியல்சார் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் காவலூர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி உள்ள இடம்.
இரவு வான்நோக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வானவியல் சார்பான விழிப்புணர்வு மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
பேரிடை மேலாண்மை சமயங்களில் உதவும் முக்கிய தொலைதொடர்பு சாதனமான ஹாம் ரேடியோ சார்ந்த பயிற்சி வகுப்புகள் அறிவியல் கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்..
உடுமலை கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல்..
கோவை மண்டல அறிவியல் மையத்திற்கு எங்கள் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமின்றி அருகிலுள்ள அனைத்து பள்ளி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களும் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆசிரியர்களுக்கு மலையேற்றப்பயிற்சி , வனம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.
இவ்வளவு நாட்களையும் , தேசிய விழாக்களான குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவை மிகச் சிறப்பாக கொண்டாட காரணம் இந்த ஊரில் உள்ள இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் எந்த ஒரு விழாவானாலும் பரிசுகளை வழங்கி விழாக்களில் கலந்து கொண்டு இதுவரையும் உதவி செய்து கொண்டு உள்ளனர்.. ஆகவே இவர்களின் ஒத்துழைப்பே இவற்றையெல்லாம் செய்ய முக்கிய காரணம்…
ஆண்டு விழா - பள்ளி ஆரம்பித்தது முதல் ஆண்டு விழா என்றாலே என்னவென்று தெரியாத கிராம மக்களிடம் முதல் முறையாக 2013 ல் வீடு வீடாக சென்று அனைவரையும் அழைத்து…ஊரின் மத்தியில் மேடை அமைத்து பல்வேறு சிறப்பு விருந்தினர்களை அழைத்து ஆரம்பித்தோம்.. அன்று ஊரே விழாக்கோலம் பூண்டது போல இருக்கும் பள்ளியில் படித்துவிட்டு மேல்நிலை வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களும் பங்கேற்று விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் ..
கிராம மக்களிடம் ஆண்டு விழாவை நோக்கமாக கொண்டு பல்வேறு கருத்துக்களை உட்செலுத்த முயன்றேன்..
2013
ம் ஆண்டில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு கல்லூரி மாணவர்கள் நாடகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..2014 ல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..2015 ல் நாட்டுப்புற பாடல்கள் மூலம் கல்வி, இயற்கை பாதுகாப்பு, போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு…
பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் பள்ளிக்கு உதவிப்பொருட்கள், நூலக அலமாரிகள் புத்தகங்கள், வழங்கப்பட்டு உள்ளன..
பொங்கல் விழா 4 வருடங்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டு நமது பாரம்பரிய பண்டிகைகளின் முக்கியத்துவத்தை மாணாக்கர்களுக்கு எடுத்துக் கூறப்படும்..வாருங்கள் இந்த வருட பொங்கலுக்கு எங்கள் பள்ளிக்கு சர்க்கரைப் பொங்கல் தயார்…
அடுத்த மாதத்தில் smart class ஆரம்பிக்க தயாராகி வருகிறோம்…என்னுடைய அனைத்து பணிகளுக்கும் உறுதுணையாக இருந்து நான் பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிகளில் கலந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் தலைமையாசிரியர் ..என்னை இதுபோன்ற ஆசிரியர்களிடம் கை பிடித்து அழைத்துச் சென்று இன்று பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வரும் அனைவருக்கும் இப்பகிர்வை அளிக்க தூண்டிய உமா அக்கா அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கும்…உங்களிடம் கற்றுக் கொண்டு இருக்கிற மாணவன் என்ற முறையில் ..மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு…அரசுப் பள்ளிகளை வளப்படுத்துவோம்…..என்று கூறி இது முடிவல்ல..தொடக்கம்..நன்றி….
CLICK FOLLOWING LINKS TO DOWNLOAD OUR VIDEOS