கனகராஜ்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆலத்திவச்சினம்பாளையம்,
காரமடை ஒன்றியம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
மாணவர் நலனில் அக்கறை காட்டும் பள்ளிகள் தழைத்தோங்கும் என்கின்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்…
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் தனித்திறன் பெற்றிருப்பதும் புதுமையான பள்ளி நிகழ்வுகளில் தன்னலமற்று செயல்படுவதும் அனைத்து ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியும் குழுச்செயல்பாடும்தான் பள்ளிக்கு அடித்தளமாகும்.
விசாலமான மூன்று ALM வகுப்பறைகள் டைல்ஸ் தரையுடன் (vertified marbonite tiles)
அழகிய மூன்று SABL வகுப்பறைகள் மார்பிள்ஸ் (marbles) தரையுடன்.
மாணவர்களின் படைப்புகளை பரைசாற்றும் அறிவிப்புப் பலகைகள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா இரண்டு.
ஒவ்வொரு வகுப்பிற்கும் இரு மின்விசிறிகள்.
மரத்தால் செய்யப்பட்ட அருமையான செயல்வழிக்கற்றல் அட்டைகள் வைப்பதற்கான இழுப்பறைகள் (rack of woodern drawers)
ஐந்து வட்டமேசைகள் ஒரு வகுப்பிற்கு
கணிப்பொறி அறை – மூன்று மடிக்கணிணிகள், இரு மேசைக்கணிணிகள்.
Smart class room : LCD Projector & home theatre, video lessons, power point teaching,
அறிவியல் சோதனைச் சாலை,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது ( RO purified Drinking Water).
சுகாதாரமான மதிய சத்துணவு ( சத்துணவு பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மேலங்கி வழங்கியுள்ளோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மதிய உணவு சமைக்கப்படுகிறது).
இளையோர் செஞ்சிலுவை சங்கம் – ஊர்ப் பொதுமக்களுடன் இணைந்து joy of giving day கொண்டாடுதல். பள்ளிப் பழைய கட்டிடத்தில் தங்கியிருந்த குருவிகளுக்கு கூடுகள் அமைத்து சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடினோம். மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையமாக செயல்பட்டு நடுநிலைமையோடு சிறப்பாக நடத்துதல். மகளிர் சங்க நிர்வாகிகளையும் சாதனை பெண்மணிகளையும் அழைத்துவந்து மகளிர் தினம் கொண்டாடினோம். அருகில் உள்ள மாறுத்திறனாளிகளுடன் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரித்தல். வறுமை ஒழிப்பு தினம், நட்பு தினம் (friendship day) கடைபிடித்தல்.
சமீபத்தில் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் மறைவின் போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் வாழ்க்கை வராலாற்று புகைப்படக் கண்காட்சியை நடத்தினோம்.
சுற்றுச்சூழல் மன்றம் – வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த காணுயிர் புகைப்படக் கண்காட்சி ஓசை அமைப்புடன் இணைந்து, பள்ளி மூலிகைத் தோட்டம் ( அறிய வகை மூலிகைகள் நொச்சி, தூதுவளை, கற்பூரவல்லி, பிரண்டை, கீழாநெல்லி முதலியன), சிறிய அளவிலான பள்ளிக் காய்கறித் தோட்டம் (இங்கு விளையும் காய்கறிகள் சத்துணவுடன் இணைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது), சர்வதேச வன நாள், தண்ணீர் தினம் முதலியவற்றை கொண்டாடுகிறோம்.
உடல்நல மன்றம் – குழந்தைகள் நல மருத்துவர்களை அழைத்துவந்து மருத்துவ முகாம்கள் நடத்துதல், பல் மருத்துவ முகாம் மற்றும் பற்பசை, துலக்கி ஆகியன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற பெண் மருத்துவர்களை அழைத்துவந்து வளரிளம் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் நடத்தினோம். அறிய வகை பழங்கள் கண்காட்சி, அறிய வகை மலர்கள் கண்காட்சி மற்றும் மலைவாழ் மலர்கள், காய்கறிகள் கண்காட்சி நடத்தினோம். டெங்கு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தினோம். உணவு தினம், உலக மாசுபாடு தினம் கொண்டாடுதல்.
சதுரங்க மன்றம் – சிறப்பு வல்லுனர்களை அழைத்துவந்து தொடர்ச்சியான பயிற்சிகள் அளித்தல் மற்றும் போட்டிகளில் பங்கேற்றல், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
அறிவியல் மன்றம் – சர்வதேச அறிவியல் வார விழா ( ஒருவாரம் முழுதும் கொண்டாடினோம். அருகிலுள்ள பள்ளி மாணவ மணிகள் மற்றும் ஆசிரியர்கள் வந்து கண்காட்சிகளை பார்வையிட்டு பயன்பெற்றனர்), தேசிய அறிவியல் தினம், அறிவியல் கண்காட்சி, புவி வெப்பமயமாதல் பேனர் கண்காட்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று இளம் விஞ்ஞானிகள் பட்டம் பெற்றுள்ளோம். தொலைநோக்கி செய்யும் முறை குறித்த பயிற்சி. INSPIRE கண்காட்சியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் மற்றும் மாநில அளவிலான பங்கேற்பு. ஓசோன் தினம் கொண்டாடுதல். உண்மையான மனித எலும்புகளையும் மண்டையோட்டையும் கொண்டு செயல்முறை விளக்கமளித்தல்.
பட்டிமன்றம் குழு – பொது மேடைகளில் பட்டிமன்றங்கள் நிகழ்த்துதல், ஒன்றிய அளவிலான பட்டிமன்ற போட்டியில் முதலிடம்.
வினாடி வினா குழு – தொடர்ச்சியான வெற்றிகளைக் குவிக்கும் குழு. ஒன்றிய , மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பு, சிறப்பிடம், இரண்டாமிடம், முதலிடம் பெற்றுள்ளோம். தேசிய திறனறிதல் தேர்வில் இரு தேர்ச்சி.
தமிழ் இலக்கிய மன்றம் – ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, பாடல், கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகளில் தொடர் பங்கேற்பு மற்றும் வெற்றிகளைக் குவித்துள்ளோம். கதை சொல்லும் முறையைச் செம்மைப்படுத்தியதன் விளைவாக எண்ணற்ற மாணவ மாணவிகள் கதை சொல்லிகளாக உருவாயுள்ளனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பு விருந்தினர்களுடன் ஆண்டுவிழாவை சீரும் சிறப்புமாக நடத்துதல்.
மாணவர் பாராளுமன்றம் – முறையாக தேர்தல் அறிவித்தல், மனுதாக்கல், சின்னம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, பிரச்சாரப் பொதுக்கூட்டம், வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துதல், வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி கூப்பன், வாக்குச்சீட்டில் முத்திரையிட்டு வாக்களித்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பதவி ஏற்பு விழா, மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் கடமைகள் உரிமைகள் அறிவித்தல், பாராளுமன்றம் செயல்படுதல் (பள்ளியில் உதாரணம் : நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை நூலகத் துறை போன்றன). தேர்தல் மற்றும் பாராளுமன்றச்செயல்பாடுகள் முழுவதுமாக மாணவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. பள்ளி அன்றாட நிர்வாகம் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. முழு விபரம் இணைப்பில் தருகிறோம்.
கடந்த சுதந்திர தின விழாவில் நாம் இதுவரைக் கண்டிராத இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு மற்றும் தியாகிகளின் கருப்பு வெள்ளை புகைப்படங்களின் கண்காட்சி நடத்தினோம். அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து கண்டுகளித்தனர்.
மேலும் புத்தகத் திருவிழாக்கள், அறிவியல் மையங்கள், அருங்காட்சியகங்கள், அறிவியல் திருவிழாக்கள், ஆகியவற்றில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளோம்.
Phonetic method, thamizam.com இல் உள்ள பயிற்சிக் கையேடுகள் அட்டைகள், மற்றும் மெதுவாகக் கற்போருக்கு தனிக்கவனம் செலுத்தி சிறப்பாகக் கையாண்டதன் மூலம் தமிழ், ஆங்கில வாசிப்பு, கணித ஆடிப்படைத் திறன்களில் சிறப்பினை எட்டி வருகிறோம். ( முழு விபரம் இணைப்பில் தருகிறோம்).
ச. புவனேஸ்வரி தலைமை ஆசிரியை
ப.வெண்ணிலா ஆங்கில பட்டதாரி ஆசிரியை
சி. காயத்திரி இடைநிலை ஆசிரியை
ஆகிய மூன்று பேர் ரோட்டரி சங்கத்தால் சிறந்த ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டு விருது பெற்றுள்ளனர்.
ரா. கனகராஜ் இடைநிலை ஆசிரியர்,
ப.ப.கனகராஜ் இடைநிலை ஆசிரியர்
ஆகிய இருவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் சிறந்த ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுளனர்..
எங்கள் பள்ளிக்கு அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம் இயக்கத்தால் மாநில அளவிலான சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத்த் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறந்த பள்ளிக்கான விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
நன்றி…
ஆலத்திவச்சினம்பாளையம்,
காரமடை ஒன்றியம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
மாணவர் நலனில் அக்கறை காட்டும் பள்ளிகள் தழைத்தோங்கும் என்கின்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்…
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் தனித்திறன் பெற்றிருப்பதும் புதுமையான பள்ளி நிகழ்வுகளில் தன்னலமற்று செயல்படுவதும் அனைத்து ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியும் குழுச்செயல்பாடும்தான் பள்ளிக்கு அடித்தளமாகும்.
விசாலமான மூன்று ALM வகுப்பறைகள் டைல்ஸ் தரையுடன் (vertified marbonite tiles)
அழகிய மூன்று SABL வகுப்பறைகள் மார்பிள்ஸ் (marbles) தரையுடன்.
மாணவர்களின் படைப்புகளை பரைசாற்றும் அறிவிப்புப் பலகைகள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா இரண்டு.
ஒவ்வொரு வகுப்பிற்கும் இரு மின்விசிறிகள்.
மரத்தால் செய்யப்பட்ட அருமையான செயல்வழிக்கற்றல் அட்டைகள் வைப்பதற்கான இழுப்பறைகள் (rack of woodern drawers)
ஐந்து வட்டமேசைகள் ஒரு வகுப்பிற்கு
கணிப்பொறி அறை – மூன்று மடிக்கணிணிகள், இரு மேசைக்கணிணிகள்.
Smart class room : LCD Projector & home theatre, video lessons, power point teaching,
அறிவியல் சோதனைச் சாலை,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது ( RO purified Drinking Water).
சுகாதாரமான மதிய சத்துணவு ( சத்துணவு பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மேலங்கி வழங்கியுள்ளோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மதிய உணவு சமைக்கப்படுகிறது).
இளையோர் செஞ்சிலுவை சங்கம் – ஊர்ப் பொதுமக்களுடன் இணைந்து joy of giving day கொண்டாடுதல். பள்ளிப் பழைய கட்டிடத்தில் தங்கியிருந்த குருவிகளுக்கு கூடுகள் அமைத்து சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடினோம். மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையமாக செயல்பட்டு நடுநிலைமையோடு சிறப்பாக நடத்துதல். மகளிர் சங்க நிர்வாகிகளையும் சாதனை பெண்மணிகளையும் அழைத்துவந்து மகளிர் தினம் கொண்டாடினோம். அருகில் உள்ள மாறுத்திறனாளிகளுடன் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரித்தல். வறுமை ஒழிப்பு தினம், நட்பு தினம் (friendship day) கடைபிடித்தல்.
சமீபத்தில் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் மறைவின் போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் வாழ்க்கை வராலாற்று புகைப்படக் கண்காட்சியை நடத்தினோம்.
சுற்றுச்சூழல் மன்றம் – வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த காணுயிர் புகைப்படக் கண்காட்சி ஓசை அமைப்புடன் இணைந்து, பள்ளி மூலிகைத் தோட்டம் ( அறிய வகை மூலிகைகள் நொச்சி, தூதுவளை, கற்பூரவல்லி, பிரண்டை, கீழாநெல்லி முதலியன), சிறிய அளவிலான பள்ளிக் காய்கறித் தோட்டம் (இங்கு விளையும் காய்கறிகள் சத்துணவுடன் இணைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது), சர்வதேச வன நாள், தண்ணீர் தினம் முதலியவற்றை கொண்டாடுகிறோம்.
உடல்நல மன்றம் – குழந்தைகள் நல மருத்துவர்களை அழைத்துவந்து மருத்துவ முகாம்கள் நடத்துதல், பல் மருத்துவ முகாம் மற்றும் பற்பசை, துலக்கி ஆகியன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற பெண் மருத்துவர்களை அழைத்துவந்து வளரிளம் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் நடத்தினோம். அறிய வகை பழங்கள் கண்காட்சி, அறிய வகை மலர்கள் கண்காட்சி மற்றும் மலைவாழ் மலர்கள், காய்கறிகள் கண்காட்சி நடத்தினோம். டெங்கு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தினோம். உணவு தினம், உலக மாசுபாடு தினம் கொண்டாடுதல்.
சதுரங்க மன்றம் – சிறப்பு வல்லுனர்களை அழைத்துவந்து தொடர்ச்சியான பயிற்சிகள் அளித்தல் மற்றும் போட்டிகளில் பங்கேற்றல், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
அறிவியல் மன்றம் – சர்வதேச அறிவியல் வார விழா ( ஒருவாரம் முழுதும் கொண்டாடினோம். அருகிலுள்ள பள்ளி மாணவ மணிகள் மற்றும் ஆசிரியர்கள் வந்து கண்காட்சிகளை பார்வையிட்டு பயன்பெற்றனர்), தேசிய அறிவியல் தினம், அறிவியல் கண்காட்சி, புவி வெப்பமயமாதல் பேனர் கண்காட்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று இளம் விஞ்ஞானிகள் பட்டம் பெற்றுள்ளோம். தொலைநோக்கி செய்யும் முறை குறித்த பயிற்சி. INSPIRE கண்காட்சியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் மற்றும் மாநில அளவிலான பங்கேற்பு. ஓசோன் தினம் கொண்டாடுதல். உண்மையான மனித எலும்புகளையும் மண்டையோட்டையும் கொண்டு செயல்முறை விளக்கமளித்தல்.
பட்டிமன்றம் குழு – பொது மேடைகளில் பட்டிமன்றங்கள் நிகழ்த்துதல், ஒன்றிய அளவிலான பட்டிமன்ற போட்டியில் முதலிடம்.
வினாடி வினா குழு – தொடர்ச்சியான வெற்றிகளைக் குவிக்கும் குழு. ஒன்றிய , மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பு, சிறப்பிடம், இரண்டாமிடம், முதலிடம் பெற்றுள்ளோம். தேசிய திறனறிதல் தேர்வில் இரு தேர்ச்சி.
தமிழ் இலக்கிய மன்றம் – ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, பாடல், கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகளில் தொடர் பங்கேற்பு மற்றும் வெற்றிகளைக் குவித்துள்ளோம். கதை சொல்லும் முறையைச் செம்மைப்படுத்தியதன் விளைவாக எண்ணற்ற மாணவ மாணவிகள் கதை சொல்லிகளாக உருவாயுள்ளனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பு விருந்தினர்களுடன் ஆண்டுவிழாவை சீரும் சிறப்புமாக நடத்துதல்.
மாணவர் பாராளுமன்றம் – முறையாக தேர்தல் அறிவித்தல், மனுதாக்கல், சின்னம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, பிரச்சாரப் பொதுக்கூட்டம், வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துதல், வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி கூப்பன், வாக்குச்சீட்டில் முத்திரையிட்டு வாக்களித்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பதவி ஏற்பு விழா, மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் கடமைகள் உரிமைகள் அறிவித்தல், பாராளுமன்றம் செயல்படுதல் (பள்ளியில் உதாரணம் : நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை நூலகத் துறை போன்றன). தேர்தல் மற்றும் பாராளுமன்றச்செயல்பாடுகள் முழுவதுமாக மாணவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. பள்ளி அன்றாட நிர்வாகம் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. முழு விபரம் இணைப்பில் தருகிறோம்.
கடந்த சுதந்திர தின விழாவில் நாம் இதுவரைக் கண்டிராத இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு மற்றும் தியாகிகளின் கருப்பு வெள்ளை புகைப்படங்களின் கண்காட்சி நடத்தினோம். அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து கண்டுகளித்தனர்.
மேலும் புத்தகத் திருவிழாக்கள், அறிவியல் மையங்கள், அருங்காட்சியகங்கள், அறிவியல் திருவிழாக்கள், ஆகியவற்றில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளோம்.
Phonetic method, thamizam.com இல் உள்ள பயிற்சிக் கையேடுகள் அட்டைகள், மற்றும் மெதுவாகக் கற்போருக்கு தனிக்கவனம் செலுத்தி சிறப்பாகக் கையாண்டதன் மூலம் தமிழ், ஆங்கில வாசிப்பு, கணித ஆடிப்படைத் திறன்களில் சிறப்பினை எட்டி வருகிறோம். ( முழு விபரம் இணைப்பில் தருகிறோம்).
ச. புவனேஸ்வரி தலைமை ஆசிரியை
ப.வெண்ணிலா ஆங்கில பட்டதாரி ஆசிரியை
சி. காயத்திரி இடைநிலை ஆசிரியை
ஆகிய மூன்று பேர் ரோட்டரி சங்கத்தால் சிறந்த ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டு விருது பெற்றுள்ளனர்.
ரா. கனகராஜ் இடைநிலை ஆசிரியர்,
ப.ப.கனகராஜ் இடைநிலை ஆசிரியர்
ஆகிய இருவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் சிறந்த ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுளனர்..
எங்கள் பள்ளிக்கு அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம் இயக்கத்தால் மாநில அளவிலான சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத்த் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறந்த பள்ளிக்கான விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
நன்றி…
No comments:
Post a Comment