கிருஷ்ணவேணி
அனைவருக்கும் வணக்கம்.ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி சின்னமுத்தூர்.வெள்ளகோவில் ஒன்றியம்.திருப்பூர் மாவட்டதில் இருந்து கிருஷ்ணவேணி.எனது பணிக்காலம் வெள்ளிவிழா ஆண்டுகள்.இருப்பினும் இன்னும் சரியான ஆசிரியராய் என்னை வளர்த்துக் கொள்ள இயலவில்லை.முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.நான் பணிறேற்று பள்ளி சென்ற முதல் நாள் எனக்கு எதுவுமே தெரியவில்லை.முதல் வகுப்பு.ஒரே அழுகை சத்தம்.எனது அன்றைய தலைமையாசிரியர் பாடல் சில சொல்லி கொடுங்கள் .எழுந்து நின்று விளையாட்டாக சிலவற்றைக் கற்றுக் கொடுங்கள் என்றார்.நானோ விழித்தேன்.புரிந்து கொண்டு எனக்கும் சேர்தே பயிற்றுவித்தார்.பின்னர் பல பள்ளிகளுக்கு மாறுதல் ஆனால் முதல் வகுப்பையே பெரும்பாலும் கேட்டுப் பெற்றுக்கொண்டேன்.நானாகவே பலவகையிலும் கற்றுக்கொடுக்க சிந்தனை செய்து கற்றுக்கொடுத்தேன்.அதுவே எனக்கு மிக மிகப் பிடித்ததாய் இருந்த்து.அடுத்து L.N.பட்டி எனும் பள்ளி.கஸ்தூரிபாய் எனும் பெயருக்கேற்றாற் போல் அற்புமான ஆசிரியை.20 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பள்ளியை மெட்ரிக் பள்ளிபோல் நடத்தியவர்.8.30 மணிக்கு அவர் வந்துவிடுவார்.அவர் தான் எனது இன்றைக்கு வரையிலான மாதிரி ஆசிரியை.பின்னர் இராசாத்தாவலசு தலைமையாசிரியர் இராமசாமி.எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.ஆனால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடிந்த பள்ளி.இங்குதான் அவரின் கால் முறிந்துவிட பொறுப்பில் நான் த.ஆ பணியாற்றி நல்ல பெயரையும் பெற முடிந்தது.அடுத்து தென்னங்கரைப்பாளையம் பள்ளி சிவசாமி எனும் த.ஆ. அவரிடம் பணியாற்றிய காலம் என் பொற்காலம்.எனது பாசமிகு தந்தையாய் கற்றுக் கொடுத்தவர்.அவரிடம் இருந்துதான் நம்மிடம் பணியாற்றும் ஆசிரியர்களை நம் உறவாய் எண்ணிப் பழகினால் போதும் சுலபமாய் நம்முடன் இணைந்து நம் எதிர்பார்ப்புக்கு மேலாய் பணியாற்றுவார்கள் என்பதை புரிந்து கொண்டு இன்றுவரை இவரிடம் கற்றதைத்தான் என் ஆசிரியர்களிடமும் நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளேன்.அமராவதிபாளையம் முதன்முதலாய் பதவி உயர்வில் 2000 ஆம் ஆண்டு அருமையான பள்ளி.இப்பள்ளி இன்றும் மறக்க இயலா அழகிய சூழலில் நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அருமையான பள்ளி.எல்லா வீட்டிலிருந்தும் இன்றும் நல்ல காரியங்களுக்கு அழைப்பு வரும்.என்மீது அத்தனை மரியாதை இவ்வூர் மக்களுக்கு.35 ஆண்டுகளில் இல்லாத ஆண்டுவிழாவினை இவ்வூரில் தான் முதன்முதலாய் நடத்திக்காட்டினேன்.அதன் விளைவுதான் அத்தனை மரியாதை.அன்று எனக்கு உதவி செய்து என்னுடன் பணியாற்றிய அன்னம் எனும் ஆசிரியையின் மாபெரும் முயற்சி அது.அடுத்து முத்தூர் தரம் உயர்த்தப்பட்டு 7 ஆம் வகுப்பு வரை செயல் பட்டுக் கொண்டிருந்த நிலையில் மாறுதல் பெற்று டவுன் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில் சென்ற பள்ளி.1 வருடம் 3 மாதங்கள் மட்டுமே ஆனால் என்னால் இன்றுவரை நினைவில் இருந்து மீண்டு வரியலாப் பள்ளி.தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் கட்ட இடமில்லா சூழலில் திரும்பச்செலுத்தப்பட்ட பணத்தை பெற்று சீரணி அரங்கம் என்ற ஒன்றை பள்ளிக்காக இரவு 11 மணிவரை காத்திருந்து அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பேசி இடித்து கட்டப்பட்ட கட்டிடம் பாதி நிலையிலேயே மின்கம்பம் இடையூறு செய்ய 25000 ரூபாயைக் கட்டி மின்கம்பத்தை மாற்றி அதன் பின்னர் கட்டி முடிக்கும் தருவாயில் பதவி உயர்வு நடுநிலைப்பள்ளிக்கு...
இந்தப் பள்ளியிலேயே பதவி உயர்வு பெற்றுக் கொள்ளலாம் நீங்கள் எனமுந்தைய நாள் வரை சொல்லி அதை நம்பிச் சென்ற எனக்கு 10 மணிக்கு பள்ளியின் பெயர் எழுதச் சொன்னபோது நான் பணியில் மூத்தவர் எனவே நீங்கள் சின்னமுத்தூர் செல்லுங்கள்.நான் முத்தூர் எழுதுகிறேன்.என்ற போது எனது மனநிலை இடி விழுந்தாற்போல் இருந்த்து.அழுது அழுது கண்கள் வீங்கியதுதான் மிச்சம்.பல மணிநேரம் அலுவலர்கள் சமாதானம்.யார்யாரோ பேசியும் பயனில்லை.5.11 2007
சின்னமுத்தூர் பள்ளியின் தலைமையாசிரியை.எனது சொந்த ஊர் எந்த சூழ்நிலையிலும் சொந்த ஊரில் பணியாற்றக் கூடாது என்ற எண்ணத்தில் பல கி.மீ அப்பால் வேலை செய்த நான் விதியின் வலிமையால் இப்பள்ளியிலேயே பணியேற்க வேண்டிய நிர்பந்தம்.பணியேற்ற முதல் நாள் பள்ளியின் சூழலே என்னை பயமுறுத்தியது.கழிப்பறை என்னை கலங்கடித்தது.மீண்டும் எப்படி இப்பள்ளியை உயிர்த்தெழச்செய்வது எனப்புரியாமல் கற்பித்தல் பணியை மட்டும் சரியாகச் செய்யலாம்.வேறெதுவும் இனி நம்மால் முடியாது என ஆறுமாத காலம் அமைதியாய் சென்ற பள்ளி அதற்கும் என்னை விட்டுவைக்கவில்லை.மழையில் ஒரு நாள் அனைத்து ABL அட்டைகளும் நனைந்து போக புத்தமும் அப்போது இல்லா நிலையில் எதை எப்படிக் கற்பிப்பது எனப் புரியாமல் அந்த மனநிலை சொல்லில் விவரிக்க இயலாது.10 ஆண்டுகளாய் அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும் பள்ளிக் கூரை பழுதடைந்த்தை ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு எழுதிய கடிதம் பார்வையிட வந்த அதிகாரிகளின் பார்வைக் குறிப்பு என அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டு பலரிடம் கேட்ட போது அனுமதி அத்தனை சுலபமாய் பெற இயலாது எனப் புரிந்த்து.75 ஆண்டு பழைய கட்டிடம்.குழந்தைகள் வெறுமனே பள்ளி வந்து சென்றதை பார்க்கச் சகியாமல் அனைத்தையும் நான் இடித்து தரைமட்டமாக்கி விட்டேன்.அதன்பின்னர் தான் சொல்லொணாத்துயரங்களை நான் அனுபவித்தேன்.ஏனெனில் அது அன்று தி.மு.க அமைச்சர் சொந்த ஊர் என்பதால் எதிர்தரப்பினர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிவிட தேர்தல் சாவடி என்பதால் விசாரணைகள் தினமும் நடந்து என்னை அத்துணைபேரும் முடிந்தே போய்விட்டதாய் நினைத்தார்கள் ஏன் நானும் அப்படித்தான் எண்ணிணேன்.அதன்பிறகுSSA வில் மூன்று வகுப்பறைக் கட்டிடம் 10 இலட்சம் ரூபாய் செலவில் பெற்று கட்டினேன்.கட்டிடம் கட்டி முடிக்கும் வரையில் எந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தார் வகுப்புகளுக்கு குழந்தைகள் வந்தனரா என்று கூடத் தெரியாது.மரத்தடி மகளிர் குழுக்கட்டிடம் பெருமாள் கோவில் என திசைக் குரு வகுப்பு.பார்வையிட வந்த அதிகாரிகளின் அசிங்கமான பேச்சுக்கள் எனக்குள் விரக்தியே மிஞ்சியது.பள்ளிச்சூழல் புதிய கட்டிட அமைப்பால் கொஞ்சம் அழகாய் மாறியது.பின்னர் கல்வித்தரத்தை உயர்த்த காலை முதல் மாலை வரை 6 மணி வரை கூட வகுப்புகள் நடைபெற்றது.ஒரே ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஐந்து பாடங்களையும் இருவர் பிரித்து நடத்த வேண்டிய நிலையிலேயே இப்படி சனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள் ஒரே ஆண்டில் அலுவலர்கள் கல்வித்தரம் கண்டு வியந்து போற்றி பேசும் அளவுக்கு SSA நடத்திய ஐந்து போட்டிகளில் நான்கில் முதலிடமும் ஒன்றில் இரண்டாமிடமும் பெற்றதோடு மாவட்ட அளவில் இருவர் முதல் இடம் பிடித்து 5000 ரூபாய் பரிசை தட்டி வர அனைவரின் பார்வையும் பள்ளியின் மேல்... அப்போதுதான் அன்றைய இயக்கிநர் திரு.சங்கர் ஐயா அவர்களை எனது பள்ளி ஆண்டுவிழாவிற்கு அழைக்க சென்று பள்ளியின் குறுந்தகடினை கொடுக்க அதைப் பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.அவரால் ஆண்டுவிழாவிற்கு வருகை தர இயலாவிட்டாலும் திரு.கார்மேகம் ஐயா அவர்களும் திரு.பொன்குமார் ஐயா அவர்களும் வருகை புரிந்து சிறப்பித்தார்.அப்போதுதான் ஒரு புரவலர் கூட இல்லாத பள்ளி ஒரே வாரத்தில் 200 புரவலர்களைக் கொண்ட பள்ளியாக மாறியது.அந்த ஆண்டுவிழாவிற்கான முழுத்தொகையும் 56000 ரூபாயும் நான் தனிஒருத்தியாகவே செய்தேன்.அதன்பின்னர் SSA வில் இருந்துமட்டும் 35 இலட்ச ரூபாய் பெற்று வகுப்பறை சுற்றுச்சுவர் கழிப்பறை என அனைத்தும் இரண்டிரண்டாகவே இரு வேறு இடங்களில் பள்ளி செயல்படுவதால் பெற்று கட்டி முடித்தேன்.மாணவரகளின் தேவைகளை முதலில் நிறைவேற்ற உறுதிபூண்டு அவர்கள் அமர நாற்காலி மேசை ஆறுகுழுக்களுக்கும் என ஐந்து வகுப்புகளுக்கும் 55000 ரூபாய் மதிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றதோடு ஆரம்ப அனைத்து வகுப்புகளுக்கும் சுவரில் ஓவியம் 1,50000 இலட்சம் மதிப்பில் வரைந்தேனஆர் 2 இலட்ச மதிப்பீடுஇப்படி ஏறத்தாழ 13 இலட்ச ரூபாய் நன்கொடை எப்படி என்னை நம்பிக் ஐஒடுத்தார்கள்.இன்றும் பிரமித்துப் போய் நிற்கிறேன்.எவரிடமும் பணமாய் கேட்டதில்லை.பொருளாகவே கேட்டிருக்கிறேன்.பணமாய் கொடுத்தவர்களும் ஏராளம்.இப்போது ஐ.சி.டி என அனைவரும் சொல்ல எதுவுமே புரியாமல் ஒரு பயிற்சிக்கு செல்ல ஆசிர் சாரின் பேச்சால் கவரப்பட்டு வந்த்தும்மூன்று இலட்ச ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டது தான் குளிர சாதன வசதியுடன் கூடிய அழகிய வகுப்பறை அதையும் ஆசிர் சார் அவர்களின் கையாலே திறப்பு விழா செய்ய கருணைதாஸ் நேசமணி அன்பழகன் அவர்களின் சில ஆலோசனைகளோடு எம் பள்ளி ஆசிரியர்
செல்வப்பிகாஷ் ,பரிமளம் இவர்களின் அயராத முயற்சியால் கணினி யில் புதியதொரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.வெளி மாநில வெளிநாட்டு குழந்தைகளோடும் உரையாடுவதோடு அவர்களின் கல்வி முறையையும் அறிந்து நாங்களும் பின்பற்ற உள்ளோம்.ஒவ்வொரு ஆசிரியர்களிடம் உள்ள தனித்திறமையையும் மாணவர்களிடம் சென்றடைய செய்துள்ளோம்.மஞ்சுளா ஆசிரியை புதுமைகளைப் புகுத்தி கற்பிப்பவர்.ஜூலியட் ஓவியம் வரையக்கற்றுக்கொடுக்கவும் சத்தியவதி நடனம் கற்றுக் கொடுக்க,கலைச்செல்வி ஆங்கிலத்தில் உரையாடக் கற்றுக்கொடுக்க தீபா ஆசிரியை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுக்கான செயல்களில் மாணவர்கள் இப்போதிருந்தே செயல்பட ஊக்குவிக்கிறார்.இப்போது நான் பெற்றுள்ள அனைத்து விருதுகளும் இப்படிப்பட்ட தன்னலம் சிறிதுமற்ற அர்ப்பணிப்போடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களால் தான்.தினமலர் போன்ற கட்டுரைப் போட்டி முதல் அனைத்துப் போட்டிகளிலும் எம் மாணவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.நூலகம் சுமார்10000 நூல்களுடன் இவை தவிர மாதந்தோறும் வெளிவரும் magic pot ,chanthamama,junior chanthamama,wisdom,tell me why gogulam , போன்ற புத்தகங்கள் வாசிப்பதோடு அதில் உள்ள பகுதிகளின் சிந்தனை கேள்விகளுக்கும் பதில் தயாரிக்கிறார்கள்.பாரதியின் பெரும்பாலான கவிதைகள் எம் மழலைகளின் மொழியில்...இப்படி பலரின் கவிதைகளும் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழாவிற்கு அழைத்துச்சென்று உண்டியல் வாங்கி சேமித்து அதில் இருந்து புத்தகம் இல்லந்தோறும் நூலகம் என இப்போதிருந்தே வாசிக்க வாசித்ததை பகிர வாகர்வட்டம் பள்ளியிலேயே நடத்த படித்ததைப் பகிர என வாய்ப்பு அளித்து..இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டுவிழா ,இடையில் சிறிய விழாவாக அறிவியல் தின விழா ,இலக்கியமன்ற விழா என,இந்த ஆண்டு வரலாற்று விழா அடுத்த மாதம்,
மூன்றாண்டுக்கு முன்னரே பொதிகை தொலைக்காட்சியில் காண்போம் கற்போம் நிகழ்வில் எம்பள்ளி ஒளிபரப்பு செய்யப்பட்டது தற்போது வேந்தன் 290...
2012 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதினை தொடக்கக் கல்வித்துறையின் மூலம் கல்வித்துறைச்செயலர்,கல்விஅமைச்சர் அவர்களின் கரங்களால் பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.2013 ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என பல விருதுகள்...
செல்வப்பிகாஷ் ,பரிமளம் இவர்களின் அயராத முயற்சியால் கணினி யில் புதியதொரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.வெளி மாநில வெளிநாட்டு குழந்தைகளோடும் உரையாடுவதோடு அவர்களின் கல்வி முறையையும் அறிந்து நாங்களும் பின்பற்ற உள்ளோம்.ஒவ்வொரு ஆசிரியர்களிடம் உள்ள தனித்திறமையையும் மாணவர்களிடம் சென்றடைய செய்துள்ளோம்.மஞ்சுளா ஆசிரியை புதுமைகளைப் புகுத்தி கற்பிப்பவர்.ஜூலியட் ஓவியம் வரையக்கற்றுக்கொடுக்கவும் சத்தியவதி நடனம் கற்றுக் கொடுக்க,கலைச்செல்வி ஆங்கிலத்தில் உரையாடக் கற்றுக்கொடுக்க தீபா ஆசிரியை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுக்கான செயல்களில் மாணவர்கள் இப்போதிருந்தே செயல்பட ஊக்குவிக்கிறார்.இப்போது நான் பெற்றுள்ள அனைத்து விருதுகளும் இப்படிப்பட்ட தன்னலம் சிறிதுமற்ற அர்ப்பணிப்போடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களால் தான்.தினமலர் போன்ற கட்டுரைப் போட்டி முதல் அனைத்துப் போட்டிகளிலும் எம் மாணவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.நூலகம் சுமார்10000 நூல்களுடன் இவை தவிர மாதந்தோறும் வெளிவரும் magic pot ,chanthamama,junior chanthamama,wisdom,tell me why gogulam , போன்ற புத்தகங்கள் வாசிப்பதோடு அதில் உள்ள பகுதிகளின் சிந்தனை கேள்விகளுக்கும் பதில் தயாரிக்கிறார்கள்.பாரதியின் பெரும்பாலான கவிதைகள் எம் மழலைகளின் மொழியில்...இப்படி பலரின் கவிதைகளும் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழாவிற்கு அழைத்துச்சென்று உண்டியல் வாங்கி சேமித்து அதில் இருந்து புத்தகம் இல்லந்தோறும் நூலகம் என இப்போதிருந்தே வாசிக்க வாசித்ததை பகிர வாகர்வட்டம் பள்ளியிலேயே நடத்த படித்ததைப் பகிர என வாய்ப்பு அளித்து..இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டுவிழா ,இடையில் சிறிய விழாவாக அறிவியல் தின விழா ,இலக்கியமன்ற விழா என,இந்த ஆண்டு வரலாற்று விழா அடுத்த மாதம்,
மூன்றாண்டுக்கு முன்னரே பொதிகை தொலைக்காட்சியில் காண்போம் கற்போம் நிகழ்வில் எம்பள்ளி ஒளிபரப்பு செய்யப்பட்டது தற்போது வேந்தன் 290...
2012 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதினை தொடக்கக் கல்வித்துறையின் மூலம் கல்வித்துறைச்செயலர்,கல்விஅமைச்சர் அவர்களின் கரங்களால் பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.2013 ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என பல விருதுகள்...
இத்தனை விருகளையும் கிடைத்த பாராட்டுக்களையும் என்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய என் ஆசிரியர் திரு.கணேசன் ஐயா அவர்களின் மலர்பாதங்களுக்கு சமர்ப்பணம்.
என் பணிகளுக்கு ஒரு போதும் குறுக்கிடாமல் இன்றுவரை எவ்வளவு ஊதியம் பெறுகிறேன் என தெரியாமல் 2 வயதில் தந்தையை இழந்த்து முதல் தந்தையாய் தாயாய் படிக்க வைத்து ஆளாக்கி தான் படிக்காவிட்டாலும் என்னை M.Phil வரை படிக்க வற்புறுத்தி என் வளர்ச்சிக்கு பின்னால் நின்று மகிழும் எனது கணவரையும் வணங்கி... என் உள்ளத்தில் உள்ளவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்திட வாய்ப்பளித்தமைக்கு
நன்றி கூறி விடை பெறுகிறேன் தவறுதலாய் ஏதேனும் பதிவிருப்பின் மன்னிக்கவும் தோழர்களே!
என் பணிகளுக்கு ஒரு போதும் குறுக்கிடாமல் இன்றுவரை எவ்வளவு ஊதியம் பெறுகிறேன் என தெரியாமல் 2 வயதில் தந்தையை இழந்த்து முதல் தந்தையாய் தாயாய் படிக்க வைத்து ஆளாக்கி தான் படிக்காவிட்டாலும் என்னை M.Phil வரை படிக்க வற்புறுத்தி என் வளர்ச்சிக்கு பின்னால் நின்று மகிழும் எனது கணவரையும் வணங்கி... என் உள்ளத்தில் உள்ளவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்திட வாய்ப்பளித்தமைக்கு
நன்றி கூறி விடை பெறுகிறேன் தவறுதலாய் ஏதேனும் பதிவிருப்பின் மன்னிக்கவும் தோழர்களே!
No comments:
Post a Comment